பச்சையப்பன் கல்லூரி
பச்சையப்பன் கல்லூரி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள ஓர் மிகத் தொன்மையான கல்லூரி ஆகும். இக்கல்லூரி பச்சையப்ப முதலியார் இறப்பிற்கு பிறகு, அவரது உயிலில் வரைந்திருந்தபடி, அறச்செயல்களுக்காக அவர் ஒதுக்கியிருந்த தொகையினைக் கொண்டு பிராட்வேயிலிருந்த பச்சையப்பன் நடுவ நிறுவனத்தால் (Pachaiyappa's Central Institution) சனவரி 1,1842 அன்று நிறுவப்பட்டது. இது தென்னிந்தியாவில் பிரித்தானியரின் நிதியுதவியின்றி நிறுவப்பட்ட முதல் சைவ மத நிலையமாக விளங்கியது.1889ஆம் ஆண்டு கல்லூரியாக தகுதி பெற்றது. 1947 ஆம் ஆண்டுவரை இந்திய மாணவர்களை மட்டுமே சேர்த்து வந்தது. இன்று அனைத்து மாநில, மாவட்ட மாணவர்களும் இந்தக் கல்லூரியல் படித்து வருகிறார்கள்.

வரலாறு
பச்சையப்ப முதலியார் காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய பாளையத்தில், 1754 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை காஞ்சிபுரம் விசுவநாத முதலியார் மற்றும் தாய் பூச்சி அம்மாள் ஆவார். பச்சையப்பரின் பிறப்பிற்கு சில தினங்களுக்கு முன்பே அவரின் தந்தை காலமாகி விட்டார். பின்பு அவரின் தாயார் ஐந்தே வயது நிரம்பிய பச்சையப்பரையும் அவரின் இரு சகோதரிகளையம் அழைத்துக்கொண்டு, சென்னையை அடைந்து, சாமி மேஸ்திரி தெருவில் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் ஆங்கில வணிகர்களுக்கு மொழி பெயர்ப்பாளராய் விளங்கிய நாராயணப் பிள்ளை என்ற செல்வரிடம் அடைக்கலம் புகுந்தார். நாராயணப்பிள்ளை அவரை உடன் பிறந்தாளைப் போல் போற்றி, பச்சையப்பருக்கு கணக்கு, கடிதத் தொடர்பு போன்றவற்றில் பயிற்சியும் ஆங்கில அறிவைப் பெறவும் உதவினார். பச்சையப்பர் தமது தன்னம்பிக்கை கொண்டே 22 வயதில் பெரும் நிதியாளராகவும் வணிகமேதையாகவும் திகழ்ந்தார். அவர் தமது சொத்துக்கள் அனைத்தையும் இறைவனுக்கும், மனிதத்திற்கும் அர்ப்பணித்தார். அவர் 1794ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று கும்பகோணத்தில் இருந்தபோது தான் தமது மரணம் குறித்து ஓர் முன்னறிவிப்பைப் பெற்று தமது உயிலை எழுதினார். அவரது உயில் வாசகம்:
“dedicating, with full knowledge and hearty resignation, all his wealth, in the absence of any male issue, to the sacred service of Siva and Vishnu and to certain charities at various temples and places of pilgrimage, to the erection of religious edifies, to bounties to the poor, to seminaries of Sanskrit learning and to other objects of general benevolence”.
அவரது உயிலைப் பராமரித்தவர்கள் சரியான முறையில் அதனை செலவழிக்காததால் உயர்நீதிமன்றம் தானே அறக்கட்டளை நிதியான மூன்றரை இலக்கம் ரூபாய் பெறுமான சொத்துக்களை அகப்படுத்திக் கொண்ட பின்னர் ஏழரை இலக்கமாக உயர்ந்தது. மூன்றரை இலக்கத்தை கோவில் திருப்பணிகளுக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ளதில் அவர் பெயரில் கல்விச்சேவைகள் துவங்க பயன்படுத்தியது.[1]
கல்லூரி முதல்வர்கள்
- பேரா.ஜான் ஆடம் 1884-1894
- பேரா.எரிக் ட்ரூ 1906-1912
- பேரா.ஜே.சி.ரோல்லோ எசோ 1912-1918
- பேரா.சி.எல்.ரென் 1920-1921
- பேரா.எம்.ரத்னசுவாமி (முதல் இந்திய முதல்வர்) 1921-1927
- பேரா.கே.சின்னத்தம்பி பிள்ளை 1927-1935
- பேரா.பி.என்.சீனிவாசாச்சாரி 1935 -1938
- பேரா.டி.எஸ்.சர்மா 1938-1941
- பேரா.வி.திருவேங்கடசாமி 1941-1942
- பேரா.பி.வி.நாராயணசாமி நாயுடு 1942-1947
- பேரா.ஆர்.கிருஷ்ணமூர்த்தி 1947-1961
- பேரா.சி.டி.ராஜேஸ்வரன் 1961-1963
- பேரா.டி.எஸ்.சங்கரநாராயணப் பிள்ளை 1963-1965
- பேரா.முனைவர்.சுப.சண்முகநாதன் 1966 -1982
- பேரா.எம்.கே.தசரதன் 1982-1984
- பேரா.டி.ஆர்.ராமச்சந்திரன் 19984-1985
- பேரா.ஜி.நாகலிங்கம் 1985-1986
- பேரா.என்.பி.கல்யாணம் 1986-1987
- பேரா.ஜி.நாகலிங்கம் 1987-1989
- முனைவர்.ஏ.பி.கமலாகர ராவ் 1989-1994
- முனைவர்.ஆர்.எஸ்.ராகவன் 1995-1999
- முனைவர்.ஆர்.பாலகிருஷ்ணன் 1999-2002
- முனைவர்.பி.ஆர்.ரங்கசாமி 2002-2003
- முனைவர்.டி.வி.ராஜேந்திரன் 2005-2008
கல்வித்திட்டங்கள்
- பட்டப் படிப்புகள்:
- இளங்கலை(B.A):வரலாறு, பொருளியல், மெய்யியல், தமிழ், ஆங்கிலம், கணிதம்.
- இளங்கலை அறிவியல் (B.Sc.): இயற்பியல், வேதியியல், தாவரவியல், நுண்ணுயிரியல், உயிரியல், கணினி அறிவியல்
- இளங்கலை வணிகம் (B.Com.): நிறுவன செயலர்
- இளங்கலை கணினி செயல்பாடு: (B.C.A.)
- 'பின் வருவன இரு பாலருக்கும்
பட்டமேற்படிப்புகள்':
- முதுகலை (M.A.): வரலாறு,பொருளியல்,மெய்யியல்,தமிழ்,ஆங்கிலம்}
- முதுகலை அறிவியல் (M.Sc.):நுண்ணுயிரியல் செயல்பாடு, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்
- முதுகலை வணிகம் (M.Com)
- முதுகலை கணினி அறிவியல் (M.C.S.)
- முதுகலை கணினி செயல்பாடு (M.C.A.)
- ஆய்வுத் திட்டங்கள்:
- M.Phil. : வரலாறு,பொருளியல்,மெய்யியல்,தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,வேதியியல்,தாவரவியல்,உயிரியல், வணிகவியல்
- Ph.D. :வரலாறு,பொருளியல்,மெய்யியல்,தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,வேதியியல்,தாவரவியல்,உயிரியல், வணிகவியல்
பரவலாக அறியப்பட்ட முன்னாள் மாணவர்கள்
இந்தத் தொன்மையான கல்லூரியிலிருந்து பல முன்னாள் மாணவர்கள் அறிஞர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் பொது சேவை அதிகாரிகளாகவும், வணிகப்பெருமக்களாகவும் புகழ் பெற்றுள்ளனர். முன்னாள் மாணவர்களின் முழுமையான பட்டியல் அவர்களது தளத்தில் உள்ளது[3]. அவர்களில் சிலர்:
- சீனிவாச இராமானுஜன்: கணிதவியலாளர்
- பம்மல் சம்பந்த முதலியார்: தமிழ் நாடக ஆசிரியர்
- மு. வரதராசன் இக்கல்லூரியின் தமிழ்துறைத்தலைவர்;சென்னை பல்கலைக் கழக தமிழ்துறைத்தலைவர்;மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்.
- கா. ந. அண்ணாதுரை: முன்னாள்தமிழக முதல்வர், 1967-69
- மாடபூஷி அனந்தசயனம் அய்யங்கார், மக்களவை தலைவர்.
- நாவலர் நெடுஞ்செழியன்: அரசியல்வாதி
- பேரா. க. அன்பழகன்: அரசியல்வாதி
- ஈ. வி. கே. சம்பத்: அரசியல்வாதி மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர்களில் ஒருவர்.
- சி. விஜயராகவாச்சாரியார்: இந்திய தேசிய காங்கிசின் முன்னாள் தலைவர்
- நாடக காவலர் ஆர்.எஸ்.மனோகர்: முன்னாள் நாடக மற்றும் திரைப்பட நடிகர்
- ஏ. எம். ராஜா: முன்னாள் திரைப்பாடகர் மற்றும் இசையமைப்பாளர்
- காசு பிரம்மானந்த ரெட்டி: முன்னாள் ஆந்திர முதல்வர், 1964 - 71
- கே. சி. ரெட்டி: பழைய மைசூர் மாநிலத்தின் முதல் முதலமைச்சர்
- வைரமுத்து: கவிஞர் மற்றும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்
- சி. ஆர். ரங்காச்சாரி: முன்னாள் துடுப்பாட்ட வீரர், இந்திய துடுப்பாட்ட அணி உறுப்பினர்
- முரசொலி மாறன்: அரசியல்வாதி
- ராபின் சிங்: முன்னாள் துடுப்பாட்ட வீரர்
- பரத் ரெட்டி: முன்னாள் துடுப்பாட்ட வீரர்
- மாமிடிபுடி வெங்கடரங்கைய்யா-வரலாற்றாசிரியர்
- முனைவர்.பி.ஆர்.ரங்கசாமி - வரலாற்றாசிரியர் மற்றும் முன்னாள் கல்லூரி முதல்வர்
- டி. இமான்- இசையமைப்பாளர்
- தாபி தர்மா ராவ்: தெலுங்கு இதழாளர் மற்றும் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.
- நா. முத்துக்குமார்-கவிஞர் மற்றும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்
- கபிலன்-தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்
மேற்கோள்கள்
- Barlow,Glyn:"The Story of Madras",Project Gutenberg, EBook #26621:Release date=செப்டம்பர் 14,2008
- http://www.pachaiyappaschennai.net/principals.htm
- Pachaiyappa's College web site