சாது
சாது என்பதற்கு தன்னறிவு, இறை பக்தி, தியாகம், வைராக்கியம் மற்றும் சத்தியம், அகிம்சை, தவம், எளிமை ஆகிய நற்குணங்களில், பிறருக்கு முன்மாதிரியாக வாழ்பவர் என இந்து சமய சாத்திரங்கள் கூறுகிறது.
பெயர்க் காரணம்
சாது எனும் சொல், சமசுகிருத மொழியில் சத்தியம் எனப்படும் சத் என்ற வினைச் சொல்லிருந்து பெறப்பட்டுள்ளது. இலத்தீன் மொழியில் சாங்டஸ் (sanctus) என்பதற்கு புனிதமான (sacred) என்று பொருள் படும்.[1]
சாது எனும் சொல்லின் பயன்பாடுகள்
- 15 – 16ஆம் நூற்றாண்டின் பக்தி இயக்க காலத்தில் வட இந்தியாவில் செயல்பட்ட இந்து சமய ஆன்மீகவாதிகளான, கபீர், ரவிதாசர், புரந்தரதாசர், ஜெயதேவர், துக்காராம், குருநானக், துளசிதாசர், நாம்தேவ், ஏகநாதர், ஞானேஷ்வர் [2] போன்ற சாதுக்களை வடமொழியில் சந்த் என அழைக்கப்பட்டனர்.
- சீக்கிய குருமார்களையும், சீக்கிய வேத நூலான குரு கிரந்த சாகிப்பை பயிற்றுவிக்கும் சீக்கிய ஆன்மீக அறிஞர்களையும் சாதுக்கள் என்றே அழைக்கப்பட்டனர்.
- தற்காலத்தில் வட இந்திய ஆன்மிகத் தலைவர்களையும், மடாதிபதிகளையும், குருமார்களையும், அகோரிகளையும்[3] சாதுக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- William Pinch (1996), Peasants and Monks in British India, University of California Press, ISBN 978-0520200616, page 181 footnote 3
- SAINT DNYANESHWAR (Jnanadeva)
ஆதார நூற்பட்டியல்
- Hawley, John Stratton, தொகுப்பாசிரியர். (1987), Saints and Virtues, University of California Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520061637, https://books.google.com/books?id=RGv2wOUl0pMC
- Schomer, Karine; McLeod, W. H., தொகுப்பாசிரியர்கள். (1987), The Sants: Studies in a Devotional Tradition of India, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120802773, https://books.google.com/books?id=OkKhOivXrhgC
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.