கண்ணூர்

கண்ணூர் (ஆங்கிலம்:Kannur), இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மேலும் இது கண்ணூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இவ்வூரில் நடைபெறும் தெய்யாட்டம் மிகவும் புகழ்பெற்றது. இந்நகரில் இந்தியக் கைத்தறி தொழில்நுட்பக் கழகம் செயல்படுகிறது.

கண்ணூர்

കണ്ണൂര്

  நகராட்சி  
வரைபடம்:கண்ணூர், இந்தியா
கண்ணூர்
இருப்பிடம்: கண்ணூர்
, கேரளா , இந்தியா
அமைவிடம் 11°52′08″N 75°21′20″E
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் கண்ணூர்
ஆளுநர் ப. சதாசிவம்[1]
முதலமைச்சர் பினராயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி கண்ணூர்
மக்கள் தொகை 63,797 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.kannur.nic.in

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 63,795 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். கண்ணூர் மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 83% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கண்ணூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பார்க்கத் தகுந்த இடங்கள்

  • முழப்பிலங்காடு கடற்கரை
  • செயிண்ட். ஆஞ்சலோ கோட்டை
  • பையம்பலம் கடற்கரை
  • ஆரக்கல் அருங்காட்சியகம்
  • கண்ணூர் கண்டோன்மென்ட்
  • கண்ணூர் கலங்கரை விளக்கம்
  • மீன்குண்ணு கடற்கரை
  • மாப்பிள்ளா கடற்கரை

ஆதாரங்கள்

  1. http://india.gov.in/govt/governor.php
  2. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
  3. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.