கண்டோர்
கண்டோர் அகத்திணை மாந்தர்களில் வாயில்களாக வருபவர். [1] தலைவன் தலைவியைக் கொண்டுதலைக்கழிந்த இடத்து வழியில் பார்த்தவர்கள் இந்தக் கண்டோர். சென்றுவந்தவர்கள், எதிர் வந்தவர்கள் எனக் கண்டோர் பலர் ஆதலின் இந்த வாயில்-மாந்தர் பன்மையால் கூறப்பட்டுள்ளனர்.
- தலைவனும் தலைவியும் செல்லும் வழியும், காலமும், நலமாக உள்ளன எனத் தாயைத் தேற்றுவர். தலைவன் ஊரை நெருங்கிவிட்டனர் என்பர். தலைவன் தலைவியருக்கு நல்லன கூறுவர். தாயின் கவலை பற்றிக் கூறித் தடுப்பதும் உண்டு. – இவை இவர்களின் பங்கு. [2]
- நற்றாய் தன் மகளைப் பார்த்தீர்களா என இவர்களிடம் புலம்புவாள். [3]
- தோழி கண்டோர் சொன்னதாகத் தாயைத் தேற்றுவான். [4]
நற்றிணை 2, குறுந்தொகை 7, ஐங்குறுநூறு 188 முதலான பாடல்களைக் கண்டோர் கூற்றுக்கு எடுத்துக்காட்டுகளாக உரையாசிரியர் இளம்பூரணர் குறிப்பிட்டுள்ளார்.
அடிக்குறிப்பு
- தொல்காப்பியம் கற்பியல் 52.
- தொல்காப்பியம் அகத்திணையியல் 43
- தொல்காப்பியம் அகத்திணையில் 39
- தொல்காப்பியம் அகத்திணையில் 42
காண்க
தொகு | அகத்திணை மாந்தர் |
---|---|
அகத்திணைத் தலைவர்கள் | தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
|
அகத்திணை வாயில்கள் | தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர்
|
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.