ஏழு சகோதரி மாநிலங்கள்

ஏழு சகோதரி மாநிலங்கள் அல்லது வடகிழக்கு இந்தியா (Seven Sister States) என்பது இந்தியாவின் வடகிழக்கில் உள்ள எட்டு சிறிய மாநிலங்களைக் குறிக்கும். அவையாவன: அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா ,சிக்கிம் மற்றும் திரிபுரா.[1][2]

வடகிழக்கு இந்தியா
நாடுஇந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்வடகிழக்கு இந்திய மாநிலங்கள்
அசாம்
அருணாச்சலப் பிரதேசம்
மணிப்பூர்
மேகாலயா
மிசோரம்
நாகாலாந்து
சிக்கிம்
திரிபுரா
பெரிய நகரம்குவகாத்தி
பரப்பளவு
  மொத்தம்262
மக்கள்தொகை (இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011)
  மொத்தம்45
  அடர்த்தி170
நேர வலயம்இந்திய சீர் நேரம்
அலுவல் மொழிகள்அசாமிய
போடோ
காரோ
தாமாங்
காசி
கொக்பரோக்
மணிப்புரி
நேபாளி
இந்தி
ஆங்கிலம்
வங்காளி
இந்தியாவின் ஏழு சகோதரி மாநிலங்கள்

பண்பாடு, சமூக மற்றும் அரசியல் தளங்களில் இப்பதம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வேழு மாநிலங்களும் “வட கிழக்கு மாநிலங்கள்” என்றும் கூட்டாக வழங்கப்படுகின்றன. இந்தியாவின் மக்கள்தொகையில் 3.8% இங்கு வசிக்கின்றனர்.

வடகிழக்கு இந்திய மாநிலங்களின் உருவாக்கம்

தற்கால வடகிழக்கு இந்தியவை ஆண்ட அகோம் பேரரசு மற்றும் மணிப்பூர் இராச்சியங்களை, 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பர்மியர்கள் கைப்பற்றினர். பின்னர் 1824 – 1826ல் நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரில், பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்கள் பர்மியர்களை வென்று, வடகிழக்கு இந்தியா முழுவதும் பிரித்தானிய இந்தியாவில் இணைத்தனர். வடகிழக்கு இந்தியப் பகுதிகள் 1826 முதல் 1905 முடிய வங்காள மாகாணத்திலும், 1905ல் வங்காளப் பிரிவினைக்குப் பின்னர் 1905 முதல் 1912 முடிய கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்திலும் இருந்தது. பின்னர் 1912 முதல் புதிய அசாம் மாகாண நிர்வாகத்தின் கீழ் வடகிழக்கு இந்தியப் பிரதேசங்கள் வந்தன.[3]

1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் உருவான இந்திய ஒன்றியத்தின் அசாம் மாகாணத்தில், மணிப்பூர் இராச்சியம் மற்றும் திரிபுரா இராச்சியம் போன்ற சுதேச சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டது.

அசாம் மாநிலத்திலிருந்த நாகாலாந்து 1963லும், மேகாலயா 1972லும், அருணாச்சலப் பிரதேசம் 1975லும், மிசோரம் 1987லும் புதிய மாநிலங்களாக அமைக்கப்பட்டது.[4] மணிப்பூர் மற்றும் மேகாலயாப் பகுதிகள் மாநில அங்கீகாரம் பெறும் வரை, 1956 முதல் 1972 முடிய இந்திய ஒன்றியப் பகுதிகளாக செயல்பட்டது.

தனி நாடாக இருந்த சிக்கிம் பாதுகாப்பு காரணங்களால் 1975ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தது. 2002ல் வடகிழக்கு குழுவில் சிக்கிம் எட்டாவது உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது.[5]

பிரித்தானிய இந்திய அரசில் அசாம் மாகாணத்தின் தலைநகராக சில்லாங் நகரம் விளங்கியது. பின் சில்லாங் நகரம் 1972ல் மேகாலயா மாநிலத்தின் தலைநகரானாது.[6] அசாம் மாநிலத்தின் தலைநகராக குவகாத்தி நகர்புறத்தில் அமைந்த திஸ்பூர் தலைநகரானது.

மாநிலம் வரலாற்றுப் பெயர் தலைநகரம் மாநிலத் தகுதி
அருணாச்சலப் பிரதேசம்நேபாஇட்டாநகர்1987 (1956 முதல் 1987 முடிய இந்தியாவின் ஒன்றியப் பகுதியில்)
அசாம்பிராக்ஜோதிஷ்புரம்திஸ்பூர்1947
மணிப்பூர்கங்கெலய்பாக்[7]இம்பால்1972 (1956 முதல் 1972 முடிய இந்தியாவின் ஒன்றியப் பகுதியில்)
மேகாலயாசில்லாங்1972
மிசோரம்லுசாய்அய்சால்1987 (1956 முதல் 1987 முடிய இந்தியாவின் ஒன்றியப் பகுதியில்) [8]
நாகாலாந்துகோகிமா1963
சிக்கிம்கேங்டாக்1975
திரிபுராதிப்பெரா [9]அகர்தலா1972 (1956 முதல் 1972 முடிய இந்தியாவின் ஒன்றியப் பகுதியில்)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 7 Sister States
  2. Seven Sister States of northeastern India
  3. "Formation of Assam during British rule in India". பார்த்த நாள் 25 March 2012.
  4. "Formation of North Eastern states from Assam". பார்த்த நாள் 25 March 2012.
  5. "Integration of Sikkim in North Eastern Council". Times of India (10 December 2002). பார்த்த நாள் 25 March 2012.
  6. "Shillong becomes the capital of Meghalaya". பார்த்த நாள் 25 March 2012.
  7. "Ancient name of Manipur".
  8. "History of Mizoram".
  9. "Historical evolution of Mizoram".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.