உமாமகேசுவர விரதம்

உமாமகேசுவர விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. கார்த்திகை மாத பூரணை நாளில் அநுட்டிக்கப்படும் விரதமாகும். உமாமகேசுவர மூர்த்தியைக் குறித்து அநுட்டிக்கப்படுவதால் உமாமகேசுவர விரதம் எனப் பெயர் பெறுகிற்து. இந்நாளில் உணவை விடுத்தேனும் குறைத்தேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் உமாமகேசுவர மூர்த்தியை விதிப்படி மெய்யன்போடு வழிபடுவர்.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.