உடன்படிக்கைப் பெட்டி
உடன்படிக்கைப் பெட்டி அல்லது உடன்படிக்கைப் பேழை என்பது விடுதலைப் பயணம்[1] விபரிக்கும் ஓர் பெட்டியாகும். சாட்சிப் பெட்டி எனவும் அழைக்கப்படும் இது பத்துக் கட்டளைகள் பொறிக்கப்பட்ட கற்பலகைகளைக் கொண்டது. விடுதலைப் பயணம் (நூல்)[2], எண்ணிக்கை (நூல்)[3], எபிரேயருக்கு எழுதிய நிருபம்[4], ஆகியவற்றின் கருத்துக்களின்படி, அதனுள் ஆரோனின் கோலும், குவளையில் மன்னா மற்றும் மோசே எழுதிய முதல் தோரா சுருள் என்பன இருந்ததாக கருதப்படுகிறது.[5] ஆயினும் 1 அரசர்களின் படி சாலமோனின் காலத்தில் உடன்படிக்கைப் பெட்டியினுள் கட்டளைகளின் இரு கற்பலகைகள் மாத்திரம் இருந்தது எனக் கூறுகின்றது.[6] விடுதலைப் பயணத்தின்படி, மோசேக்கு சீனாய் மலையில் வைத்து கடவுளால் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு ஏற்பவே உடன்படிக்கைப் பெட்டி உருவாக்கப்பட்டது.[7] உடன்படிக்கைப் பெட்டியை மூடியுள்ள தேவதூதர்களின் மத்தியிலிருந்து தன்னுடன் பேசுமாறு மேசேக்கு கடவுள் கூறியிருந்தார்.[8]

.jpg)
உசாத்துணை
- விடுதலைப் பயணம் (நூல்) 25:10-22
- விடுதலைப் பயணம் (நூல்) 16:33-34
- எண்ணிக்கை (நூல்) 17:25-26
- எபிரேயருக்கு எழுதிய நிருபம் 9:4
- Ackermann 2000, பக். 102.
- 1 அரசர்கள் (நூல்) 8:9
- விடுதலைப் பயணம் (நூல்) 25:10-16
- விடுதலைப் பயணம் (நூல்) 25:22