இரண்டாம் உலகப் போரில் பாலஸ்தீனம் மீது குண்டுவீச்சு

இரண்டாம் உலகப் போரின் போது பாசிச இத்தாலியின் வேந்திய வான்படை பிரித்தானியக் கட்டுப்பாட்டிலிருந்த பாலஸ்தீனம் மீது பலமுறை குண்டு வீசித் தாக்கியது. தற்காலத்தில் இஸ்ரேல், மேற்குக் கரை, காசா என்று வழங்கப்படும் பகுதிகள் அனைத்தும் அப்போது பாலஸ்தீனம் என்று வழங்கப்பட்டு வந்தன. ஜூலை 1940 இல் இத்தாலிய வான்படை பாலஸ்தீன நகரங்கள் மீது குண்டு வீசத் தொடங்கியது. டெல் அவீவ், ஹைஃபா போன்ற நகர்ப்புறங்கள் முக்கியமாகக் குறிவைத்துத் தாக்கப்பட்டன.[1][2][3][4]


குறிப்புகள்

  1. The Italian Bombing, at the website of Tel Aviv Municipality (Hebrew)
  2. Italian Planes Bomb Tel-Aviv, IsraCast.com
  3. Maya Zamir, The Day of The bombing, Tel Aviv Magazine, 7th of September 2007
  4. Time Magazine, God's Time
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.