முல்லை (திணை)
முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது.
முல்லை நிலத்தின் பொழுதுகள்
கார் என்னும் பெரும் பொழுதும், மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்
- தெய்வம்: மாயோன்
- மக்கள்: ஆயர், ஆய்ச்சியர், இடையன், இடைச்சி
- விலங்கு: மான், முயல்
- உணவு: தினை, சாமை, நெய், பால்.
- பறவைகள்:காட்டு கோழி, கருடன்
- தொழில்: கால்நடை வளர்ப்பு , விவசாயம் செய்தல்
- குல விளையாட்டு: ஏறுதழுவுதல்
- புலவர்: பேயனார்
முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள்
- அக ஒழுக்கம் : இருத்தல்
- புற ஒழுக்கம் : வஞ்சி
தமிழர் நிலத்திணைகள் |
---|
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.