முதலாம் இராமா

பிரா புத்தயோப்தா சூலாலோக் (Phra Phutthayotfa Chulalok, தாய்: พระพุทธยอดฟ้าจุฬาโลก), பிறப்பு தொங்துவாங் (Thongduang, தாய்: ทองด้วง) அல்லது முதலாம் இராமா (Rama I) (20 மார்ச் 1737 7 செப்டம்பர் 1809), இரத்தனகோசின் இராச்சியத்தை நிறுவியவரும், சியாமின் (இன்றைய தாய்லாந்தின்) சக்கிரி அரசமரபின் முதலாவது மன்னரும் ஆவார். தாய் மொழியில் இவரது முழுப் பட்டப் பெயர் பிரா பாத் சோம்தெத் பிரா பரமோருராச்சா மகாசக்கிரிபரமோமானத் பிரா புத்தயோஃப்த்தா சூலாலோக் என்பதாகும்.[1] 1782 இல் தோன்புரி பேரரசர் தக்சினை பதவியில் இருந்து அகற்றிய கிளர்ச்சியின் பின்னர் இவர் மன்னரானார். இவர் மீள ஒன்றிணைக்கப்பட்ட இராச்சியத்தின் தலைநகராக இரத்தினகோசின் நகரை அமைத்தவர் என்பதற்காகப் புகழப்படுகிறார்.

பிரா புத்தா யோத்ஃபா சூலாலோக்கி
Phra Buddha Yodfa Chulaloke
พระบาทสมเด็จพระพุทธยอดฟ้าจุฬาโลก
முதலாம் இராமா மன்னர்

சியாமின் மன்னர்
ஆட்சிக்காலம் 6 ஏப்ரல் 1782 – 7 செப்டம்பர் 1809
முடிசூட்டு விழா 21 சூன் 1782
முன்னையவர் தோன்புரியின் தக்சின்
பின்னையவர் பிரா புத்தலோத்தியா நபாலாய் (இரண்டாம் இராமா)
துணை மன்னர் மகா சூர சிங்கநாத்
சராசுந்தோர்ன் (பின்னர் இரண்டாம் இராமா)
வாழ்க்கைத் துணை அரசி அமரீந்திரா
வாரிசு
42 பேர் (பல்வேறு மனைவிகளிடம் இருந்து)
குடும்பம் சக்கிரி அரசமரபு
தந்தை தோங்டி (பின்னர் சோம்தெட் பிரா பிராதோம் போரம் மகா ராஜ்சானோக்)
தாய் தாவோரெயுங்
பிறப்பு மார்ச்சு 20, 1736(1736-03-20)
அயூத்தியா, அயூத்தியா இராச்சியம்
இறப்பு 7 செப்டம்பர் 1809(1809-09-07) (அகவை 72)
பெரிய அரண்மனை, தாய்லாந்து, பேங்காக், தாய்லாந்து
சமயம் பௌத்தம்

தொங்துவாங் (முதலாம் இராமா) சுகோத்தாய் இராச்சியத்தின் வழிவந்த மொன் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை அயூத்தியா இராச்சியத்தில் அரச நீதிமன்றத்தில் பணியாற்றியவர்.[2][3] இவரது தாயார் தாவோரெயுங் (யொக்) சீன-வம்சாவழி ஆவார்.[4][5][6] இவருடன் கூடப் பிறந்தவர்கள் அறுவர் ஆவர்.

தொங்துவாங் தக்சின் மன்னருடன் இணைந்து பர்மிய கொன்பாவுங் அரசமரபினருடன் போர்களில் பங்குபற்றி, சியாமின் ஒன்றிணைவுக்குப் பெரும் பங்காற்றினார். இக்காலகட்டத்தில் தொங்துவாங் சியாமின் மிகவும் பலம் பொருந்திய இராணுவத் தலைவர் எனப் பெயர் பெற்றார். [7]1782 ஆம் ஆண்டில், சியாமைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தன்னை மன்னராக அறிவித்தார். இவரது காலத்தில் பர்மிய-சியாம் போர் (1785) இடம்பெற்றது. இதுவே சியாம் மீது பர்மியர்களின் கடைசிப் பெரும் தாக்குதல் ஆகும்.

மேற்கோள்கள்

  1. Sulak Sivaraksa (1985). Siamese Resurgence: A Thai Buddhist Voice on Asia and a World of Change. Asian Cultural Forum on Development. பக். 175.
  2. Chris Baker, Pasuk Phongpaichit (2005). A History of Thailand. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 32 and 288. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-81615-7.
  3. The following article was written by King Rama IV of the Kingdom of Thailand in 1855 in response to the British Governor to Hongkong. And another related article from The Nation on 13 December 1999. Archived 17-10-2007 at the வந்தவழி இயந்திரம்.
  4. Britannica encyclopedia
  5. Down Sampeng Lane: The Story of Bangkok's China Town Archived 2007-07-08 at the வந்தவழி இயந்திரம்.
  6. Thailand, doing business in
  7. Klaus Wenk (1968). The restoration of Thailand under Rama I, 1782–1809. The University of Arizona Press. பக். 3.
முதலாம் இராமா
சக்கிரி அரசமரபு
பிறப்பு: 20 மார்ச் 1737 இறப்பு: 7 செப்டம்பர் 1809
அரச பட்டங்கள்
முன்னர்
தக்சின்
(
தோன்புரி மன்னர்)
சியாம் மன்னர்
1782–1809
பின்னர்
இரண்டாம் இராமா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.