மலைப்பொழிவு
மலைப்பொழிவு அல்லது மலைப் பிரசங்கம் (Sermon on the Mount) மத்தேயு நற்செய்தி 5-7 இன் படி நாசரேத்தூர் இயேசுவினால் (சுமார் கி.பி. 30 இல்) இன்றைய வடக்கு இசுரேலின் மலைப்பாங்கான பகுதியில் தமது சீடருக்கும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் கொடுக்கப்பட்ட ஒரு சொற்பொழிவாகும். இப்பிரசங்கத்தின் ஆரம்பம் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது, மேலும் இது கிறிஸ்து கற்பித்த செபத்தையும், அகிம்சை, "அடுத்த கன்னத்தையும் காட்டு" போன்ற இயேசுவின் முக்கிய படிப்பினைகளைக் கொண்டுள்ளது. பல கிறித்தவர்கள் மலைப்பிரசங்கத்தை பத்துக்கட்டளைகளிற்கான இயேசுவின் விளக்கமெனக் கருதுகின்றனர். மலைப்பிரசங்கம் கிறித்தவத்தின் மையக் கருத்துக்களைக் கொண்டிருந்தது.[1] காந்தி, டால்ஸ்ட்டாய் போன்றோர் அதனைப் பின்பற்றினார்கள்.
நற்செய்திகளின்படி |
இயேசுவின் வாழ்வு |
---|
|
|
|
புதிய ஏற்பாட்டில் பிற
|
|
மலைப்பொழிவின் அமைப்பு
- முன்னுரை (மத்தேயு 5:1-2)
- பேறுபெற்றோர் (மத்தேயு 5:3-12)
- உப்பும் ஒளியும் (மத்தேயு 5:13-16)
- திருச்சட்டம் நிறைவேறுதல் (மத்தேயு 5:17-48)
- அறச்செயல்கள் (மத்தேயு 6)
- தீர்ப்பு அளித்தல் (மத்தேயு 7:1-6)
- புனிதம் பற்றி (மத்தேயு 7:7-29)
இவற்றையும் பார்க்கவும்
கைம்பெண் மகன் உயிர்பெறுதல்(லூக்கா நற்செய்தி 7:11-17 ) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.