நூறு சிந்தனைப் பள்ளிகள்
நூறு சிந்தனைப் பள்ளிகள் (The Hundred Schools of Thought) என்பது கிமு 770 - 221 காலப் பகுதியில் சீனாவில் இருந்த மெய்யிலாளர்கள், அவர்களின் சிந்தனைப் போக்குகள், பள்ளிகள் ஆகியவற்றைச் சுட்டுகிறது.[1] இக் காலப் பகுதி போர்களையும் பல்வேறு சமூக அரசியல் நெருக்கடிகளையும் கொண்டிருந்தது எனினும், மெய்யியல் சிந்தனை நோக்கில் சீனாவின் பொற்காலப் பகுதியாக கருதப்படுகிறது. சீனாவின் சிறந்த மெய்யியலாளர்களான கன்பூசியசு, லா ஒசி, மோகி, யாங் சூ, மென்சியசு போன்றோர் இக் காலப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள் குறிப்பிடும் பள்ளிகள்
- கன்பூசியம்
- சட்டவியல் (சீன மெய்யியல்)
- தாவோயியம்
- மோகிசம்
- இயற்கையாளர்கள் சிந்தனைப் பள்ளி
- பெயரியல் (சீன மெய்யியல்) (ஏரணவாதிகள்)
ஆன்சூ (ஆன்களின் நூல் - Han Shu) குறிப்பிடும் பள்ளிகள்
- இராசதந்திரிகளின் பள்ளி
- உழவர் சிந்தனைப் பள்ளி
- பல்வகைச் சிந்தனைகளின் பள்ளி
- சிறு பேச்சுப் பள்ளி
பிற பள்ளிகள்
- யாங்கியம்
- படைத்துறைப் பள்ளி
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.