தோப்புத்துறை
தோப்புத்துறை (ஆங்கிலம்: Thopputhurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.
தோப்புத்துறை | |
— நகரம் — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித் |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி |
மக்களவைத் தொகுதி | தோப்புத்துறை |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.Thopputhurai.com/ |
தமிழக கிழக்கு கடற்கரையோரத்தில் இருக்கும் ஊர்களில் தோப்புத்துறை ஒரு பழைமையான துறைமுக நகரமாகும். பலதரப்பட்ட உள்நாட்டு வணிகம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி வணிபம் பெரிய அளவில் நடைபெற்ற தொன்மைமிக்க ஊர், கடலும் அதை சார்ந்த இடமும் இருப்பதால் சங்க கால தமிழர்கள் வழக்கப்படி தோப்புத்துறை நெய்தல் நிலம் என்று வகைப்படுத்தப்பட்டது.
விஜய ரகுநாத சோக்கலிங்கர் ஆட்சி காலத்தில் தோப்புத்துறை பகுதி அவர்களின் ஆட்சியின் கீழ் செயல்பட்ட காரணத்தால் வேதாரண்யம்-திருமறைகாடு சுற்றியுள்ள பல சாலைகளுக்கும், ஊர்களுக்கும், வழிபாடு தளங்களுக்கும் அவர்கள் ஆட்சிபகுதியில் இருந்த சமுத்திரத்திற்கு சேது என்ற பெயர் சேர்த்து அழைக்கப்பட்டது. தோப்புத்துறைக்கு சேதுமாதவபுரம் என்ற பெயரும் இருந்தாக சொல்லப்படுகிறது.
மேற்கோள்கள்
- மணிச்சுடர் நாளிதழில் 16/7/2010 வெளியான கட்டுரை-தோப்புத்துறை ஜாமிய மஸ்ஜித் திறப்பு விழா சிறப்பு மலர்.
- www.thopputhurainews.com
- www.tmadubai.org