துறை (பாவினம்)

தமிழில் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைகள் உள்ளது போல மூன்று இனங்கள் உள்ளன. அவை - தாழிசை, துறை, விருத்தம் என்பன. [1] [2] [3] பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு சீர், அடி எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப் பெறுகின்றன. இவற்றில் துறை என்பது பின்வரும் நான்கு வகைப்படும்:

  • குறள்வெண் செந்துறை - அளவொத்த இரண்டடிகளில் அமையும். அவ்வடிகள் அளவடியாகவோ, நெடிலடியாகவோ, கழிநெடிலடியாகவோ அமையும்.
  • ஆசிரியத் துறை - நான்கடியில் கொண்டது; இடைமடக்குடையது; அடிகளில் ஏதேனும் ஒன்று அளவு குறைந்து வரும்.
  • கலித்துறை - நெடிலடி (ஐந்து சீர்) நான்கு கொண்டது.
  • வஞ்சித்துறை - குறளடி நான்கு கொண்டு தனித்து வருவது.

மேற்கோள்கள்

  1. தாழிசை துறையே விருத்தம் என்றிவை
    பாவினம் பாவொரு பாற்பட் டியலும். (யாப்பருங்கலம் 35)

  2. தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்1
  3. தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்2
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.