வஞ்சித்துறை

வஞ்சித்துறை தமிழ் பாவினங்களில் ஒன்றான துறையின் வகைகளுள் ஒன்று. நான்கு குறளடி (இரு சீர் அடிகள்) கொண்டு தனித்து அமையும். இது பல்வேறு ஒசை அமைப்புகளில் அமையும். [1] [2]

எடுத்துக்காட்டு 1

மைசிறந்தன மணிவரை
கைசிறந்தன காந்தளும்
பொய்சிறந்தனர் காதலர்
மெய்சிறந்திலர் விளங்கிழாய்.

யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்
எடுத்துக்காட்டு 2

உள்ளம் உரைசெயல்
உள்ளஇம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்திறை
உள்ளில் ஒடுங்கே

திருவாய்மொழி - 2693

உசாத்துணை

அடிக்குறிப்பு

  1. ‘குறளடி நான்மையிற் கோவை மூன்றாய்
    வருவன வஞ்சித் தாழிசை; தனிவரின்
    துறையென மொழிப துணிந்திசி னோரே’. (யாப்பருங்கலம் நூற்பா 91)

  2. ‘ஒன்றினை நான்மை உடைத்தாய்க் குறளடி
    வந்தன வஞ்சித் துறையெனல் ஆகும்’.

    ‘குறளடி நான்கின் கூடின வாயின்
    முறைமையின் அவ்வகை மூன்றிணைந் தொன்றி
    வருவன வஞ்சித் தாழிசை ஆகும்’. என்றார் காக்கைபாடினியார்.

    ‘எஞ்சா இருசீர் நாலடி மூன்றெனில்
    வஞ்சித் தாழிசை; தனிவரிற் றுறையே’. என்றார் சிறுகாக்கைபாடினியார்.

    ‘இருசீர் நாலடி மூன்றிணைந் திறுவது
    வஞ்சித் தாழிசை; தனிவரிற் றுறையே’. என்றார் அவிநயனார்.

    ‘இருசீர் நாலடி மூன்றிணைந் தொன்றி
    வருவது வஞ்சித் தாழிசை; தனிநின்
    றொருபொருள் முடிந்தது துறையென மொழிப’. என்றார் மயேச்சுரர். [[யாப்பருங்கல விருத்தி]] பக்கம் 379

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.