திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில்
திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]
தேவாரம் பாடல் பெற்ற திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவக்கரை |
பெயர்: | திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவக்கரை |
மாவட்டம்: | விழுப்புரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சந்திரசேகரேசுவரர், சந்திர மௌலீசுவரர் |
தாயார்: | அமிர்தேசுவரி, வடிவாம்பிகை |
தல விருட்சம்: | வில்வம் |
தீர்த்தம்: | சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
தொன்மை: | புராதனக்கோயில் |
அமைவிடம்
சம்பந்தர் பாடல் பெற்ற இந்தச் சிவாலயம் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
இங்குள்ள சிவலிங்கம் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் முகமுடைய மும்முகலிங்கமாகும். இங்குள்ள இறைவன் சந்திரசேகரன்; இறைவி வடிவாம்பிகை;
சிறப்புகள்
வக்கிரன் வழிபட்ட ஸ்தலம். வலிய கரை (சுற்றி கல் பாறைகள் ) உள்ள இடம். வக்ரகாளியம்மன் சிறப்பு. பெருமாள் சந்நிதியும் உள்ளது. வராக நதி எனும் சங்கராபரணி நதியின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள மரங்கள் கல்லாக மாறிய தொன்மையுடையவை.[2]
மேற்கோள்கள்
- பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 65
வெளி இணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.