திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்

திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்[1] அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் திருமணஞ்சேரி எனும் ஊரில் அமைந்துள்ளது.

தேவாரம் பாடல் பெற்ற
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி
அமைவிடம்
ஊர்:திருமணஞ்சேரி
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:உத்வாகநாதர், அருள்வள்ளநாதர்
தாயார்:கோகிலா
தல விருட்சம்:கருஊமத்தை
தீர்த்தம்:சப்தசாகரம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 25வது தலம் ஆகும்.

இறைவன், இறைவி

இத்தலத்தின் மூலவர் உத்வாகநாதர். தாயார் கோகிலா. இறைவன் கல்யாண சுந்தரர் வடிவங் கொண்டு கோகிலாம்பிகையை திருமணஞ் செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

கோயில் அமைப்பு

ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கொடி மரம், பலிபீடம், நந்தி காணப்படுகின்றன. கோயிலின் வலப்புறம் விநாயகர் சன்னதி உள்ளது. இடப்புறம் நடராஜர் சன்னதியும் அம்மன் சன்னதியும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு வலப்புறமாக கல்யாணசுந்தரர் காணப்படுகிறார். மூலவர் சன்னதியின் இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

அருகில் உள்ள திருத்தலம்

இவற்றையும் பார்க்க

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில் -தினமலர் கோயில்கள் தளம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.