திருப்பாலை
திருப்பாலை என்பது இந்தியா, தமிழ்நாடு, மதுரையின் வடக்கே உள்ள (கண்ணானேந்தல் ஊராட்சிக்கு (கிராமப் பஞ்சாயத்து) உட்பட்ட ஒரு உட்கடைக் கிராமமாகும்), மதுரை (வடக்கு தாலுகா)வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமமாகும் [1].. 2011ல் இதன் கிராமப் பஞ்சாயத்து கலைக்கப்பட்டு மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இங்கு முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது. சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தது மற்றும் மதுரை மக்களவைத் தொகுதியை சேர்ந்ததாகும். ஆன்மிக பேச்சாளர் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் கிருபாகரம் இப்பகுதியில் அமைந்திள்ளது.
திருப்பாலை | |
---|---|
மதுரை மாநகராட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | மதுரை |
உள்ளாட்சி அமைப்பு | மதுரை மாநகராட்சி |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• மாநகரட்சித் தலைவர் | செல்லாப்பா |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் |
அஞ்சல் குறியீடு | 625014 |
கல்வி நிலையங்கள்
மதுரைப் புறநகர்பகுதியாகவும், மதுரைக்கு மிக அருகிலும் இந்த ஊர் இருப்பதால் இங்கு பல கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.
- யாதவர் கல்லூரி
- இ. எம். ஜி. யாதவர் மகளிர் கல்லூரி
- வேலம்மாள் நினைவு மெட்ரிக்குலேஷன் பள்ளி
- ஜெயின் வித்யாலய பள்ளி[2] முதலியவை இங்குள்ள சில முக்கியக் கல்வி நிறுவனங்கள் ஆகும்.
அருகேவுள்ள கோவில்கள்
- திருப்பாலை கிருஷ்ணன் கோவில்
- மந்தையம்மன் கோவில்
- நொண்டிச்சாமி கோவில்
- இஸ்கான் கிருஷ்ணன் கோவில்
மேற்கோள்கள்
- மதுரை வடக்கு தாலுக்கா
- http://www.jainvidyalaya.in/ ஜெயின் வித்யாலயா பள்ளியின் இணையதளம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.