தாழை
தாழை மலர் (Pandanus fascicularis) தற்காலத்தில் தாழம்பூ என அழைக்கப்படுகிறது. வழுவழுப்பான மரத்தை வாழை என்பது போன்று, தாழ்ந்து தொங்கும் மடல்பூவைத் தாழை என்றனர். நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும். தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர்.
தாழை மலர் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | நிலைத்திணை |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலையி |
வரிசை: | Pandanales |
குடும்பம்: | Pandanaceae |
பேரினம்: | பண்டானுஸ் |
இனம்: | P. fascicularis |
இருசொற் பெயரீடு | |
Pandanus fascicularis லாம். | |
வேறு பெயர்கள் | |
Pandanus odoratissimus, லின். |
கைதை என்னும் மலரும் இதன் இனம். கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும். கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ. கைதை என்பது நிழல் தரும் மரம்.
சங்க காலம்
சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் தாழை [1] கைதை [2] ஆகிய இரு மலர்களும் இடம்பெற்றுள்ளன.
- பழங்குறிப்புகள்
பயன்பாடுகள்
தாழைமர இலைகளை மடல் என்பர். தாழைமடல்களைக் கொண்டு குடை செய்வர். தலையில் தொப்பி போலப் போட்டுக்கொள்ளும் குடையாகவும், மழைக்குக் கையால் பிடித்துக்கொள்ளும் குடையாகவும் இது தைக்கப்படும். இதன் வாசனைக்காக இதனை உணவில் சேர்ப்பார்கள்.[5]
மேலும் காண்க
அடிக்குறிப்பு
- குறிஞ்சிப்பாட்டு (பாடலடி 83)
- குறிஞ்சிப்பாட்டு (பாடலடி 80)
- மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம் – நீதிநூல் பாடிய ஔவையார்
- மணிமேகலை 20-62
- Kewda essence