கரந்தை
சங்க இலக்கியங்களில் கூறப்படும் கரந்தை மலர் எது என்பதை அடையாளம் காண்பதில் அறிஞர்கள் மாறுபடுகின்றனர்.
- அவர்கள் காட்டுவன
- திருநீற்றுப்பச்சை என்னும் கரந்தை
- விஷ்ணு கரந்தை
- மூலிகைக்கரந்தை
- கொட்டைக்கரந்தை
கரந்தை | |
---|---|
![]() | |
Sphaeranthus indicus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Asterales |
குடும்பம்: | Asteraceae |
பேரினம்: | Sphaeranthus |
இனம்: | S. indicus |
இருசொற் பெயரீடு | |
Sphaeranthus indicus L. | |
தொல்காப்பியம் கரந்தை என்பதை 7 புறத்திணைகளில் ஒன்றான வெட்சித்திணையின் துறைகளில் ஒன்றாகக் காட்டுகிறது.[1]
- வெட்சி சூடி ஆனிரை கவர்வதும், கரந்தை சூடி ஆனிரை மீட்பதும் பண்டைத் தமிழரின் போர்முறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கணநூல் கூறுகிறது.[2]
- குறிப்பு
- தொல்காப்பியம் கரந்தையைத் துறை எனக் காட்டுகிறது.
- புறப்பொருள் வெண்பாமாலை 12 திணைகளில் ஒன்று எனக் காட்டுகிறது.
சங்கப்பாடல் தரும் குறிப்பு
பால் கறக்கும் பசுவின் முலைபோல் கரந்தை பூக்கும் என்கிறார் ஆவூர் மூலங்கிழார் [3] இந்தச் சான்று கரந்தை என்பது திருநீற்றுப் பச்சை என்பாரின் கருத்தை உறுதி செய்கிறது
மேலும் பார்க்க
அடிக்குறிப்பு
-
ஆரமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும்
சீர்சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்
தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்
மனைக்கு உரி மரபினது கரந்தை - தொல்காப்பியம் பொருளதிகாரம் 63 -
மலைந்து எழுந்தோர் மறம் சாயத்
தலைக்கொண்ட நிரை பெயர்த்தன்று - புறப்பொருள் வெண்பாமாலை நூற்பா 22 - நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை - புறநானூறு 261
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.