செலூக்கஸ் நிக்காத்தர்

முதலாம் செலூக்கஸ் நிக்காத்தர் (Seleucus I Nicator) பண்டைக் கிரேக்கம்: Σέλευκος Νικάτωρ (கி மு 358 – 281) அலெக்சாண்டரின் குடும்ப உறுப்பினரும், நண்பரும், கிரேக்கப் படைத்தலைவர்களில் ஒருவருமாவார். கி மு 323 இல் அலெக்சாண்டரின் மறைவிற்குப் பின்னர், அவர் கைப்பற்றிய பகுதிகள் ஐந்தாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஏஜியன் கடலுக்குக் கிழக்கே சிரியா முதல் தற்கால இந்தியாவின் பஞ்சாப் வரை உள்ள பகுதிகளுக்கு செலூக்கியப் பேரரசிற்கு செலூக்கஸ் நிக்காத்தர் மன்னரானார்.

செலூக்கஸ் நிக்காத்தர்
செலூக்கியப் பேரரசர்

செலூக்கியப் பேரரசின் முதலாம் செலூக்கஸ் நிக்காத்தரின் உருவச்சிலை
ஆட்சிக்காலம் 305[1]–281 BC
முன்னையவர் பேரரசர் அலெக்சாந்தர்
பின்னையவர் முதலாம் அந்தியோக்கஸ் சோத்தர்
வாழ்க்கைத் துணை சோக்தியானாவின் அபாமா
சிரியாவின் ஸ்டாடோனிஸ்
வாரிசு
முதலாம் அந்தியோக்கஸ் சோத்தர்
அசாயுஸ்
ஹெலெனா (மகள்)
குடும்பம் செலூக்கிய வம்சம்
தந்தை ஆண்டியோக்கஸ்
தாய் மாசிடோனியாவின் லாடைஸ்
பிறப்பு கி மு 358
மாசிடோனியா
இறப்பு கி மு 281 (76/77-வது வயதில்)
திராஸ் (Thrace)
சமயம் பண்டைய கிரேக்க சமயம்
முதலாம் செலூக்கஸ் நிக்காத்தர் காலத்திய செலூக்கியப் பேரரசின் வரைபடம் (காவி நிறம்)

சந்திர குப்த மௌரியர் மீதான இரண்டு ஆண்டு காலப் போரின் (கி மு 305-303) முடிவில், செலூக்கஸ் நிக்கோடர், சந்திரகுப்த மௌரியருடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு, சிந்து ஆற்றுச் சமவெளியின் சிந்து மாகாணம் மற்றும் பஞ்சாப் பகுதிகளைச் சந்திர குப்த மௌரியருக்கு வழங்கியதுடன், தனது மகளை சந்திரகுப்தருக்கு மணமுடித்து வைத்தார். சந்திரகுப்த மௌரியர், செலூக்கஸ் நிகோடருக்கு ஐந்நூறு போர் யானைகளைப் பரிசாக வழங்கினார். மேலும் சந்திரகுப்த மௌரியனின் அரசவையில், செலூக்கியப் பேரரசர் தனது தூதுவராக மெகஸ்தெனசை நியமித்தார்.[2]

கி மு 281-இல் திராஸ் நகரத்தில் செலுக்கஸ் நிக்கோடர் கொல்லப்பட்டார். பின்னர் அவரது மகன் முதலாம் ஆண்டியோக்கஸ் செலுக்காசியப் பேரரசின் மன்னரானார்.

தலைநகரங்கள்

செலூக்கியப் பேரரசின் தலைநகரங்களாக துருக்கி - சிரியாவின் எல்லையில் அமைந்த அந்தியோக்கியா மற்றும் டைகிரிஸ் ஆற்றாங்கரையில் அமைந்த செலுசியா நகரங்கள் விளங்கியது.

செலுக்கஸ் நிகோடர் ஆண்ட பகுதிகள்

செலுக்கஸ் நிகோடரும், அவருக்குப் பின்வந்த கிரேக்க செலுக்கஸ் நிக்கோடரின் மரபினரும், செலூக்கசியப் பேரரசின் தற்கால பாகிஸ்தான், ஆப்கானித்தான், துருக்மேனிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், சிரியா, ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, சிரியா, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான், லெபனான், துருக்கி ஆகிய பகுதிகளை ஆண்டனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Boiy "The Reigns of the Seleucid Kings According the Babylonian King List." Journal of Near Eastern Studies 70(1) (2011): 1-12.
  2. Strabo 15.2.1(9)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.