எயார்டல் சூப்பர் சிங்கர்
சூப்பர் சிங்கர் - தமிழுலகத்தின் பிரமாண்ட குரலுக்கான தேடல் (ஆங்கிலம் - Airtel Super Singer "the search for the greatest voice of Tamil Nadu") விஜய் தொலைக்காட்சியில் பருவங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியாகும். இது பாட்டுப் போட்டியை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சிக்கு எயார்டல் தொலைபேசி நிறுவனம் ஆதரவு தந்துள்ளது. இத்தொலைக்காட்சி நிகழ்ச்சி 5 பருவங்களாக நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் வெற்றிபெறும் நபர்களுக்கு திரைத்துறையில் பாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது.[1][2][3] மேலும் பணங்களும், தங்கங்களும், பெறுமதியான வீடுகளும் பரிசாகக் கிடைக்கின்றன.
சூப்பர் சிங்கர் | |
---|---|
வழங்குநர் | சின்மயி (2008), திவ்யதர்சினி (2010-11), மா கா பா ஆனந்த் மற்றும் புவனா (2013) |
நடுவர் | மனோ, அனுராதா ஸ்ரீராம் மற்றும் சித்ரா |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 5 |
தயாரிப்பு | |
நிகழ்விடங்கள் | தமிழ்நாடு, இந்தியா |
ஓட்டம் | 1 நேரம் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
பட வடிவம் | 576i (SDTV) |
முதல் ஒளிபரப்பு | 2006 |
இறுதி ஒளிபரப்பு | தற்போது |
புற இணைப்புகள் | |
வலைத்தளம் |
பருவங்கள்
இறுதிப் போட்டியாளர்கள் | |
பருவம் 1 (2006) | |
நிகில் மேத்யூ | வெற்றியாளர் |
அனிதா கார்த்திகேயன் | இரண்டாவது இடம் & பார்வையாளர்களின் தெரிவு |
சௌமியா மகாதேவன் | ஜூரி யின் தெரிவு |
பருவம் 2 (2008) | |
அஜீஸ் (பாடகர்) | வெற்றியாளர் |
இரவி | இரண்டாவது இடம் |
இரேனு | மூன்றாவது இடம் |
பிரசன்னா | இறுதியில் வெளியேற்றப்பட்டவர் |
ரஞ்சனி | இறுதியில் வெளியேற்றப்பட்டவர் |
பருவம் 3 (2010-2011) | |
சாய்சரண் | வெற்றியாளர் & பார்வையாளர்களின் தெரிவு |
சந்தோஷ் ஹரிஹரன் | இரண்டாவது இடம் |
சத்ய பிரகாஷ் | மூன்றாவது இடம் & நடுவர்களின் தெரிவு |
பூஜா வைத்தியநாத் | இறுதியில் வெளியேற்றப்பட்டவர் |
பருவம் 4 (2013-2014) | |
திவாகர் | வெற்றியாளர் & பார்வையாளர்களின் தெரிவு |
சயித் சுபகான் | இரண்டாவது இடம் & நடுவர்களின் தெரிவு |
சரத் சந்தோஷ் | மூன்றாவது இடம் |
சோனியா | நான்காவது இடம் |
பார்வதி | இறுதியில் வெளியேற்றப்பட்டவர் |
பருவம் 5 (2015-2016) | |
ஆனந்த் அரவிந்தக்சன் | வெற்றியாளர் |
பரீதா | இரண்டாவது இடம் |
ராஜகணபதி | மூன்றாவது இடம் & நடுவர்களின் தெரிவு |
லக்ஷ்மி பிரதீப் | நான்காவது இடம் |
சியாத் | ஐந்தாவது இடம் |
பருவம் 1
இந்நிகழ்ச்சியின் முதல் பருவம் 2006ல் நடைபெற்றது. இதில் நிகில் மேத்யூ என்பவரை எஸ். பி. பாலசுப்பிரமணியம் வெற்றியாளராக அறிவித்தார். நிகில் மேத்யூ பிமா என்னும் தமிழ் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையில் பாடலொன்றினை பாடினார்.
பருவம் 2
இந்நிகழ்ச்சியின் இரண்டாவது பருவத்தில் சுஜாதா மோகன், உன்னிகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் நடுவராக இருந்தார்கள். வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப் பெற்ற அஜீசுக்கு, யுவன் சங்கர் ராஜா இசையில் கோவா திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது.