சுகாசன மூர்த்தி

சிவ வடிவங்களில் ஒன்றான
சுகாசன மூர்த்தி

சுகாசன மூர்த்தி - தஞ்சைக் கலைக்கூடம்
மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
இடம்:கைலாயம்
வாகனம்:நந்தி தேவர்

சுகாசன மூர்த்தி என்பது சிவ வடிவங்களில் ஒன்றாகும்.இது உமாதேவியாருக்கு சிவபெருமான் சிவாகமங்களின் பொருளினை விளக்கிய திருவுருவம் ஆகும். இது சிவனின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒன்றாகும்.

சொல்லிலக்கணம்

சுகாசனம் என்பது சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரி, பத்திரம், முக்தம், மயூரம், சுகம் என்ற ஒன்பது வகையான ஆசனங்களில் ஒன்றாகும்.

வேறு பெயர்கள்

நல்லிருக்கை நாதர்


தோற்றம்

சுகாசனர் வடிவத்தில் இடக்காலை மடக்கிவைத்து, வலக்காலை தொங்கவிட்டு சிவபெருமான் அமர்ந்திருக்கிறார்.

வகைகள்

  • உமாசகித சுகாசனர்
  • உமா மகேசுவர சுகாசனர்
  • சோமாஸ்கந்த சுகாசனர்

உருவக் காரணம்

சிவபெருமான் சுகாசன நிலையில் சிவாகமங்களின் உண்மைகளையும் , விளக்கங்களையும், ஐவகை பந்த பாசங்களின் நிலையையும், அவற்றை நீக்கினால் கிடைக்கும் நன்மைகளையும், சிவாகமங்கள் பற்றிய அனைத்து வினாக்களுக்கும் உமாதேவியாருக்கு விளக்கிய திருக்கோலமாகும்.


கோயில்கள்

  • சுவேதாரண்யேசுவர் கோயில் திருவெண்காடு

மேலும் காண்க

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.