சிவகெங்கைச் சீமை (திரைப்படம்)
சிவகெங்கைச் சீமை, 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பி. எஸ். வீரப்பா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கண்ணதாசன் திரைக்கதை, வசனம், மற்றும் பாடல்களை எழுதியிருந்தார். எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்திருந்தனர்.
சிவகெங்கைச் சீமை | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | கே. எஸ். ரெங்கநாதன் கண்ணதாசன் |
கதை | கண்ணதாசன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் டி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் பி. எஸ். வீரப்பா முத்துகிருஷ்ணன் டி. வி. நாராயணசாமி டி. கே. பகவதி எஸ். வரலட்சுமி குமாரி கமலா என். லலிதா எம். என். ராஜம் சாய் சுப்புலட்சுமி |
ஒளிப்பதிவு | தம்பு |
வெளியீடு | மே 19, 1959 |
நீளம் | 15592 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
- வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது - டி.எம்.எஸ்
- முத்துப் புகழ் படைத்து மூன்று நெறி வளர்த்து - எஸ். வரலட்சுமி, ராதா ஜெயலட்சுமி
- கொட்டு மேளம் கொட்டுங்கடி- ஜிக்கி குழுவினர்
- மருவிருக்கும் கூந்தல் - வி.என்.சுந்தரம்
- ஆலிக்கும் கைகள் அருள்கின்ற பார்வை - வி.என்.சுந்தரம்
- கன்னங்கருத்த கிளி கட்டழகன் தொட்ட கிளி - பி. லீலா குழுவினர்
- கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் - டி.எம்.எஸ், டி. எஸ். பகவதி
- தனிமை நேர்ந்ததோ - எஸ்.வரலட்சுமி
- தென்றல் வந்து வீசாதோ தென்னாங்கு பாடாதோ - எஸ்.வரலட்சுமி, ராதா ஜெயலட்சுமி
- மேகம் கவிந்ததம்மா மின்னல் வரப்போகுதம்மா - பி. சுசீலா
- சிவகங்கை சீமை, எங்கள் சிவகங்கை சீமை - டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.பி.கோமளா - குழுவினர்.
- விடியும் விடியும் என்றிருந்தோம் - டி. எஸ். பகவதி
- கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் - டி. எஸ். பகவதி
- சாந்து பொட்டு தளதளக்க - பி. லீலா, ஜமுனா ராணி
உசாத்துணை
- ராண்டார் கை (February 4, 2012). "Sivagangai Seemai". தி இந்து. http://www.thehindu.com/arts/cinema/article2860439.ece.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.