சாலிகுண்டம்

சாலிகுண்டம் (Salihundam,) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், பௌத்த நினைவுச் சின்னங்கள் கொண்டதுமான பண்டைய கிராமம் ஆகும். [1] மலையில் உள்ள இக்கிராமம், வம்சதாரா ஆற்றின் தென் கரையில் உள்ளது. சிறீகாகுளம் நகரத்திலிருந்து 14 மைல் தொலைவில் உள்ளது.

சாலிகுண்டம்
பாதுகாக்கப்பட்ட பௌத்த நினைவுச் சின்னம்
சிதைந்த சாலிகுண்டம் பௌத்தத் தூபி
சாலிகுண்டம்
சாலிகுண்டம்
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சாலிகுண்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°20′00″N 84°03′00″E
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்சிறீகாகுளம் மாவட்டம்
மொழிகள்
  அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்532405
அருகமைந்த நகரம்விசாகப்பட்டினம்
மக்களவைத் தொகுதிசிறீகாகுளம்
சட்டமன்றத் தொகுதிசிறீகாகுளம்
ஆந்திரப் பிரதேச பௌத்த நினைவுச் சின்னங்களின் வரைபடம்

1919ல் சாலிகுண்டம் கிராமத்தை அகழாய்வு செய்த போது, நான்கு பௌத்த தூபிகளும், விகாரைகளும், பௌத்த நினைவுப் பொருட்கள் கொண்ட பேழைகளும், பௌத்த சமய தேவதைகளான தாரா உள்ளிட்ட சிலைகளும் கண்டெடுக்கப்பட்டது. [2] இவிடத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாயானம், தேரவாதம் மற்றும் வஜ்ஜிராயனப் பௌத்தப் பிரிவுகளைச் சேர்ந்த நினைவுச் சின்னங்கள், கிபி 2ஆம் நூற்றாண்டு முதல் கிபி 12ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தவைகள் ஆகும்.

இதனையும் காணக

மேற்கோள்கள்

  1. Rao, K. Srinivasa (March 31, 2014). "Srikakulam waits for tourism package" (in en). The Hindu. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/srikakulam-waits-for-tourism-package/article5848783.ece. பார்த்த நாள்: 1 August 2017.
  2. "Archeological Survey of India" (en). Hyderabad Circle. பார்த்த நாள் 1 August 2017.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.