குவளை (தாவரம்)
குவளை அல்லது வெள்ளை அல்லி எனப்படுவது ஓர் நீர்த்தாவரமும் நிம்பியா குடும்பத் தாவரமும் ஆகும்.
குவளை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
வரிசை: | Nymphaeales |
குடும்பம்: | அல்லி |
பேரினம்: | Nymphaea |
இனம்: | N. odorata |
இருசொற் பெயரீடு | |
Nymphea odorata Aiton | |
குவளை மலர் குளத்தில் பூக்கும். மலைப்பகுதி மகளிர் பறித்துக் குவித்து விளையாடியதாகச் சங்கநூல் குறிப்பிடும் மலர்களில் ஒன்று.[1]
இதில் செங்குவளை கருங்குவளை வெண்குவளை என்றெல்லாம் பல வகைகள் உண்டு.
குவளைமலரின் மொட்டு மகளிரின் கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும்.[2]
- குவளை - மணமுள்ள மலர்
- ஆம்பல் - மணமில்லா மலர்
- இரண்டும் குளத்தில் பூக்கும் [3]
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
அடிக்குறிப்பு
- குறிஞ்சிப்பாட்டு (அடி 63)
-
காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழைக் கண்ணொவ்வோம் என்று. - திருக்குறள் -
- ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
- விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா
- பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்
- கருமங்கள் வேறு படும். நாலடியார் 236
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.