கழுமலம்

கழுமலம் என்பது சங்க கால ஊர் ஆகும்.

சோழ நாட்டுக் கழுமலம்

  • தமிழ்நாட்டிலுள்ள சீர்காழிக்கு வழங்கும் பெயர்களில் ஒன்று கழுமலம். ஞானசம்பந்தர் தேவாரத்தில், கழுமல வள நகர் பெண்ணின் நல்லாளோடும் பெருந்தகை இருந்ததே என்று கூறுகிறார்.
  • உறையூர் அரசன் செம்பியன் தான் போரில் வென்றவர்களின் குடைகளைக் கழுமலத்துக்குக் கொண்டுவந்தான். [1]

சேர நாட்டுக் கழுமலம்

  • சேரநாட்டில் ஒரு கழுமலம் இருந்தது. அதனை ஆண்டுவந்த அரசன் குட்டுவன். தலைவியின் மேனி இந்தக் கழுமலம் என்னும் ஊரைப்போல அழகுடன் திகழ்ந்ததாகக் கூறப்படுகிது. [3]

காண்க

அடிக்குறிப்பு

  1. "குடையொடு கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தை" - நற்றிணை 234-ம் பாடல் எனக் கருதப்படும் பிற்சேர்க்கைப் பாடல்.
  2. குடவாயிற் கீரத்தனார் அகநானூறு 44
  3. சாகலாசனார் - அகம் 270
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.