சோழனை எதிர்த்த எழுவர்

சோழனை எதிர்த்த எழுவர் என்போர் சங்க காலத்தில் பெரும்பூட் சென்னி என்னும் சோழப் பெருவேந்தனை எதிர்த்துத் தாக்கிய கூட்டணியைச் சேர்ந்தவர்கள். இந்தத் தாக்குதல் பற்றிக் குடவாயிற் கீரத்தனார் அகநானூறு 44ஆவது பாடலில் குறிப்பிடுகிறார்.

இக்கூட்டணியில் இடம் பெற்றிருந்தோர்:

  1. நன்னன்
  2. ஏற்றை
  3. அத்தி (நறும்பூண் அத்தி)
  4. கங்கன்
  5. கட்டி
  6. புன்றுறை
  7. கணையன்

.

இப்போர் கட்டூர் என்னுமிடத்தில் நடைபெற்றது. போரில் சோழர் படைத்தலைவன் பழையன் என்பவன் கொல்லப்பட்டான். எதிர்த்த கணையன் பிடிபட்டான். சோழன் அவனை தன் ஊர் கழுமலத்துக்குக் சொண்டு சென்று சிறையில் அடைத்தான்.

மேலும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.