ஈ (எழுத்து)

( ) தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் நான்காவதாக வைக்கப்பட்டுள்ள எழுத்தும் இதுவே. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை "ஈகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஈயன்னா" என்பது வழக்கம்.

ஈ (எழுத்து)
தமிழ் எழுத்துகள்
க்ங்ச்ஞ்ட்
ண்த்ந்ப்ம்
ய்ர்ல்வ்ழ்
ள்ற்ன்

"ஈ" யின் வகைப்பாடு

தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]

"ஈ" என்ற சொல்

தமிழ் எழுத்துக்களில் , , கா, கை, கோ, தா, தீ, தை, நீ, பா, பீ, பூ, பை, போ, மா, மை, வா, வை ஆகிய எழுத்துக்கள் தனித்து நின்று ஒரு சொல்லாக அமைகின்றன. இவற்றுள் யும் ஒன்றாகும். என்ற சொல் எனப்படும் பூச்சியைக் குறிக்கின்றது.

இனவெழுத்து

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன.

  • இடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கும்போது , க்கு இன எழுத்தாக அமையும்.
  • இங்கு, ஈங்கு போன்ற சொற்களில் இகாரத்துக்குப் பதிலாக ஈகாரம் இடம்பெற்றாலும் பொருள் மாற்றம் இல்லாதிருப்பதைக் காணலாம். இதனால் , க்குப் பொருள் அடிப்படையில் இன எழுத்து ஆகிறது.

சொல்லில் ஈகாரம் வரும் இடங்கள்

'ஈ' எழுதும் முறை

தனி சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு முதலாக வரும் என்கின்றன தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்கள்[2]. இதிலிருந்து ஙீ, ஞீ, டீ, ணீ, யீ, ரீ, லீ, ழீ, ளீ றீ, ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வருவது மரபல்ல என்பது தெளிவு. எனினும் தற்காலத்தில், பிற மொழிச் சொற்களையோ பெயர்களையோ தமிழில் எழுதுவோர் சிலர் டீ, ரீ, லீ போன்ற எழுத்துக்களும் சொல் முதலாக வரும்படி எழுதுகிறார்கள். டீச்சர், ரீட்டா, லீவு போன்ற சொற்களை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஈகாரம் தனித்தும் மெய்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு இறுதியில் வரும்.

"ஈ" யும் மெய்யெழுத்துக்களும்

யுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து ஈகார உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. [3]. இதனால், ஆகார உயிர் மெய்களை வரிவடிவில் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஈகாரத்தைக் குறிக்கும் சுழியுடன் கூடிய "விசிறி" குறியீட்டையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது.


18 மெய்யெழுத்துக்களோடும் ஈகாரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.

மெய்யெழுத்துக்கள்சேர்க்கைஉயிர்மெய்கள்
வரிவடிவம்பெயர்வரிவடிவம்பெயர்
க்இக்கன்னாக் + ஈகீகீயன்னா
ங்இங்ஙன்னாங் + ஈஙீஙீயன்னா
ச்இச்சன்னாச் + ஈசீசீயன்னா
ஞ்இஞ்ஞன்னாஞ் + ஈஞீஞீயன்னா
ட்இட்டன்னாட் + ஈடீடீயன்னா
ண்இண்ணன்னாண் + ஈணீணீயன்னா
த்இத்தன்னாத் + ஈதீதீயன்னா
ந்இந்தன்னாந் + ஈநீநீயன்னா
ப்இப்பன்னாப் + ஈபீபீயன்னா
ம்இம்மன்னாம் + ஈமீமீயன்னா
ய்இய்யன்னாய் + ஈயீயீயன்னா
ர்இர்ரன்னார் + ஈரீரீயன்னா
ல்இல்லன்னால் + ஈலீலீயன்னா
வ்இவ்வன்னாவ் + ஈவீவீயன்னா
ழ்இழ்ழன்னாழ் + ஈழீழீயன்னா
ள்இள்ளன்னாள் + ஈளீளீயன்னா
ற்இற்றன்னாற் + ஈறீறீயன்னா
ன்இன்னன்னான் + ஈனீனீயன்னா

வரிவடிவம்

தமிழில் ஈகார ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் இப்போதுள்ளவாறே எப்போதும் இருந்ததில்லை. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் ஈகாரத்தைக் குறிக்கப் பயன் பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் அவ்வக்காலத்துக் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.

ஈகாரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் ஈகாரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், [[சிங்களம்}} முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் ஈகாரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.

பிரெய்லியில் ஈகாரம்

கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "பாரதி பிரெய்லி" தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஒரு எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் இரண்டாவது வரிசையில் வலது பக்கப் புள்ளியும், மூன்றாவது வரிசையில் இடது பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அது யைக் குறிக்கும். இதை அருகில் உள்ள படம் காட்டுகிறது.

பாரதி பிரெய்லியில் ஈகாரம்

குறிப்புக்கள்

  1. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11
  2. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 33
  3. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 15

உசாத்துணைகள்

  • இளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
  • பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.
  • வேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.