ஆம்பல் (மருந்து)

ஆம்பல் என்பது சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்து ஆகும். ஆம்பல் மலரின் இதழ், விதை, தண்டு, கிழங்கு என்பன அக்காலத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டன[1] போர்களின் போது போர் வீரர்களுக்கு ஏற்பட்ட வெட்டுக் காயத்திற்கு கருங்குழம்பைப் பூசி, நெருப்பில் கடுகையும் ஆம்பல் இதழ்களையும் இட்டு வரும் புகையை ஊதியதாகப் புறநானூற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன.

கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி

ஐவி சிதறி ஆம்பல் ஊதி

இசைமணி எறிந்து காஞ்சி பாடி

நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ

காக்கம் வம்மோ காதலம் தோழி!

வேந்துறு விழுமம் தாங்கிய

பூம் பொறிக்கழல் கால் நெடுந்தகைப் புண்ணே”[2]

இன்றும் நம் நாட்டு மருத்துவத்தில் தென்னங் குருத்து, வேம்பு, புளி, நெல்லி இவற்றின் இலைகளும், அல்லி, தாமரை, குவளை, செவ்வாழைப் பூக்களும் சிரங்கு, கரப்பன், தொழுநோய் (குட்டம்) போன்ற பல தோல் நோய்களுக்கும் புண்களுக்கும் இவற்றின் புகை ஊதப்படுகிறது.[1] இவற்றின் புகை கெட்ட ஆவிகளைப் போக்கும் என்ற நம்பிக்கையும் அக்காலத்தே இருந்துள்ளது.[3]

மேற்கோளும் குறிப்புகளும்

  1. அரசி (25, மே 2012). "ஆம்பல்". பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
  2. அரிசில் கிழார், காஞ்சித் திணை, பேய்க் காஞ்சித்துறை, புறநானூறு, பாடல் 281
  3. "தமிழர் வாழ்வில் வேம்பு". கலாநிதி. திருமதி விவியன் சத்தியசீலன். யாழ்மண் (அக்டோபர் 3, 2012). பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.