1810கள்
1810கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1810ஆம் ஆண்டு துவங்கி 1819-இல் முடிவடைந்தது.
ஆயிரவாண்டுகள்: | 2-ஆம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 18-ஆம் நூற்றாண்டு - 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1780கள் 1790கள் 1800கள் - 1810கள் - 1820கள் 1830கள் 1840கள் |
ஆண்டுகள்: | 1810 1811 1812 1813 1814 1815 1816 1817 1818 1819 |
நிகழ்வுகள்
- இலங்கையில் புதிய நீதிமன்றச் சட்டம் இயற்றப்பட்டது (1811). மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice என அழைக்கப்படும் நீதிமன்றம் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டன. கிரிமினல் வழக்குகளுக்கு ஜூரி முறையும் அமுலுக்கு வந்தது.
- ஐரோப்பாவில் நெப்போலியப் போர்கள் முடிவுக்கு வந்தன.
- ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையே போர் 1815 வரை நீடித்தது.
- கண்டி இராச்சியம் 1815 இல் பிரித்தானியாவால் கைப்பற்றப்பட்டது.
- மரத இராச்சியத்துக்கும் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிக்கும் இடையில் 1818 இல் மூன்றாம் போர் மூண்டது.
- இலங்கையில் உருளைக்கிழங்கு விளைச்சல் ஆரம்பிக்கப்பட்டது.
- அமெரிக்காவிலிருந்து மதப்பிரசாரகர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் (1812).
- அமெரிக்க மதப்பிரசாரகர்கள் கொழும்பு வந்து சேர்ந்தனர் (1816)
இலங்கையின் ஆளுநர்கள்
- ரொபேர்ட் பிரவுண்றிக் (1812)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.