0கள்
0கள் (0s) என்பது பொதுவாக முதலாம் ஆயிரவாண்டினதும் முதலாம் நூற்றாண்டினதும் முதலாம் பத்தாண்டைக் குறிக்கும். எனினும் இப்பத்தாண்டு காலத்தின் ஆண்டுகள் எப்போதும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ஜூலியன் நாட்காட்டியிலோ கிரெகோரியன் நாட்காட்டியிலோ சுழியம் ஆண்டு (0) கிடையாது. எனவே கிபி 1 இற்கு முன்னர் கிமு 1 ஆண்டு இருந்தது.
ஆயிரவாண்டுகள்: | 1-ஆம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 1-ஆம் நூற்றாண்டு கிமு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | கிமு 20கள் கிமு10கள் கிமு 0கள் - 0கள் - 10கள் 20கள் 30கள் |
ஆண்டுகள்: | 1 2 3 4 5 6 7 8 9 |

கிபி 1ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிழக்கு அரைக்கோளம்
இக்கட்டுரை கிபி 1–9 காலப்பகுதியைப் பற்றியது, அனோ டொமினி காலத்தின் முதல் 9 ஆண்டுகளைப் பற்றியது.
0களில் நடந்த நிகழ்வுகள் ஆண்டுவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
==
இடம் வாரியாக
ரோமப் பேரரசு
- அகஸ்டசின் பணிப்பின் பேரில் டிபேரியசு செருமானியாவில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடக்கினான் (1–5).
- கையசு சீசர், லூசியசு பவுலசு ஆகியோர் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
- உரோமில் பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது[1].
ஆப்பிரிக்கா
- இன்றைய எத்தியோப்பியா, எரித்திரியாவை மையப்படுத்திய ஆக்சும் இராச்சியம் உருவானது (அண்ணளவான காலம்).
சமயம்
- இயேசு பிறப்பு (அனோ டொமினி முறையை அறிமுகப்படுத்திய டயோனீசியசு எக்சிகூஸ் என்பவரின் படி[2][3].) ஆனாலும், டயோனீசியசு கணக்கிட்ட முறையில் தவறு ஏற்பட்டதால், இயேசுவின் பிறப்பை கிமு 1 ஆகக் குறித்தார் எனப் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்[2][3].
- சீனாவில் பௌத்தம் அறிமுகமானது.
இடம் வாரியாக
ஆசியா
- சீனாவில் சென்றா ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 60 மில்லியன் (59,594,978 மக்கள்)[4]
- சீன மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வியட்நாமில் ஒரு மில்லியன் மக்கள் வாந்தனர்.
இடம் வாரியாக
ரோமப் பேரரசு
- ஆகுஸ்டசின் ஆட்சி 10 ஆண்டு காலத்துக்கு நீடிக்கப்பட்டது.
- ஆகுஸ்டஸ் தனது பேரன் கையசு சீசரை தனது நேரடி வாரிசாக்கும் நோக்கில் தத்தெடுத்தான். கையசு கிழக்கு நாடுகளுக்கு சிறப்புத் தூதரராக அனுப்பப்பட்டான்.
- லூசியசு லாமியா, மார்க்கஸ் மெசாலினசு ஆகியோர் ரோமப்பேரரசின் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஐரோப்பா
- மார்க்கொமானி அரசன் மார்பொட் என்பவனின் கீழ் ஐந்து செருமனிய இனங்கள் ஒன்றுபட்டன. இவ்விணைப்பு ரோமப் பேரரசுக்கு ஒரு அச்சுறுத்தலாக அமைந்தது. இவ்வினங்கள் பின்னர் சிலேசியா, சாக்சொனி ஆக உருவெடுத்தன.
இடம் வாரியாக
ரோமப் பேரரசு
- பேரரசன் ஆகுஸ்டசு டிபேரியசு என்பவனை ரோமுக்கு அழைத்து தனது வாரிசாகவும், தனக்கு அடுத்த பேரரசன் ஆகவும் அறிவித்தான். அதே நேரம், அகிரிபா பஸ்துமசு என்பவனையும் தனது வாரிசாக அறிவித்தான்.
- டிபேரியசு தனது வார்சாக செருமானிக்கசு என்பவனைத் தனது வாரிசாக அறிவித்தான்.
- ரோமப் பேரரசுக்கும் செருமனிய பழங்குடி செருஸ்க்கி என்பவர்களுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
மத்திய கிழக்கு
பார்த்தியா நிலப்பகுதியின் (இன்றைய ஈரானில்) அரசன் பிராத்தசிசு மற்றும் அரசி மூசா ஆகியோர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இடம் வாரியாக
ரோமப் பேரரசு
- குனொபெலினசை பிரித்தானியாவின் அரசனாக ரோமப் பேரரசு அங்கீகரித்தது.
- கிம்பிரி, சாரிடெசு ஆகிய செருமனியப் பழங்குடிகள் தங்கள் தூதர்களை ரோமுக்கு அனுப்பியது.
- ரோம ஆட்சியாளர்களாக சின்னா மாக்னசு, லூசியசு மெசாலா வெலெசசு ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
- ரோமப் பேரரசன் டிபேரியசு செருமானிய உட்பகுதியை (இன்றைய லக்சம்பர்க், தெற்கு நெதர்லாந்து, பெல்ஜியத்தின் ஒரு பகுதி) கைப்பற்றினான்.
கல்வெட்டுகள்
- திருநாதர் குன்றுக் கல்வெட்டு - தமிழ் எழுத்துக்களால் ஆன கல்வெட்டு
இடம் வாரியாக
ரோமப் பேரரசு
- படைகளில் போர் புரிந்து இளைப்பாறியவர்களுக்காக நிதியம் ஒன்றை ரோமப் பேரரசன் அகஸ்ட்டஸ் நிறுவினான்.
- ரோமில் இடம்பெற்ற உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக அகஸ்ட்டசு மன்னன் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சோளத்தின் அளவை இரண்டு மடங்காக்கினான்.
- அகஸ்ட்டசு தனது வளர்ப்பு மகனான அக்ரிப்பா பொஸ்டுமசு என்பவனை பிளனேசியா தீவுக்கு நாடு கடத்தினான்.
- மார்க்கசு எமிலியசு லெப்பிடசு, லூசியசு அருண்டியசு ஆகியோர் ரோமப் பேரரசின் ஆட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
சீனா
- பெப்ரவரி 3 - சீன மன்னன் பிங் டை தனது 14வது அகவையில் இறந்தான். 2 வயதான ரூசி யிங் சீன அரசனாக அறிவிக்கப்பட்டான்.
இடம் வாரியாக
ரோமப் பேரரசு
- இல்லிரியான்ஸ் ரோம ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர்.
- பன்னோனியான்ஸ் டால்மேடியன் மற்றும் இல்லிரியான்ஸ் ஆகியோருக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர்.
- கான்கார்டின் கோவில் கட்ட தொடங்கப்பட்டது.
ஆசியா
- வோநோனஸ் I பார்தியாவின் மன்னனாகிறான்.
இடம் வாரியாக
ஆசியா
- வோநோனஸ் I பார்தியாவின் மன்னனாகிறான்.
இடம் வாரியாக
ரோமப் பேரரசு
- டியூட்டோபர்க் காட்டுப்பகுதியில் வாருசின் தலைமையிலான ரோம இராணுவம் தோற்றதை அடுத்து, இலத்தீன் மற்றும் செருமனிய மொழி பேசும் இனத்தவர்களைப் பிரிக்கும் எல்லையாக ரைன் ஆறு நிறுவப்பட்டது.
- பனோனியா (இன்றைய ஹங்கேரி) ரோம ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
- மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக, திருமணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரோமில் சட்டம் இயற்றப்பட்டது. இதன் படி, குழந்தைகளற்ற உறவுமுறை தடை செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
- The Silkroad Foundation's silk road chronology
- Georges Declercq, Anno Domini: The origins of the Christian Era (Turnhout, Belgium: Brepols, 2000), pp.143–147.
- G. Declercq, "Dionysius Exiguus and the introduction of the Christian Era", Sacris Erudiri 41 (2002) 165–246, pp.242–246. Annotated version of a portion of Anno Domini.
- Klingaman, William K., The First Century: Emperors, Gods and Everyman, 1990, p 56
குறிப்பிடத்தக்கவர்கள்
- பிங் டி, அரசர் ஆன் அரசமரபு சீனா, ஆண்டது கிமு 1 – கிபி 5
- ருசி யிங், அரசர் ஆன் அரசமரபு சீனா, ஆண்டது கிபி 6–9
- அர்மினியஸ், செருமானியப் போர் தலைவர்
- அகஸ்ட்டஸ், ரோம அரசர் (கிமு 27 – கிபி 14)
- ஆவிட், ரோமப் புலவர்
- லிவி, ரோம வரலாற்றாசிரியர்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.