கீழையூர் கடைமுடிநாதர் கோயில்
கீழையூர் கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 18வது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற திருக்கடைமுடி (கீழையூர்) கடைமுடிநாதர் கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
பெயர்: | திருக்கடைமுடி (கீழையூர்) கடைமுடிநாதர் கோயில் |
அமைவிடம் | |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கடைமுடிநாதர், அந்திசம்ரட்சணீசுவரர்[1] |
உற்சவர் தாயார்: | அபிராமவல்லி |
தல விருட்சம்: | கிளுவை |
தீர்த்தம்: | கருணாதீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
இறைவன், இறைவி
இங்கு உள்ள இறைவன் கடைமுடிநாதர், இறைவி அபிராமி. இத்தலத்து மூலவர் சுயம்பு மூர்த்தி. இங்கு காவிரி ஆறு உத்தரவாகினியாக வடக்கு நோக்கிப் பின்னர் மேற்காகச் செல்வது முக்கியமான ஒன்று.[1]
அமைவிடம்
செம்பொனார் கோயிலுக்கு வடகிழக்கே இரண்டு கி.மீ தொலைவிலுள்ளது.இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
வணங்கியோர்
பிரம்ம தேவர், கண்வ மகரிஷி ஆகியோர் வணங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- தமிழகச் சிவாலயங்கள் 308; திருமகள் நிலையம்;பக்கம் 129
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.