ஹன்னிபால்
ஹமில்கர் பார்காவின் மகனானஹன்னிபால் ,[n 1] (248–183 அல்லது கி.மு.182),[n 2] பொதுவாக ஹன்னிபால் என அழைக்கப்படுவார் (பியூனிக்கில்: ஹன்பால் ஹன்னிபால் அல்லது ஹன்னீபால் [2][3], "பால் என்றும் பெறும், அதற்கு அருள்நிறைந்த என்றும் பொருள் உண்டு"[3][4] அல்லது "பாலின் அருள்" என்றும் பொருள் பெறும்[2] அல்லது ஹன்னோபால் என்ற பெயரில் அதே பழைய அர்த்தத்துடன் உச்சரிக்கப்படும்[5], அல்லது இறுதியாக டின்பால் ʼஅத்னிபால் , எனப் பெயர் பெறும், அதற்கு "பால் என் கடவுள்" என்று பொருள்[5]) கிரேக்க மொழி: Ἁννίβας, ஹன்னிபாஸ் ) ஒரு கார்த்தீஜீனிய மிலிட்டரி அதிகாரி, வரலாற்றின் மிகத் திறமையான அதிகாரிகளில் ஒருவர் எனப் பிரபலமாகப் பெயர் பெற்ற ஒரு சாமர்த்தியவாதி. அவருடைய தந்தை ஹமில்கர் பர்கா முதல் பியூனிக் போரின் போது தலைமை தாங்கிய கார்த்தீஜீனிய அதிகாரியாவார். மாகோவும் ஹஸ்த்ரூபாலும் அவரது இளைய சகோதரர்களாவர். அவரே அழகு நிறைந்த ஹஸ்த்ரூபாலின் மைத்துனர் ஆவார்.
Hannibal, son of Hamilcar Barca | |
---|---|
248–183 or 182 BC | |
சார்பு | Carthaginian Republic |
தரம் | General, commander-in-chief of the Carthaginian armies |
சமர்/போர்கள் | Second Punic War: Battle of Lake Trasimene, Battle of Trebia, Battle of Cannae, Battle of Zama |
ரோம் (அன்றைய ரோமக் குடியரசு) அரசு கார்தேஜ், மற்றும் மாசிடோனின் ஹெலனித்துவ அரசாங்கங்கள், சைராகாஸ், மற்றும் செலுசிட் சாம்ராஜ்யம் போன்ற மகாசக்திகளின் மீது ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த பரபரப்பு நிறைந்த காலகட்டத்தில் மத்தியக்கரை பகுதிகளில் ஹன்னிபால் வாழ்ந்து வந்தார். இரண்டாம் பியூனிக் போரின் போது போர் யானைகள் கொண்ட படையுடன் ஐபீரியாவில் இருந்து பைரீனீஸை எதிர்த்தும் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் இருந்து வடக்கு இத்தாலிக்கும் அவர் படையெடுத்துச் சென்றது அவரது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தாலியில் இருந்த அவரது ஆரம்பகால சில ஆண்டுகளில், டிரிபியா, டிராசிமீன், மற்றும் கன்னே ஆகிய மூன்று மகாவெற்றிகளைப் பெற்று, பல ரோமக் கூட்டாளிகளையும் வென்றார். ஹன்னிபால் 15 ஆண்டுகளில் இத்தாலியின் பெரும்பாலான பகுதியை கைப்பற்றினார். இருந்தாலும் ரோமானியர் ஒருவர் வடக்கு ஆப்பிரிக்காவை மீண்டும் கையகப்படுத்தியது ஹன்னிபாலை கார்தேஜுக்கு திரும்பிச் செல்ல நிந்தித்தது. ஸாமா போர் என்ற போரில் சிபியோ ஆப்ரிகானஸால் மோசமாகத் தோற்கடிக்கப்பட்டார். ஹன்னிபாலின் நுணுக்கங்களை சிபியோ கற்றுக் கொண்டு தானும் சிலவற்றை உருவாக்கி மிக சாமர்த்தியமாக கையாண்டான். இதற்கு முன் ஹன்னிபாலின் சகோதரனான ஹஸ்த்ருபாலை ஸ்பெயினை விட்டு விரட்டியவன் இப்போது ரோமின் தலைவனையும் ஸாமாவில் தோற்கடித்துவிட்டான்.
போருக்குப் பின் சஃபீடின் தலைவனாக முடிசூடினார் ஹன்னிபால். ரோமால் புகுத்தப்பட்ட போர்ச் செலவினங்களுக்கான பணத்தை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஈடுசெய்ய சட்டம் இயற்றினான். ஹன்னிபாலின் முயற்சிகள் கார்தீஜீனிய மேல் தட்டுக் குடியினராலும் ரோமாலும் ஏற்றுக் கொள்ளப்படாததாக இருந்தது. தானே தன்னை நாடு கடத்திக் கொண்டான். அவனது நாடு கடத்தப்பட்ட காலத்தின் போது, செலூசிட்டின் அரசவையில் வாழ்ந்து வந்தான். அங்கு ரோமை எதிர்த்து அந்தியோகஸ் III போரிட்ட போது அவனுக்கு ரானுவ ஆலோசகராக பணி செய்தான். அந்தியோகஸ் தோற்றுப் போனதையடுத்து, ரோமின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டான். மீண்டும் ஹன்னிபால் ஓடிப்போனான், அப்போது ஆர்மேனியாவில் நின்றான். பித்தியானியாவின் அரசவையில் அவனது ஓட்டம் முடிவுக்கு வந்தது. அங்கு பெர்காமம் என்பவனை எதிர்த்து ஒரு அட்டகாசமான கப்பற்படை வெற்றியைப் பெற்றுத் தந்தான். அதன்பின் துரோகம் செய்தவர்களால் ரோமர்களிடம் பிடிபட்டான்.
மிகச்சிறந்த மிலிட்டரி நுட்பம் மற்றும் நுணுக்கம் தீட்டுவதில் எப்போதும் பேர் பெற்று விளங்கினான். பிற்காலத்தில் மகா அலெக்ஸாண்டர், ஜூலியஸ் சீசர், சிபியோ, மற்றும் எபிரஸின் பைரஸ் ஆகியோர் வரிசையில் பழம்பெறும் சிறப்பு பெற்றவர்களில் ஒருவராக இணைத்து பேசப்பட்டான். சிறந்த வீரத்தளபதி யார் என்று சிபியோ கேட்டதற்கு, அலெக்ஸாண்டரும் பைரசும் நானும் தான் என்று ஹன்னிபால் பதிலளித்ததாக புளூடார்க் கூறுகிறது,[6] அதே விஷயத்தை மற்றொரு பதிப்பில், பைரசும், சிபியோவும் தானும் தான் எனக் கூறியதாகப் போடப்பட்டுள்ளது.[7] மிலிட்டரி வரலாற்று அறிஞரான தியோடர் அய்ரால்ட் டாட்ஜ் ஒருமுறை ஹன்னிபாலை "நுணுக்கங்கள் தீட்டுவதில் கர்த்தா" என ,[8] வர்ணித்தார். ஏனென்றால் அவனது மகா எதிரியான ரோம் அரசாங்கமே அதன் படைப் பாசறையில் ஹன்னிபாலின் மிலிட்டரி நுணுக்கங்களை செயல்படுத்த முயற்சித்தது. இந்த பாராட்டு நவீன காலத்தில் பெரும் அங்கீகாரத்தை தேடித் தந்தது. நெப்போலியன் போனாபார்ட் மற்றும் டியூக் ஆஃப் வெல்லிங்டன் போன்றவர்களைப் போல் "வரம்பெற்ற நுணுக்கவாதி" எனப் பெயர்பெற்றான். அவனுடைய வாழ்க்கை பல படங்களுக்கும் குறும்படங்களுக்கும் அடிப்படையாக அமைந்தது.
"நாங்கள் ஒரு வழியைக் கண்டுபிடிப்போம், அல்லது ஒன்றை உருவாக்குவோம்" என்கிற பிரபலமான வாக்கியத்தை அவனோடு இணைத்து மகிழ்ந்தனர்.
பின்னணியும் ஆரம்பகால வாழ்க்கையும்
ஹமில்கர் பர்கா என்கிற கார்தீஜினிய தலைவரின் மகன்களில் ஒருவன் தான் ஹன்னிபால். அவனுக்கு பல சகோதரிகளும் இரண்டு சகோதரர்களும் இருந்தார்கள், ஹஸ்த்ரூபால் மற்றும் மாகோ. அழகுமிக்க ஹஸ்த்ரூபால் மற்றும் நுமிடிய அரசனான நரவாஸ் அவனது மைத்துனர்கள் ஆவார்கள். மெர்சினரி போர் மற்றும் ஐபீரியாவின் அரசனான பியூனிக்குடன் அவனது தந்தை சண்டை போடுகையில் ஹன்னிபாலின் மைத்துனர்களும் உடன் இருந்து போரிடும் அளவுக்கு பெரியவர்களாக இருந்தார்கள். சகோதரிகளும் திருமணமாகியிருந்தனர். ஆனால் அன்று ஹன்னிபால் ஒரு கைக்குழந்தை. ஹமில்கார் பர்காவின் பட்டப்பெயரின் தாக்கத்தால், ஹமில்காரின் குடும்பத்தை பார்கிட்களின் குடும்பம் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டனர். இருந்தாலும், பார்கா ("இடிதாங்கி" என பொருள்) என்ற பட்டப்பெயர் ஹமில்கருக்கும் மட்டும் பயன்படுத்தப்பட்டதா அல்லது அவருடைய பரம்பரைக்கே பயன்படுத்தப்பட்டதா என்ற விவாதமும் ஏற்பட்டது. குடும்பத்துக்கே என்றால், நிச்சயம் 'பார்கா' என்ற பெயர் ஹன்னிபாலுக்கும் அவரது சகோதரர்களுக்கும் பொருந்தும்.[9]
முதல் பியூனிக் போரில் கார்தீஜின் தோல்விக்குப் பின், தன் குடும்பத்தை முன்னேற்றவும் கார்தேஜின் வளர்ச்சிகளுக்கும் பாடுபடத் தொடங்கினான். அதனை மனதில் வைத்து போராடியதுடன், கேட்சின் ஆதரவும் கிடைத்ததால் ஐபீரிய தீபகர்ப்பத்தின் பழங்குடியினரை அடக்கியாளத் தொடங்கினான் ஹமில்கர். ஐபீரியா (ஹிஸ்பானியா) நாட்டுக்கு ஹன்னிபாலின் படையை அனுப்பி வைப்பதற்குக் கூட ஏழ்மையான நிலையில் கார்தீஜின் கப்பற்படை இருந்தது; அதற்குபதில், பில்லர்ஸ் ஆஃப் ஹெர்குலஸை எதிர்த்து ஹமில்கார் படையெடுத்தான், அதற்காக ஜிப்ரல்டர் ஜலசந்தி (இன்று மோராக்கோ/ஸ்பெயின்)வழியாக அனுப்பி வைத்தான்.
லிவியைப் பொருத்தவரையில், ஹன்னிபாலின் தந்தையிடம் வந்து போருக்குத் தன்னோடு அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டான், அதற்கு ஒத்துக்கொண்ட ஹமில்கார், வாழ்க்கையில் ஒருபோதும் ரோமுடன் நட்பு பாராட்டக் கூடாது என்று சத்தியம் வாங்கினார். மிக சிறிய வயதில் தன் தந்தையிடம் வெளிநாட்டுப் போருக்கு அழைத்துச் செல்லும்படி கெஞ்சியதாக ஹன்னிபாலைப் பற்றி ஒரு பேச்சும் உண்டு. அக்கதையில், ஹன்னிபாலின் தந்தை அவனை தன்னோடு அழைத்துச் சென்று, பலி கொடுக்கும் பீடத்துக்கு எடுத்துச் சென்றதாகக் கூறுவர். ரோமுடன் நட்பு பாராட்ட மாட்டேன் என்று சொல்லி பலிபீடத்தில் எறிந்து கொண்டிருந்த தீயின் மீது சத்தியம் செய்யும்படி ஹன்னிபாலை ஹமில்கார் கேட்டுக் கொண்டார். மற்றொரு கதைப்படி, "எனக்கு வயது வந்தபின் சத்தியம் செய்கிறேன்... என்று ஹன்னிபால் தன் தந்தையிடம் கூறியதாகச் சொல்வார்கள்ரோமின் முடிவை நிர்ணயிக்க நெருப்பையும் இரும்பையும் பயன்படுத்துவேன். "[8][10]
ஹிஸ்பானியாவின் போருக்கு ஹன்னிபாலின் தந்தையுடன் சென்றான். போரில் அவனது தந்தை கொல்லப்பட்டதையடுத்து, ஹன்னிபாலின் மைத்துனனான ஹஸ்த்ரூபால் படைக்குத் தலைமையேற்று நடத்தினான். ஹன்னிபால் அவனுக்குக் கீழ் அதிகாரியாக பணியாற்றினான். கார்தீஜியர்களின் ஐபீரியா மீதுள்ள ஆர்வத்தை வைத்து ஒரு ஒருங்கிணைப்ப்புக் கொள்கையை ஹஸ்த்ரூபால் தீட்டினான். அதில் கார்தேஜ் ஈப்ரோ ஆற்றுக்கு வடக்கே விரிவபடுத்தாது என்று ரோமுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தினான். அதே நேரம் ரோமும் அதன் தெற்குப் பகுதியில் விரிவுபடுத்தக் கூடாது. அருகாமையில் உள்ள பழங்குடியினருடன் அரசியல் உறவுகளை வலுப்படுத்தி கார்தீஜினியரின் ஒற்றுமையை நிலைப்படுத்த ஹஸ்த்ரூபாலும் முயற்சி செய்தான். இந்த உடன்பாட்டின் ஒரு பகுதியாக ஹன்னிபாலுக்கும் ஐபீரிய இளவரசியான ஐமில்சி என்பவருக்கும் திருமணமும் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஹஸ்த்ரூபால் கொலை செய்யப்பட்ட போது (221 கிமு), போர்ப்படைத் தளபதியாக ஹன்னிபால் தலைமையேற்றான். அதனை கார்தீஜினிய அரசு உறுதி செய்தது. இந்த இளம் கார்தீஜினியனைப் பற்றி லிவி என்னும் ரோம மேதை இவ்வாறு குறிப்பிடுகிறார்:
No sooner had he arrived...the old soldiers fancied they saw Hamilcar in his youth given back to them; the same bright look; the same fire in his eye, the same trick of countenance and features. Never was one and the same spirit more skillful to meet opposition, to obey, or to command...[11]
அதிகாரப் பொறுப்பேற்ற பின், தன் கீழிருந்தவற்றை ஒருங்கிணைக்கவும் ஈப்ரோவுக்கு தெற்கே இருந்த ஹிஸ்பானியாவைக் கைப்பற்றவும் இரண்டு ஆண்டுகளை செலவிட்டான்.[12] இருப்பினும், ஐபீரியாவில் ஹன்னிபால் வளர்ந்து வருவதைப் பார்த்து அஞ்சிய ரோம், சகுண்டம் என்னும் நகரத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. அதில் ஈப்ரோ ஆற்றின் குறிப்பிட்ட அளவு தூரத்தையும் அந்நகரத்தையும் அதன் பாதுகாப்பில் வைத்துக் கொள்வததாக ஏற்படுத்தப்பட்டது. இதனை ஹஸ்த்ரூபாலுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அத்துமீறல் என்று ஹன்னிபால் அறிவித்தான், அதனால் அந்நகரத்தைச் சுற்றி முற்றுகையிட்டான், எட்டு மாதங்கள் கழித்து அது வீழ்ந்தது. ஒப்பந்தத்துக்கு எதிரான இந்த செயலை ரோம் எதிர்த்து கார்த்தேஜில் இருந்து நியாயம் கோரியது. ஹன்னிபாலின் மாபெரும் புகழை மனதில் வைத்து, கார்தீஜினிய அரசு ஹன்னிபாலின் நடவடிக்கைகளை மறுத்தது. அந்த ஆண்டின் இறுதியில் அந்தப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இதற்கு பின் ஹிஸ்பானியா மற்றும் தெற்கு காவுல் வழியாக போரை இத்தாலியின் மையப் பகுதிக்கு எடுத்துச் செல்ல படைகளை அணிவகுத்து எடுத்துச் சென்றான் ஹன்னிபால்.
இத்தாலியில் நடந்த இரண்டாவது பியூனிக் போர் (218–203 BC)
இத்தாலியை நோக்கிய நிலம்தாண்டிய பயணம்

முதன்முதலில் இப்பயணத்தை ஹன்னிபாலின் மைத்துனான ஹஸ்த்ரூபால் திட்டமிட்டான்.
ஹஸ்த்ரூபால் கிமு 229இல் கார்தீஜியாவின் தளபதியாக ஐபீரியாவில் பொறுப்பேற்றான். அப்பதவியில் கிமு 221 வரை எட்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து வகித்தான். கார்தேஜுக்கும் போ ஆற்றுப்படிகையின் வடக்கு இத்தாலியில் உள்ள செல்ட்ஸுக்கும் ஏற்பட இருந்த கூட்டணியை ரோமர்கள் எப்படியோ சீக்கிரமாகவே தெரிந்து கொண்டனர். கார்தீஜினியரின் உதவியுடன் இத்தாலியைப் பிடிக்கவே இந்த படைகள் திரட்டப்பட்டன. கிமு 225 இல் போ பகுதியை முன்னறிவிப்பு இல்லாமல் ரோமர்கள் கைப்பற்றினார்கள். கிமு 220இல் அப்பகுதியை கால்லியா சிஸால்ல்பினா என்ற பெயரில் இணைத்தனர் [13]. அதே நேரத்தில் ஹஸ்த்ரூபால் (கிமு 221)இல் கொலை செய்யப்பட்டான், அதனால் ஹன்னிமால் பொறுப்புக்கு வந்தான். காவ்லோ- இத்தாலியின் கார்தீஜினிய படையெடுப்பின் அச்சுறுத்தலை அடுத்து (கார்தீஜினிய போர்தளபதியும் கொல்லப்பட்டுவிட்டதால்), பாதுகாப்பாக இருப்பதாக தவறான எண்ணம் ரோமர்களுக்குள் உருவானது. அதனால், கிமு 218இல் இரண்டு வருடங்கள் கழித்து ஆச்சரியமான விதத்தில் ரோமர்களை வீழ்த்தினான், ஹன்னிபால். அதன் மூலம் தன் மைத்துனன் செய்யத் திட்டமிட்ட காவ்லோ-கார்தீஜினிய படையெடுப்பை வென்றான்.
கிமு 218இன் இளையுதிர் கால பிற்பகுதியில், புதிய கார்தேஜை ஹன்னிபால் உருவாக்கினான். பைரினிசின் வடக்குப் பழங்குடியினர் மூலம், அறிவுப்பூர்வ மலை நுணுக்கங்கள் மற்றும் கடுமையான சண்டையிடுதல் மூலம் பழங்குடியினரை அடக்கினான். புதிதாக கைப்பற்றப்பட்ட பகுதியில் 11,000 படைகளை காரிசானில் விட்டு வைத்தான். பைரினீஸை அடுத்து, அவனது தாய் மண்ணை விட்டு வெளியேற மறுப்புத் தெரிவித்து மேலும் 11,000 ஐபீரியப் படைகளை அனுப்பி வைத்தான். சொன்னபடியே 40,000 காலாற்படைகள் மற்றும் 12,000 குதிரை வீரர்களுடன் காவுலுக்குள் நுழைந்தான் ஹன்னிபால்.[14]

பைரினீஸ், ஆல்ப்ஸ் மற்றும் பல முக்கிய ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது என்பதை ஹன்னிபால் உணர்ந்தான். அதோடு காவுலின் பகுதியைக் கடந்து சென்றதற்காக எதிராலியையும் திருப்திப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கிமு 218இல் தொடங்கி, பைரினீஸின் வடக்கு பழங்குடிகள் வழியாக எளிதாகப் போராடி, காவுலியத் தலைவர்களை சமாளித்து ரோமர்கள் அவனது முன்னேற்றத்துக்கு எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முன் ரோன் ஆற்றை அடைந்தான். செப்டம்பரில் ரோனை அடைந்ததும், ஹன்னிபாலின் படை எண்ணிக்கை 38000 காலாற்படை வீரர்கள், 8000 குதிரை படை வீரர்கள் மற்றும் 37 போர் யானைகளாக வளர்ந்தது.[15]

அவன் கடந்து செல்வதைத் தடுக்க முயற்சித்த உள்ளூர் படையை எளிதாகக் கையாண்டு வெற்றி பெற்று, மத்தியதரைக் கடற்கரை வழியாகப் படை திரண்டு வந்த ரோமப் படையையும் ரோன் பள்ளத்தாக்கில் விரட்டினார்கள். ஆல்ப்ஸ் வழியாக அவன் வைத்திருந்த பாதை தான் இன்றும் அறிஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்துக்குண்டானதாக் இருந்து வருகிறது. (பாலிபியுஸ், என்ற ஹன்னிபாலின் காலத்துக்கு மிக அருகில் இருந்த ஒரு பதிவின் படி, அந்த பாதை ஏற்கனவே விவாதிக்கப்பட்டுவிட்டதாகப் போடப்பட்டுள்ளது). டுரோம் பள்ளத்தாக்கு வழியாக வந்த படை அணிவகுப்பு, மற்றும் கோல் டி மாண்ட்ஜெனெவ்ரே பகுதியில் மாடர்ன் ஹைவேக்கு தெற்கில் உள்ள முக்கியப் பகுதியைக் கடந்தது அல்லது ஐசீர் மற்றும் ஆர்க்கின் பள்ளத்தாக்குகளுக்கு வடக்காக கடந்து சென்றது, இப்போதைய கோல் டி மாண்ட் செனிஸ் அல்லது லிட்டில் செயின்ட் பெர்னார்டு பாஸ் ஆகிய முக்கிய மலை வழியாகக் கடந்தது போன்றவை மிகவும் சுவாரஸ்யமான நவீன கோட்பாடுகளாக கருதப்படுகின்றன.[16]
லிவியின் பதிவுகள்படி மிகக் கடுமையான சிரமங்களை மேற்கொண்டுதான் இத்தனை இடங்களையும் கடந்ததாக கூறப்பட்டுள்ளது.[17] பாறையை உடைக்க நெருப்புடன் வினிகரைக் கலந்து பயன்படுத்தியது ஹன்னிபாலின் புத்திகூர்மையை வெளிப்படுத்தியது. பாலிபியூசைப் பொறுத்த வரையில், இத்தாலிக்கு வருகையில் 20000 காலாற்படை வீரர்கள், 4000 குதிரை வீரர்கள் மற்றும் ஒரு சில யானைகளுடன் மட்டுமே வந்ததாகக் கூறுகிறார். படைகளின் எண்ணிக்கையைப் பற்றி பாலிபியூஸ் சொன்ன எண்ணிக்கை சரியானால், ரோனைக் கடந்த பின் அவனது படைகள் பாதியளவுக்கு குறைந்துவிட்டதாகவே பொருள் பெறும். ஹிஸ்பானியாவை விட்டு வெளியேறுகையில், அவனது படைகளின் எண்ணிக்கையை எப்படி நம்புவது எனக் கேள்வி எழுப்புகிறார்கள் செர்ஜ் லேன்சல் போன்ற வரலாற்று அறிஞர்கள்.[18] ஆரம்ப முதலே, ஹிஸ்பானியாவின் உதவியில்லாமலே தான் போரிட வேண்டும் என்பதை கணக்குப் போட்டதாகவே தோன்றுகிறது.
டிரிபியா போர்
ஆபத்து நிறைந்த ஹன்னிபாலின் படையெடுப்பு அவனை ரோம சாம்ராஜ்யத்துக்குள் கொண்டு வந்தது, வெளிநாட்டு மண்ணில் முக்கிய பிரச்சனைக்காகப் போராடி எதிரியின் முயற்சிகளை முறியடித்தான். போ பள்ளத்தாக்கில் காவுலின் நடுவே திடீரென்று அவன் தோன்றிய போது, ரோமர்களுடன் புதிதாக இணைந்திருந்த அந்த பழங்குடியினரை அவர்களிடம் இருந்து பிரித்தான். அப்போது ஹன்னிபால் செய்யவிருந்த புரட்சியை அவர்கள் தடுக்க முயற்சித்தனர்.

பப்ளியஸ் கொர்னேலியஸ் சிபியோ என்ற ரோமப் படைகளின் தளபதிகள் ஹன்னிபாலை பிடிக்க அனுப்பப்பட்டிருந்தார்கள். அவனோ சிபியோ ஆஃப்ரிகானசின் தந்தையோ ஆல்ப்ஸை ஹன்னிபால் தாண்டுவான் என்பதை எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் ஐபீரியாவில் நடந்த போருக்கு ரோமர்கள் தயாராகவே இருந்தார்கள். காவுலில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய படையுடன், ஹன்னிபாலைப் பிடிக்க சிபியோ முயற்சித்தான். சரியான நேரத்தில் முடிவு செய்து வேகமாக நகர்ந்து சென்று, ஹன்னிபாலைச் சந்திக்க கடல் வழியாக இத்தாலிக்கு அவனது படைகளை வெற்றிகரமாக நடத்திச் சென்றான். போ பள்ளத்தாக்கு வழியாக ஹன்னிபாலின் படைகள் முன்னேறிச் சென்று, டிகினஸ் என்பவனுடன் சிறிய மோதலில் ஈடுபட்டனர். அங்கே, ஹன்னிபாலின் சிறந்த குதிரைப்படையின் சாமர்த்தியத்தால் லம்பார்டி பகுதியைப் பிடிக்க ரோமர்களால் வேகப்படுத்தப்பட்டான்.[19] வெற்றி சிறிய அளவாக இருந்தாலும், காவுல்களுக்கும் லிகுரியன்களுக்கும் கார்த்தேஜீனியர்களுடன் இணைவதற்கு உற்சாகப்படுத்தியது. அவனது படைகள் மீண்டும் 40.000 பேர் கொண்டதாக உருவானது. சிபியோ கடுமையாக காயமடைந்திருந்தான். விழுந்திருந்த தந்தையைக் காப்பாற்ற மீண்டும் களத்துக்குள் ஓட்டிச் சென்ற மகனால் வீரத்தோடு காப்பாற்றப்பட்டான். டிரிபியா ஆற்றின் வழியாக சிபியோ கடந்து சென்று பிளேசன்சியாவில் உள்ள அவனது படைகளுடன் இணைந்தான்.[19]
மற்ற ரோம வீரனின் படையும் போ பள்ளத்தாக்கை நோக்கி முன்னேறியது. டிசினசில் தோற்ற செய்தி ரோம் வந்து சேர்வதற்கு முன்பே, படையை சிசிலிக்கு மீண்டும் அழைத்து வந்து சிபியோவை சந்தித்து ஹன்னிபாலை எதிர்கொள்ள வேண்டுமென போர் தளபதியான செம்ப்ரோனியஸ் லோங்கஸை செனட் கட்டளையிட்டது. ஹன்னிபால், தனது திறமையான வீரர்களால், முன்னோக்கிச் சென்றான். சிபியோவை எதிர்க்க செம்ப்ரோனியஸ் செல்ல வேண்டிய பிளேசன்சியா மற்றும் ஆர்மியம் பாதையின் வழியாக அவனும் செல்ல வேண்டியதிருந்தது. அதற்கு பின் கிளேஸ்டிடியமைக் கைப்பற்றினான். அங்கிருந்து அவனது வீரர்களுக்கு வேண்டிய அதிக அளவு உணவை எடுத்துக் கொண்டான். செம்ப்ரோனியஸ் ஹன்னிபாலின் கண்காணிப்பைத் தவிர்த்துவிட்டு அவனது இடுப்பை கட்டிக் கொண்டு பிளேசன்சியா அருகில் டிரிபியா ஆற்றுக்கு அருகில் தன் சகப்போர் தளபதியின் பாளையத்தில் இணைந்து கொண்டான், அதனால் ஹன்னிபாலின் வெற்றியும் எந்த இழப்பும் இல்லாமல் கிடைத்து விட்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதத்தின் போது டிரிபியாவில் வைத்து அவனது மிலிட்டரி திறமையைக் காண்பிக்கும் வாய்ப்பு ஹன்னிபாலுக்குக் கிடைத்தது; ரோமர்களின் காலாற்படை உடையை அணிந்து கொண்டு மறைந்திருந்து தாக்கும் ஒரு எதிர்பாராத தாக்குதலின் மூலம் அவர்களை துண்டுதுண்டுகளாக வெட்டிப் போட்டான்.
டிரேசிமீன் ஏரிப் போர்
இந்த வெற்றியால் வடக்கு இத்தாலியில் அவனது நிலையை பாதுகாத்துக் கொண்டதால், விலகிப் போகவிருந்த காவுல்களின் ஆதரவுடன் குளிர்காலத்தின் போது அவனது படைகளைத் திரட்டலானான் ஹன்னிபால். கிமு 217இன் துளிர்காலத்தின் போது, தெற்குப் பகுதிகளில் அதிகமான நம்பிக்கை கொண்ட தளத்தைக் கண்டுபிடிக்க ஹன்னிபால் முடிவு செய்தான். ரோமை நோக்கி ஹன்னிபால் வரக்கூடும் என எதிர்பார்த்ததால், சினாய்ஸ் செர்விலியஸ் மற்றும் கெய்ஸ் பிளேமினஸ் (ரோமின் புதியப் படைத் தளபதிகள்) தங்கள் படைகளை ஹன்னிபால் பயன்படுத்தக்கூடும் என எண்ணிய கிழக்கு மற்றும் மேற்கு வழித்தடங்களை மறிக்க புறப்பட்டுச் சென்றனர்.

ஆர்னோவின் வாயிலில் மத்திய இத்தாலி வழியாக மத்திய இத்தாலிக்கு வரும் ஒரே மாற்று வழி அது தான். இந்த வழி மொத்தத்தில் ஒரு மாபெரும் சதுப்புநிலப் பாதையாக இருந்தது. இந்த காலகட்டத்தின் போது வழக்கத்துக்கும் மாறாக அப்பகுதி நிரம்பி வழிந்தது. இந்தப் பாதை அதிகமான சிக்கல்கள் நிறைந்தது என ஹன்னிபாலுக்குத் தெரியும். ஆனால் மிக நிச்சயமாக இருந்ததும், மத்திய இத்தாலிக்கு வேகமாக இருந்த வழியும் அது தான். பாலிபியஸ் சொன்னது போல், நான்கு பகல்கள் மூன்று இரவுகள் நடந்து சென்றார்கள். "தண்ணீருக்கு அடியில் வரும் ஒரு பாதை வழியாக" வந்ததால், கடும் மயக்கத்துக்கும் தூங்க வேண்டும் என்கிற கட்டாயத்துக்கும் ஆளானார்கள். ஏபனைன்ஸையும் (அந்நேரத்தில் இமைப்படல அழற்சியால் வலது கண்ணை இழக்க நேரிட்டது) கடக்கவே முடியாது என்று எண்ணிய ஆர்னோவையும் எதிர்ப்பே இல்லாமல் கடந்தான். ஆனால் ஆர்னோவில் இருந்த தாழ்வான சதுப்பு நிலங்களில், அவனது பெரும்படையயும் அவனது மெதம் இருந்த யானைகளையும் இழந்தான்.[20]
கிமு 217வின் துளிர் காலத்தின் போது எட்ரூரியாவுக்கு வருகையில், பிளேமினியசின் கீழ் பிரதான ரோமப் படையையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்தான். இதற்காக பிளமினியசின் பாதுகாப்பில் இருந்த பகுதி முழுவதையும் அழித்தான். போலிபியஸ் நமக்குச் சொல்வது போல், தான் அந்த போர் முகாமைக் கடந்து அப்பால் இருக்கும் மாகானங்களை பிடித்தால், நாடு அழிவதை பிளமினியசால் பார்க்க முடியாது (புகழ் அழிந்து விடும் என்கிற ஒருபக்க பயம் மற்றும் தனிப்பட்ட மன எரிச்சல் ஒரு பக்கம்) ஆனால் தன்னை தொடர்ந்து பின் தொடர்ந்து வந்து . . . தாக்குதலுக்கான வாய்ப்புகளையு அளிப்பான் என்று [ஹன்னிபால்] கணக்குப் போட்டான்." என்கிறார். [21] அதே நேரம், பிளமினியசிடம் அவர்களைக் காப்பாற்றக்கூடிய வலிமை இல்லை என்பதை நிரூபித்து ரோமின் கூட்டாளிகள் கொண்டிருந்த பற்றுறுதிய உடைக்க முயற்சித்தான். இதனையும் தாண்டி, பிளமினியஸ் இன்னும் ஆர்ரிடியமில் முகாமிட்டிருப்பதை ஹன்னிபால் அறிந்தான். பிளமினியஸை போருக்கு இழுத்து ஒட்டுமொத்தமாக அழிக்க முடியாவிட்டதால், எதிரியின் இடது பகுதியை நோக்கி தைரியமாக அணிவகுத்து சென்றான். அது பிளமினியஸை ரோமில் இருந்து முழுவதுமாக துண்டித்தது (அதுவே மிலிட்டரி வரலாற்றின் முதலில் பதிவான திருப்பு முனை செயல்படுத்தப்பட்டது). எட்ரூரியாவின் மலைத்தொடர்கள் மூலம் முன்னேறிச் சென்று, பிளமினியஸை ஒரு அவசரமான சூழ்நிலைக்குள் ஹன்னிபால் நிர்பந்தித்தான். ட்ராசிமெனஸ் ஏரியின் நீர்த்தேக்கத்துக்கு வரவழைத்துப் பிடித்து, எதிரெதிர் திண்டுகளுக்கு இடையே மலைச் சருக்குகளுக்குள் வைத்து அவன் படையை அழித்தான், பிளமினியஸையும் அப்படியே கொன்றான் (ட்ராஸ்மீன் ஏரிப் போர் என்பதைப் பார்க்கவும்). பார்தியர்களுக்கு எதிராக காரே போரில் ஏற்பட்ட பேரிழப்பு வரை இதுவே ரோமர்களுக்கு மறைந்து இருந்து தாக்கப்பட்டதால் ஏற்பட்ட மாபெரும் இழப்பாக இருந்தது. ரோமை நோக்கி அவன் முன்னேறிச் செல்வதை அறிந்து கொள்ளக்கூடிய ஒரே தரைவழி பலத்தை நிறுத்தி வைத்தான். ஆனால் சீஜ் என்ஜின்கள் இல்லாமல் தலைநகரை அவனால் தாக்க முடியாது என்பதையும் உணர்ந்தான். அதனால் மத்திய மற்றும் தெற்கு இத்தாலி வழியாக அவனது உள் நுழைந்து ஆளும் சக்திக்கு எதிராக ஒரு பொதுவான புரட்சியை ஏற்படுத்தி தன் வெற்றியை பரைசாற்றலாம் என முடிவு செய்தான். ட்ராஸ்மீன் ஏரிக்குப் பின், ஹன்னிபால் கூறியது, “நான் இத்தாலியர்களை எதிர்த்து போரிட வரவில்லை, ஆனால் இத்தாலியர்களின் சார்பாக ரோமை எதிர்த்து போரிட வந்தேன்" என்றான். [22]
பேபியஸ் மேக்சிமஸை சர்வாதிகாரியாக ரோமர்கள் நியமித்தார்கள். ரோமர்களின் மிலிட்டரி பாரம்பரியங்களைக் கடந்து, பேபியஸ் பேபியன் கோட்பாடு — அவனுடைய பெயரைக் கொண்டு வைக்கப்பட்டது — என்பதை நிறுவினான். அதன்படி பல ரோம படைகளை ஹன்னிபாலின் அருகில் இருக்கச் செய்து அவனது முன்னேற்றத்தை தடுக்கச் செய்தல், அதன்படி எதிராளியோடு நேரடி போரும் வைத்துக் கொள்ளமாட்டான்.
Having ravaged Apulia without provoking Fabius to battle, Hannibal decided to march through Samnium to Campania, one of the richest and most fertile provinces of Italy, hoping that the devastation would draw Fabius into battle. அபுலியாவை சூறையாடி பேபியசை போருக்குத் தூண்டாமல், {0}சாம்நியம்{/0} முதல் {0}கேம்பேனியா{/0} வரை படையெடுத்துச் சென்றான். கேம்பேனியா இத்தாலியில் உள்ள மிகவும் வளமான மற்றும் செழிப்பான மாகானங்களுள் ஒன்று. அதனை அழித்தால் பேபியஸ் தானாகவே போருக்கு வருவான் என நம்பினான். இந்த கோட்பாடை பல ரோமர்கள் விரும்பவில்லை, அது கோழைத்தனம் என எண்ணினார்கள்.
கேம்பேனியாவில் ஏற்கனவே அழிக்கப்பட்ட தாழு நிலங்களை தாக்குவது அவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்காது என ஹன்னிபால் முடிவு செய்தான். ஆனால் கேம்பேனியாவுக்கான எல்லா பாதைகளையும் பேபியஸ் அடைத்து வைத்தான். இதனைத் தவிர்க்க, கார்தேஜினியப் படை காட்டு வழியாக தப்பித்துப் போகப் போவதாக ரோமர்கள் சிந்திக்கும்படி செய்து ஹன்னிபால் அவர்களை ஏமாற்றினான். ரோமர்கள் காட்டு வழியாக சென்ற போது, ஹன்னிபாலின் படை பாதையை ஆக்கிரமித்தது. எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவனது படை தங்கள் பாதையில் முன்னேறிச் சென்றனர். பேபியஸ் தாக்கக்கூடிய தூரத்தில் இருந்தாலும், அவன் எச்சரிக்கையாக இருந்த விஷயமே அவனுக்கு எதிராகத் திரும்பியது. ஒரு தந்திர உத்தியை நன்கு கண்டுபிடித்து, அதனை முறியடித்தான். ஹன்னிபால். ஆட்ரியன் கோல்ட்ஸ்வொர்த்தி அவனது படைகள் மூலமாக எதனை அடைந்தான் என்றால், "பழங்கால தலைமைத்துவத்தின் பாரம்பரியம், போரின் எல்லா வரலாற்று நிகழ்வுகளிலும் பயன்படுத்தபட்டு, பிற்காலத்தின் விளக்கப்பிரதிகள் எல்லாவற்றிலும் அதனை இடம்பெறச் செய்தது தான்" .[23] பேபியசின் மரியாதைக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது, அதற்குப் பின், அவனது ஆட்சிக் காலமும் முடிவுக்கு வந்தது.
கேன்னே போர்

கிமு 216இன் துளிர்காலத்தில், அபுலிய மலைப்பகுதியில் உள்ள கேன்னேயின் பெரும் சப்ளை டிப்போவைச் சூறையாடி முயற்சி செய்தான் ஹன்னிபால். கேன்னேவை சூறையாடியதன் மூலம், ஹன்னிபால் தன்னை ரோமர்களுக்கும் ஆதார உதவிக்குத் தடை வரும் இக்கட்டான சூழலுக்கும் இடையில் நிறுத்தப்பட்டான்.[24] கிமு 216 இல் ரோம செனட் அதன் போர்படை தேர்தலை நடத்தியது. அதில் கேயஸ் டெரன்டியஸ் வார்ரோ மற்றும் லுசியஸ் எமிலியஸ் பாவ்லஸ் ஆகியோரை தளபதிகளாக நியமித்தார்கள். அதே நேரம், பலமான எண்ணிக்கையால் வெற்றி பெறலாம் என ரோமர்கள் எண்ணியதால், நம்பமுடியாத அளவில் ஒரு புதிய படையைத் தயார்படுத்தியது. அதனை சிலர் 100,000 வீரர்கள் என்றும் சிலர் 60-80,000 பேர் என்றும் கூறியுள்ளார்கள்.[25]
தளபதிகளின் துணைப் படைகளும் ரோமர்களும், ஹன்னிபாலை எதிர்த்துப் போரிட, அபுலியாவின் தெற்குத் திசையை நோக்கி படையெடுத்தது. ஆபிடஸ் ஆற்றின் இடது கரையில் அவனை சந்தித்தபோது, ஆறு மைல் (10 கிமீ) வரை முகாமிட்டார்கள். இந்த சூழ்நிலையில், இரண்டு படைகளும் ஒன்றாக இணைக்கப்பட்டன, தளபதிகள் ஒரு நாள் மாற்றி ஒரு நாள் தலைமைப் பொறுப்பு வகித்தார்கள். தளபதி வாரோ, முதல் நாளின் தலைமை ஏற்றவன், இயற்கையாகவே மிகவும் முரட்டுத் தனமாக இருந்தான். ஹன்னிபாலை தோற்கடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.[25] வாரோவின் ஆர்வத்தை ஹன்னிபால் முறியடித்தான். சுற்றிவளைத்தல் உத்தியைப் பயன்படுத்தி அவனை பிடிபட செய்தான். அதனால் எண்ணிக்கையில் பலமாக இருந்த ரோமர்களின் பரப்பளவு போரிட வழியில்லாமல் திணறடிக்கப்பட்டனர். தனது மிகவும் சிறிய காலாற்படையை அரைவட்டமாக மையப்பகுதி நோக்கி நகர்த்திச் சென்றான் அதனைச் சுற்றி வளைத்து காலிக் மற்றும் நுமிடிய குதிரைகளால் அடக்கினான்.[25] ஹன்னிபாலின் பலவீன மையத்தைன் வழியாக ரோமப் படைகள் முயன்றபோது, லிபிய மெர்சினரிகள் சுற்றி வளைத்து அவர்களை மடக்கினர். ஹன்னிபாலின் குதிரைப்படையை தடுக்கவே முடியவில்ல்லை. மஹர்பால் என்னும் ஹன்னிபாலின் குதிரைப்படைத் தளபதி, நுமிடிய குதிரைப்படையை வலது புறமாக வழிநடத்தி அவர்களை எதிர்நோக்கி வந்த ரோமக் குதிரைப்படையை அடித்து நொறுக்கினார்கள். ஹன்னிபாலின் ஸ்பானிஷ் மற்றும் காலிக்கின் குதிரைப் படைகள், ஹன்னோவால் இடது புறமாக வழிநடத்திச் சென்றார்கள். ரோமரின் பலமான குதிரைப்படைகளை தோற்கடித்து, பின் கார்தீஜினியாவின் குதிரைப்படையும் நுமிடியர்களும் இணைந்து வந்து தாக்கினர். முடிவில், ரோமப் படையால் தப்பிக்கவே முடியவில்லை.
இந்த புத்திசாலித்தனமான நுணுக்கங்களால், சொற்பமான எண்ணிக்கைகளுடன், நின்று போராடி அனைவரையும் அழித்தான், அனைத்துக்கும் மிஞ்சியது வெறும் சிறிய படைதான். ஆதாரங்களின்படி, 50,000-70,000 ரோமர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கேன்னேயில் சிறைபிடிக்கப்பட்டிருக்கலாம்.[8] இறந்தவர்களுள் லுசியஸ் அமெலியஸ் பாவ்லஸ் என்ற தளபதியும் அடங்குவான். அதோடு அடுத்தாண்டு தளபதியாக வரவிருந்த இரு தளபதிகள், இரண்டு குவேஸ்டர்கள் நாற்பத்து எட்டு மிலிட்டரி படைகளுள் இருபத்து ஒன்பது பேர், மற்றும் என்பது செனட்டர்கள் (ரோமின் செனட்டில் அனைவரும் கூடிய போது 300 பேர் கூட தேறவில்லை, இது மொத்த ஆளும் அரசின் 25 முதல் 30% சேரும்). இதுவே கேன்னே போரை பழங்கால ரோமின் மிகவும் கேடான தோல்வியாக கருதப்பட்டது. மனித வரலாற்றில் அதிகளவு பலிகளை வாங்கிய போர்களில் இதுவும் ஒன்று (ஒரே நாளில் பல உயிர்கள் கொல்லப்பட்ட கணக்குப்படி).[25] கேன்னேவுக்குப் பின், போர்க்களத்தில் சந்தித்துப் போரிட ரோமர்கள் தயங்கினார்கள்; அதற்கு பதில் போக்குவரத்து, பொருள் வழங்கல், ஆள் பலம் போன்றவற்றின் மூலம் சார்ந்து வரச் செய்து தொந்தரவு தருவதை தேர்வு செய்தனர். அதன் காரணமாக, போரின் மீத காலத்தில் இத்தாலியில் நடந்த முக்கியப் போர்கள் எதிலும் ஹன்னிபால் சண்டையிடவில்லை. அவனுக்கு போரிட ரோமுக்கு வராததன் காரணமே கார்தேஜில் இருந்து ஆட்கள், பணம் அல்லது பொருட்களை வழங்க ------ குறிப்பாக போர் கருவிகள் வழங்க இயலாததுதான் என்று பேசப்பட்டது. என்னவாக இருந்தாலும் சரி, மஹர்பால் அவனிடம் கூறுகையில், "ஹன்னிபால் உனக்கு ஒரு வெற்றியை எப்படி பெற வேண்டும் என்று தரியும் ஆனால் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாது" என்று கூறிவிட்டான்.[26]

இந்த வெற்றியின் விளைவால் இத்தாலியின் பல பகுதிகள் ஹன்னிபாலுக்கு ஆதரவாக இணையத் தொடங்கின.[27] பாலிபியசின் குறிப்புகள்படி, "கேன்னேவின் தோல்வி எப்படி இருந்தாலும் சரி, ரோமின் கூட்டாளிகள் அந்த துக்க நாளுக்கு முன் அது எப்படி இருந்தது என்பதை பார்க்கவில்லை, அதுவரை அவர்களது மரியாதை அசைக்க முடியாததாகவே இருந்தது, இப்போது ரோம வல்லரசை விட்டு வெளியேறவே காரணம் தேடினார்கள்". [28] அதே போரின் போது, சிசிலியின் கிரேக்க நகரங்கள், ரோம அரசியல் கட்டுப்பாடை எதிர்த்துப் போரிட துவங்கினர். மேசிடோனிய அரசனான பிலிப் V, ஹன்னிபாலுக்கு அவனது ஆதரவைத் தெரிவித்தான் - அதன்படியே ரோமுக்கு எதிரான முதல் மேசிடோனியப் போர் தொடங்கியது. புதிதாக நியமிக்கப்பட்டிருந்த சைராகியூசின் ஹைரோநிமஸ்/0} உடன் கூட்டணி ஏற்படுத்தினான். கார்தேஜில் இருந்து முறையான போர் தளவாடங்கள் ஹன்னிபாலுக்குக் கிடைத்திருந்தால் ரோமை நேரடியாக எதிர்த்து வெற்றி பெற்றிருப்பான் என்றும் ஒரு விவாதம் இருந்து வந்தது. இப்போதைக்கு அவனுக்கு எதிராக இருந்து வந்த கோட்டையை மட்டுமே அவன் பிடிக்க வேண்டியிருந்தது. கிமு 216இல் நடந்த மற்றொரு குறிப்பிட்ட சம்பவம் கப்புவா உள்ளிட்ட குறிப்பிட்ட இத்தாலிய பகுதிகளைப் பிடிப்பது. இத்தாலியின் இரண்டாவது பெரிய நகரமான கப்புவாவைத் தான் அவனது புதிய தளமாகக் கொண்டிருந்தான் ஹன்னிபால். இருந்தாலும், அவன் கூட்டாளிகளாக வைத்துக் கொள்ள நினைத்த சில இத்தாலிய நகரங்கள் அவன் எண்ணம்போல் வந்து சேர்ந்து கொண்டார்கள்.
இக்கட்டானநிலை
இத்தாலியின் போர் கோட்பாடு ரீதியாக இக்கட்டான நிலையில் போய் முடிந்தது. பேபியஸ் கற்றுத்தந்த தொந்தரவு அளிக்கும் கோட்பாடுகள் தான் உதவும் என்பதை உணர்ந்த ரோமர்கள், ஹன்னிபாலை அளிக்க அதனை பயன்படுத்தத் தொடங்கினர்.[29] இருந்தாலும், ஹன்னிபாலை கொரில்லா தாக்குதல்களால் மட்டும் தாக்கி நேரடியாகப் போர்க்க்களத்தில் சந்திக்காததால் பேபியஸை "தயக்கவாதி" ("தாமதவாதி") என்று பட்டப் பெயரிட்டு அழைத்தனர்.[30] ரோமர்கள் ஹன்னிபாலை ஒரு மாபெரும் படையின் மூலம் அடிப்பதற்குப் பதில், பல சிறு படைகளாலான அவனது படையை பலமிழக்கச் செய்ய முயன்றனர். அதனால் அவனையும் கஷ்டப்படுத்தி, அவனது படைகளுக்கும் இடையூறு விளைவிக்கலாம் என்று எண்ணினார்கள். அடுத்த சில ஆண்டுகளுக்கு ஈரமில்லாமல் உதிர்ந்த நிலக் கொள்கை ஒன்றினை தாக்குப் பிடிக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்துக்குள் ஹன்னிபால் தள்ளப்பட்டான். அதனால் தெற்கு இத்தாலி முழுவதும் காலங்கடத்திய மற்றும் பலனற்ற செயல்பாடுகளால் சிரமப்பட்டான். அவனது உடனடி நோக்கங்கள் சிறு செயல்பாடுகளாக குறைக்கப்பட்டன. அவை கேம்பேனியாவின் நகரங்களைச் சுற்றியே இயங்கின.
அவனது துணை ராணுவத் தளபதிகளால் கட்டுப்படுத்த முடியாத அவனது படைகளால் நிலைத்து நிற்க முடியவில்லை, அவனது நாட்டு அரசாங்கத்தாலோ அல்லது அவனது புதிய கூட்டாளியான மேசிடோனின் பிலிப் V அரசனோ அவனது இழப்புகளுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. தெற்கு இத்தாலியில் அவனது நிலை ம்கவும் மோசமாக மாறிக் கொண்டிருந்தது. ரோமை கைப்பற்ற வேண்டும் என்கிற அவனது விருப்பத்துக்கான வாய்ப்பும் தொலை தூரம் போய்விட்டது. இருந்தாலும் சில முக்கியப் போர்களை ஹன்னிபால் வென்று கொண்டுதான் இருந்தான்: கிமு 212இல் இரண்டு ரோமப் படைகளை ஒட்டுமொத்தமாக அழித்தது. (மார்கஸ் கிளாடியஸ் மார்செல்லஸ் உட்பட இரண்டு தளபதிகளை கிமு208 போரில் கொன்றது போன்றவை நடந்தேறின. ஆனால் அவனது கூட்டாளிகளிடமிருந்து மேற்படி ஆதரவோ அல்லது கார்தேஜில் இருந்து படைத்தளவாடங்களோ கிடைக்காத நிலையில் ஹன்னிபாலால் மேற்கொண்டு எந்த வெற்றிகளையும் பெற முடியவில்லை. அவனது இத்தாலிய கூட்டாளிகளால் போதுமான அளவு ஆதரவளிக்கப்படாததாலும், அவனது அரசாங்கத்தாலும் புறக்க்கணிக்கப்பட்டதாலும் (பொறாமையாலோ அல்லது கார்தேஜ் அதிகமாக பரவிவிட்டதாலோ), ரோமின் வளங்களுக்கு ஈடுகொடுக்க முடியாததாலும், ஹன்னிபால் கொஞ்சம் கொஞ்சமாக தோற்க ஆரம்பித்தான். எப்போதெல்லாம் ரோமர்களை சண்டைக்கு கொண்டு வரமுடியுமோ அப்போதெல்லாம் தொடர்ந்து அவர்களைத் தோற்கடித்தான். ஆனால் அது ஒரு நீண்ட காலம் நிலைத்திருக்கும் சாமர்த்தியமான விளைவை ஏற்படுத்தாதவரை ஒரு பெரும் வெற்றியை ஏற்படுத்த முடியாமல் போனது.
ஆளும் கூட்டத்தில் கார்தேஜினிய அரசியம் கலந்திருந்தது. கார்தேஜினிய செனட் என்று ஒன்று இருந்த போது கார்தேஜின் நிஜ சக்தி "30 அறிஞர்களின் கவுன்சில்" என்பவர்களிடம் இருந்தது. நீதிபதிகள் குழு என்பது "ஹன்ட்ரட் அன்ட் ஃபோர் என்கிற ஆளும் மக்களின் குடும்பத்தாருடையதாக இருந்தது. இந்த இரு குழுக்களும் கார்தேஜின் வளமான வணிக் குடும்பங்களுடையதாக மாறிவிட்டது. கார்தேஜில் இயங்கிய இரு அரசியல் குழுக்கள்: போர் கட்சி, "பார்கிட்கள்" (ஹன்னிபாலின் குடும்பத்தின் பெயர்) என்றும் அழைக்கப்படும், மற்றொன்று மகா ஹன்னோ II ஆல் தலைமை வகிக்கப்பட்ட அமைதிக் கட்சி. கேன்னே போரைத் தொடர்ந்து தளவாடங்கள் கேட்டு வந்த ஹன்னிபாலை புறக்கணித்த வண்ணமே ஹன்னோ இருந்து வந்தான்.
கார்தேஜினிய ஆளும் வர்க்கத்தின் முழு ஆதரவு இல்லாமலே ஹன்னிபால் போரைத் தொடங்கினான். சாகுண்டத்துடன் அவன் ஏற்படுத்திய தாக்குதல் ரோமுடன் போர் செய்ய ஒரு வாய்ப்பு அல்லது ஐபீரியாவில் மரியாதைக்கு பாதிப்பு என்று ஏற்படுத்திவிட்டதாக ஆளும் வர்க்கம் எண்ணியது. கார்தேஜின் போர் உத்திகளை ஆளும் வர்க்கமே கட்டுப்ப்பாட்டில் வைத்திருந்தது. ஐபீரியா அல்லது வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து படைகள் தேவை என்று ஹன்னிபால் தொடர்ந்து கேட்டான். போரில் தொலைந்த ஹன்னிபாலின் படைகளுக்குப் பதில் இத்தாலி அல்லது காவுலில் இருது வரவழைக்கப்பட்ட குறைவான பயிற்சி பெற்ற மற்றும் கடற்படையில் பணியாற்றியவர்கள் போன்றவர்களால் மாற்றி வழங்கப்பட்டது. கார்தேஜினிய ஆளும் வர்க்கத்தின் வணிக ரீதியான ஆசைகள் ஐபிரியாவின் படைத்தளவாடங்களையே கட்டுப்படுத்தியது. போர் முடியும் வரை ஹன்னிபாலை கண்டுகொள்ளவில்லை.
ஹன்னிபாலுக்கு இத்தாலியில் ஏற்பட்ட பின்னடைவு
கிமு 212இல் ஹன்னிபால் டாரன்டமைக் கைப்பற்றினான். ஆனால் துறைமுகத்தை அவனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அலை அவனுக்கு எதிராகவும் ரோமுக்கு ஆதரவாகவும் திரும்பிக் கொண்டிருந்தது.
கிமு 211இல் தோல்வியுற்ற கபுவாவின் இரு படைகளை ரோமர்கள் எழுப்பினார்கள், அதனையடுத்து சைரகாஸைக் கைப்பற்றினார்கள், சிசிலியில் ஒரு கார்தேஜினியப் படை அழிவுக்கு வந்தது. கொஞ்ச நாட்களில், சிசிலியை சமாளித்து ஏடோலிய அரசுடன் கூட்டணீயில் இறங்கியது. அது ஐலிரியாவைக் கைப்பற்ற இத்தாலியில் ரோமின் பணிகளை ஒழிக்க பிலிப் செய்த முயற்சிக்கு பதிலடி கொடுப்பதற்காக செய்யப்பட்டது. அவனும் பல பகுதிகளில் இருந்து தாக்குதலுக்கு உள்ளானதால், ரோம் மற்றும் அவனது கிரேக்க கூட்டாளிகளால் அடக்குமுறைக்கு உள்ளானான். அதே நேரம் அபுலியாவின் ஹெர்டோனியாவில் ஹன்னிபால் பல்வியஸை தோற்கடித்தான், ஆனால் அடுத்த ஆண்டே டாரண்டமில் தோற்றுவிட்டான்.
கிமு 210இல் தனது புத்திக்கூர்மையை மீண்டும் நிரூபித்தான் ஹன்னிபால். அபுலியாவின் ஹெர்டோனியாக்கை (நவீன காலத்தில் ஓர்டொனா) தோற்கடித்தான். கிமு 208இல் லோக்ரி எபிசெபைரியில் பணியில் இருந்த ரோமப் படைகளை அழித்தான். ஆனால் கிமு 209இல் ஏற்பட்ட டார்ண்டமின் இழப்பு, சாம்நியம் மற்றும் லுசானியா ஆகியவற்றை ரோமர்கள் மீண்டும் பிடித்தது போன்றவை தெற்கு இத்தாலியில் அவனிடம் இருந்த பலத்தை ஓரளவுக்குக் குறைத்து விட்டது. கிமு 207இல் அபுலியாவை நோக்கி அவனது பாதையைத் தொடர்ந்தான், அங்கு தான் அவனது சகோதரனான ஹஸ்த்ரூபால் பார்காவுடன் இணைந்து ரோமை எதிர்த்து படையெடுத்துச் செல்ல தொடங்கினான். இருந்தாலும், அவனது அவனது சகோதரன் தோற்று, மெடாரசில் இறந்ததாலும், புருட்டியமில் ஓய்வு பெற திட்டமிட்டான் என்றும் அங்கு சில ஆண்டுகள் தங்கி இருந்ததாகவும் கதைகள் சொல்வதுண்டு. அவனது சகோதரனின் தலையை வெட்டி இத்தாலி வழியாக எடுத்துச் செல்லப்பட்டு ஹன்னிபாலின் படைகள் இருந்த இடத்தில் தூக்கிப் போட்டார்கள். இது ரோமக் குடியரசின் இரும்புத் திரையைக் காட்டும் செய்தியாக அமைக்கப்பட்டது. இத்தாலியில் ஹன்னிபாலின் வெற்றிகளை முடிவுக்கு வருவதையே இந்த சம்பவங்கள் குறிப்பிட்டன. அவனது சகோதரனான மாகோ பார்கா லிகுரியாவில் (கிமு 205 - கிமு 203) தோற்றதுடன், பிலிப் ஆஃப் மாசிடோன் உடனான பேரமும் தோல்வியுற்றதால், இத்தாலியில் முன்னேறுவதன் நம்பிக்கை அரவே தொலைந்தது. கிமு 203இல், இத்தாலியுடன் பதினைந்து ஆண்டுகள் போரிட்ட பின், கார்தேஜின் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக தோல்வியடைய தொடங்கிய போது, சிபியோ ஆஃப்ரிகானசின் தலைமையில் படையெடுத்து வந்த ரோமர்களை எதிர்க்க சொந்த நாட்டை தலைமையேற்று போரிட கார்தேஜில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.
இரண்டாம் பியூனிக் போரின் முடிவு (கிமு 203–201)
கார்தேஜுக்கு திரும்புதல்
கிமு 203இல், கார்தேஜில் உள்ள போர் கட்சியால் இத்தாலியில் இருந்து திரும்பும்படி ஹன்னிபாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பியூனிக்கிலும் கிரேக்கத்திலும் அவனது படையெடுப்பை குரோடோனாவில் உள்ள ஜுனோ கோவிலில் பொறித்து வைத்து விட்டு ஆப்பிரிக்காவுக்கு கடல்வழியாக திரும்பினான்.[31] அவனது வருகை போர் கட்சியின் மறு எழுச்சிக்கு உடனடி வேகத்தை அளித்தது. ஆப்பிரிக்கப் படைகள் மற்றும் லெவிக்கள் மற்றும் இத்தாலிய கடற்படை வீரர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து தன்னை தளபதியாக்கிக் கொண்டான். கிமு 202 இல், ஒரு பலனற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் சிபியோவை ஹன்னிபால் சந்தித்தான். சமமான மரியாதைகள் ஏற்பட்டாலும், "பியூனிக் நம்பிக்கை"யின் மீது ரோமர்கள் கொண்டிருந்த எதிர்ப்பு இருபக்க பேரங்களை பலனிழக்கச் செய்தது. அவர்கள் சாகுண்டத்தில் கார்தீஜியர்கள் ஏற்படுத்திய தாக்குதலின் மூலம் விதிகளை மீறி முதல் பியூனிக் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததையும் ரோம வாகனத்தை கார்தீஜியர்கள் ஒருமுறை தாக்கியதையும் சுட்டிக் காட்டினார்கள். சிபியோவும் கார்தேஜும் செய்த அமைதி திட்டத்தை ரோம் ஏற்றுக் கொண்டது. ஒப்பந்தம் அடக்கமான விதிகளால் ஏற்படுத்தப்பட்டாலும் போரானது ரோமர்களுக்கு சாதகமாகவே அமைக்கப்பட்டது. கார்தேஜால் ஆப்பிரிக்க பகுதியை வைத்துக் கொள்ளலாம் ஆனால் வெளிநாட்டு சாம்ராஜ்யத்தை இழக்க வேண்டும், அதுவேமொத்தத்தின் முடிவு . மசினிசா (நுமிடியா) சுதந்திரமாக இருக்க வேண்டியிருந்தது. அத்துடன், கார்தேஜ் தனது பயணத்தை குறைத்து போர் செலவை செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் கார்தேஜ் அதற்குப் பின் ஒரு மாபெரும் தவறை இழைத்தது. டியூன்ஸ் வளைகுடாவில் ஒரு ரோமக் கப்பலை கார்தேஜின் நெடுங் காலமாக வாடிப்போயிருந்த குடிமக்கள் கைப்பற்றி, அதில் இருந்த உணவுப் பொருட்களை சூறையாடினர். அது இரு தரப்பில் செய்யப்பட்ட ஒப்பந்த விதிகளை மீறியதாக அமைந்தது. அந்நேரத்தில் ஹன்னிபாலை, கார்தீஜினிய செனட் இத்தாலிக்கு திரும்ப அழைத்து, அவன் படைகளையும் திருப்பச் சொன்னது. ஹன்னிபால் மற்றும் அவனது பொருட்களை வலுப்படுத்தி ஒப்பந்தத்தையும் ரோம எதிர்ப்புகளையும் மீண்டும் உடைத்தனர். மோசமான ஸாமா போர் விரைவில் தொடர்ந்தது, அது ஹன்னிபாலின் வெல்லமுடியாத சுவாசத்தை நிறுத்தியது.
ஸாமா போர்
இரண்டாம் பியூனிக் போரின் யுத்தத்தைப் போல் இல்லாமல், ஸாமாவில் ரோமர்கள் தங்கள் குதிரைப்படையில் சிறந்து விளங்கினர், கார்தீஜியர்க்ள் காலாற்படையில் சிறந்து விளங்கினர். இந்த ரோமக் குதிரைப்படை மசினிசாவின் துரோகத்தால் ஏற்பட்டது. அவன் இதற்கு முன் ஐபீரியாவில் கார்தேஜிற்கு உதவியாக இருந்தான். ஆனால் கிமு 206இல் இருதரப்பும் தங்கள் நில உறுதிப்படி யுத்தப்பக்கங்களை மாற்றிக் கொண்டனர், அது கார்தேஜிய கூட்டாளியான சைபாக்ஸ் மீது அவன் கொண்டிருந்த தனிப்பட்ட முரண்பாடுகளால் ஏற்பட்டது. இந்த துரோகத்தால் இதற்கு முன் கார்தீஜியர்களிடம் இருந்த அந்த சாதகத்தன்மை சிபியோ ஆஃப்ரிகானசிடம் கைமாறியது. ஹன்னிபாலுக்கு வயதானதை அடுத்து, இத்தாலியுடன் பல ஆண்டுகளாக சண்டை போட்டு உடல்நலம் குன்றியதாலும் மனநிலை ஆற்றலிழப்பு ஏற்பட்டிருந்ததாலும், கார்தீஜினியர்கள் எண்ணிக்கை அளவில் அதிகமாகவே இருந்தார்கள், அதோடு தற்போது அவர்களிடம் இருந்த 80 போர் யானைகளாலும் பலம் அடைந்தார்கள்.

கார்தேஜினியக் குதிரைகளை மொத்தமாக அடித்ததில் ரோமக் குதிரைப்படை ஆரம்ப வெற்றி ஒன்றைப் பெற்றது. கார்தீஜினிய போர் யானைகளின் திறனை குறைப்பதற்கு ரோமர்கள் கையாண்ட உத்திகளும் வெற்றியைத் தேடித் தந்தன. எக்காளங்களை ஊத் யானையை மிரளச் செய்து கார்தேஜிய பகுதிகளுக்குள் ஓட வைக்க வேண்டும் என்பதே ஹன்னிபாலின் யானைகளை நிறுத்துவதற்கு சிபியோ கையாண்ட உத்திகளில் ஒன்றாக இருந்தது. யானைகள் கார்தேஜிய குதிரைப்படையைத் தான் தாக்கியதாகவும் ரோமர்களுடையதை தாக்கவில்லை என்றும் சில வரலாற்று அறிஞர்கள் கூறியதுண்டு. ஆனாலும், யுத்தம் மிக மோசமாகவே நடந்தது. ஒரு சமயத்தில் ஹன்னிபால் வெற்றி பெறுவான் எந்-றே தோன்றியது, ஆனால் சிபியோ தன் வீரர்களையும் குரதிரைப்படையையும் அணிவகுத்துச் சென்று, கார்தீஜினிய குதிரைகளை திசைதிருப்பி ஹன்னிபாலை பின்பக்கமாகத் தாக்கினார்கள். இந்த இரு-மோசமான தாக்குதலும் கார்தீஜினிய கூட்டத்தை சிதறடித்தது. அவர்களது முதல்நிலை ஜெனரல் தோற்கடிக்கப்பட்டதுடன், கார்தீஜியர்களுக்கு தோல்வியை ஒத்துக் கொண்டு ரோமிடம் சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. கார்தேஜ் கிட்டத்தட்ட 20,000 படைகளை இழந்தது. மேலும் 15,000 பேர் காயமடைந்தனர். அதே நேரம், ரோமர்களில் 1500 பேருக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. இந்த போரின் முடிவால் கார்தீஜியர்கள் மத்தியில் ஹன்னிபாலுக்கு இருந்த மதிப்புக் குறைவு ஏற்பட்டது. இரண்டாவது பியூனிக் போரில் இறுதியான மகா யுத்தமாக அது முடிவடைந்தது, ரோம் வெற்றியைப் பெற்றது. தோல்வியால் ஏற்பட்ட விளைவுகளால், கார்தேஜால் அதற்கு பின் மத்தியதரை ஆதிக்கத்தின் கீழ் போரிடவே முடியவில்லை.
பிற்கால வாழ்க்கை
கார்தேஜின் அமைதிக்காலம் (கிமு 200 -196)
ஹன்னிபாலுக்கு 43 வயது தான் ஆனது. விரைவில் போர் வீரனாகவும் நாட்டின் அதிபதியாகவும் மாறும் நிலையில் இருந்தான். தனது மகா சாம்ராஜ்யத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்த கார்தேஜில் நிலவிய அமைதியைத் தொடர்ந்து, ஹன்னிபால் கொஞ்சம் ஓய்வெடுக்கத் தயாரானான். இருந்தாலும், ஆளும் வர்க்கத்தில் நிலவிய மோசமான ஊழலால், ஹன்னிபால் மீண்டும் தலையெடுக்க ஒரு வாய்ப்பு கிட்டியது. நீதிபதியாக அல்லது முதன்மை மாஜிஸ்திரேட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டான். அதிகாரம் நிலையற்றதாக இருநதாலும், ஹன்னிபாலின் அதிகாரமும் பலமும் மீண்டும் கொடுக்கப்பட்டது. பொறாமையாகவே இருந்த ஆளும் வர்க்கம், அவன் இத்தாலியில் இருந்த போது ரோமை எதிர்க்க மறுத்ததாகவும், அப்படிச் செய்யத் தவறியதால் தேசத்துக்குத் துரோகம் விளைவித்ததாகவும் அவன் மீது குற்றம் சாட்ட்டினார்கள். ஹன்னிபால் மீது சுமத்தப்பட்ட துஷ்பிரயோகங்களை சமாளித்து, ரோமால் விதிக்கப்பட்ட தண்டனைப் பணத்தை கூடுதலாக எந்த வரியும் இல்லாமல் தவணை முறையில் திருப்பித் தருவதாக கூறினார். ஹன்ட்ரட் அன்ட் ஃபோரையும் சரிசெய்தார். அதன் உறுப்பினர்கள் தேர்தலால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், வாரிசுகளால் அல்ல என்று நிலைநிறுத்தினார். ஹன்ட்ரட் அன்ட் ஃபோரின் ஆட்சிக்காலத்தை வாழ்நாள் அளவில் இருந்து இரண்டு ஆண்டு காலமாக மாற்ற வேண்டும் என்று அவர் செய்த புரட்சிக்கு குடிமக்களின் ஆதரவும் கிடைத்தது.
நாடு கடத்தல் (கிமு 195–183/181)
ஸாமாவின் வெற்றிக்குப் பின் பதினான்கு ஆண்டுகள் கழித்து, கார்தேஜின் வளம் சீராகிவிட்டதாகக் கூறி, ஹன்னிபாலை சரணடையும் படி கேட்டுக் கொண்டனர். அதன்பின் ஹன்னிபால் தானாகவே தன்னை நாடு கடத்திக் கொண்டான். டையர் என்கிற கார்தேஜின் தாயக நகரத்துக்கும், எபேசஸ் நாட்டுக்கும் பயணித்தான். அங்கு சிரியாவைச் சேர்ந்த அந்தியோகஸ் III அவனை மரியாதையோடு வரவேற்றான். ரோமுக்கு எதிராக போரிடத் தயாராகிக் கொண்டிருந்தான். அரசனின் படை ரோமர்களுக்கு ஈடுகொடுப்பதாக இல்லை என்பதை ஹன்னிபால் கவனித்தான். ஒரு வாகனத்தை தயார் செய்து தெற்கு இத்தாலியில் படைகளை குவிக்கவும் அறிவுறுத்தினான். அதோடு தானே தலைமையேற்பதாகவும் தெரிவித்தான். அவனால் அந்தியோகஸ் அவனுடைய அமைச்சரவையினர் கூறியதை மட்டுமே கேட்டான். எந்த முக்கியமான விஷயத்துக்கும் ஹன்னிபாலை சேர்த்து ஆலோசிக்கவில்லை. சிசேரோவின்படி, அந்தியோகசின் அரசவையில், போர்மியோ என்கிற தத்துவ மேதையின் மேடைப் பேச்சை ஹன்னிபால் கேட்டான். அது பல தலைப்புகளுக்கு நீண்டது. போர்மியோ ஒரு தலைவனாக அவனது கடமைகளை செய்து முடித்தபின், ஹன்னிபாலின் அபிப்ராயத்தைப் பற்றி கேட்கப்பட்டான். "பல பழைய முட்டாள்களை பார்த்திருக்கிறேன்; இது எல்லாவற்றை மிஞ்சிவிட்டது" என்று பதிலளித்தான். ஹன்னிபாலின் நாடு கடத்தலில் மற்றொரு கதையில் அவனது பியூனிக் நயவஞ்சகத்தைப் பற்றி ஒரு அரிய விஷயம் கிடைத்தது. அந்தியோகஸ் III ஒரு மிகப்பெரிய மற்றும் நன்கு போர் பயிற்சி பெற்ற படையை ஹன்னிபாலிடம் காண்பித்து, ரோமக் குடியரசுக்கு இது போதுமா எனக் கேட்ட போது, ஆம், ரோமர்களுக்கு இது போது, அவர்கள் எவ்வளவு பேராசையாக இருந்தாலும் சரி" என்று பதிலளித்தான் இந்த நிலையில் ஹன்னிபாலுக்கு தளபதி பதவியும் தரப்படவில்லை, ஆனால் அந்தியோகஸ் தானே படையை நடத்திச் சென்று தோற்றும் போனான்.
கிமு 190 இல், செலுசிட் பயனத்தில் அதிகாரியாக வைக்கப்பட்டான். ஆனால் யூரிமேடான் ஆற்றில் யுத்தத்தில் தோற்றுப் போனான். ஸ்ட்ரேபோ மற்றும் ப்ளூடார்க் ஆகியோரைப் பொறுத்த வரையில், ஹன்னிபால் அர்டாக்ஸியாஸின் ஆர்மேனிய அரசவையில் நன்கு வரவேற்கப்பட்டான். ஹன்னிபால் எவ்வாறு அர்தாக்ஸ்தாவின் ராஜ தலைநகரத்தை எவ்வாறு கட்டி திட்டமிட்டு கண்காணித்தான் என்கிற கதையையும் சேர்த்துச் சொல்லியுள்ளனர்.[32] அந்தியோகஸின் அரசவையில், ரோமர்களிடம் சரண்டர் செய்ய முயற்சித்ததை அறிந்ததும் கிரேட் என்கிற ஊருக்குச் சென்றனர். ஆனால் விரைவில் ஆசியா மைனாருக்கு சென்றார். பித்தினியாவின் புருசியாஸ் I உடன் அடைக்கலம் புகுந்த போது, ரோமின் கூட்டாளியான பெர்கமானின் யுமினிஸ் II அரசனுடன் சண்டை போட தயாராகிக் கொண்டிருந்தான். அபோரில் புருசியாசுக்கு உதவ ஹன்னிபாலும் சென்றான். யுமினிசுக்கு கடல் வெற்றிகளில் ஒன்றைப் பெற்றுத் தந்து யுமினிசை தோற்கடித்தான், யுமினிஸ் கப்பல்களுக்குள் விஷ பாம்புகள் நிரம்பிய பானைகளைத் தூக்கிப் போட்டார்கள்.[33] ஹன்னிபால் டயரையும் சந்தித்தான்; அது அவனது மூதாதயர்களின் தாயகம். இருந்தாலும் அவனைக் கொல்வதற்கு உறுதி கொண்ட ரோமர்கள், அவனை சரணடைய வலியுறுத்தினர்.
மரணம் (கிமு 183/181)
புருசியாக்கள் அவனை விட்டுத்தர ஒத்துக் கொண்டாலும், எதிரிகளின் கையில் பிடிபடக்கூடாது என்பதில் ஹன்னிபால் உறுதியாக இருந்தார். மர்மரா கடலின் கிழக்குக் கடற்கரையில் லிபிசாவில் விஷம் அருந்தினார். விஷத்தி அவரது மோதிரத்திலேயே வைத்திருந்ததாக கூறுவார்கள்.[34] சாவதற்கு முன், ஒரு கடித்தத்தை எழுதி வைத்து சென்றார்:
"ஒரு கிழவன் சாவது வரை ரோமர்களால் பொறுத்திருக்க முடியாததால், அவர்கள் இது வரை அனுபவித்த கவலையில் இருந்து அவர்களை விடுவித்து விடுவோம்."
ஹன்னிபால் இறந்த ஆண்டு இதுவரை தெரியவில்லை. அவரது வரலாற்றுக் குறிப்புகளில் , டைடஸ் பாம்பினஸ் அட்டிகஸ் கிமு 183 என்று குறிப்பிட்டுள்ளார். லிவியும் அதையே கூறியுள்ளார். மிக நெருங்கிய ஆண்டாக கிமு 182 என்று பாலிபியஸ் கூறியுள்ளார். சல்பிசியஸ் பிளித்தோ அதனை கிமு 181 என்கிறார்.[35]
கல்லறை இருக்கக்கூடிய இடம்
நவீன காலத்தில் துருக்கி (டிலிஸ்கெலஸ்கிக்கு அருகில் கெப்சேவுக்கு தெற்கில், 60கிமீ தள்ளி, {0இஸ்தான்புல்லுக்கு{/0} 38 மைல்கள் கிழக்கில்), ஒரு சுவாரஸ்யமான இடம் தொழிற் பேட்டை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. அது சிப்ரஸ் மரங்களுக்கு இடையே இருந்தது. ஹன்னிபாலின் கல்லறைக்கு மரியாதை அளிக்க, செப்டிமியஸ் செவரஸ் என்கிற பேரரசன் நல்ல வித்ததில் பாதுகாத்துவந்தான் (கிபி 193 முதல் 211 வரை ஆண்டான்). ஆனால் அந்த இடம் இன்று வெறும் கல் குவியலாகவே இருக்கிறது. ஜெர்மன் ஆராய்ச்சியாளர் தியோடர் வைகாண்ட் 1906 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சிகள் மேற்கொண்டார். ஆனால் அந்த இடத்தைப் பற்றி சந்தேகமே தெரிவித்தார்.
பழங்கால உலகத்தின் மரபு வழித்தடம்
பயம் என்பதன் அர்த்தத்தை ரோமர்களுக்குக் கற்றுத்தந்தான் என்று எழுதப்பட்டுள்ளது. பல பரம்பரைகளுக்கு, ஹன்னிபாலிடம் அவர்கள் அடிவாங்கிய கதைகளை பயங்கரக் கதைகளாக குழந்தைகளுக்கு ரோம வீட்டுப்பெண்கள் கூறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. உண்மையிலேயே, ஹன்னிபால் ஒரு பயங்கரவாதியாகவே தோன்றினான். அவன் தாக்குதலுக்கு வந்த போதெல்லாம், ரோம செனட்டர்கள்: "ஹன்னிபால் ஆண்டி போர்டாஸ்" (ஹன்னிபால் வாசலில் நிற்கிறான்!") என்றுதான் அறிவித்தார்கள் அதனைச் சொல்லி அவர்களது பயத்தையும் கலக்கத்தையும் வெளிப்படுத்தினார்களாம். இந்த பிரபலமான லத்தீன் வாக்கியம் ஒரு பொதுவான வாக்கியமாக உருவானது. இன்று யாரவது ஒரு கிளையன்ட் வாசலுக்கு வந்தாலோ அல்லது யாராவது பிரச்சனையை சந்தித்தாலோ அதனை பயன்படுத்துகிறார்கள்.[36] இது இத்தாலியில் ஹன்னிபாலின் தாக்கம் ரோமக் கலாசாரத்தில் எப்படி நிலைபெற்றது என்பதை விளக்குகிறது.
ஹன்னிபாலுக்கான பேருவகை ரோம எழுத்தார்களையும் தாக்கியிருந்தது என்பதற்கான உதாரணம் லிவி, பிரண்டினஸ், மற்றும் ஜூவினல் ஆகியோரின் எழுத்துகளில் தெரிகிறது. இப்படியொரு வீரனிடம் தாங்கள் தோற்றதை குறிக்கும் வண்ணம் இந்த கார்தீஜினியரின் சிலையை அவர்களின் வீதிகளில் ரோமர்கள் வைத்தார்கள்.[37] ஒரு எதிரியைப் பார்த்து ரோம் எந்தளவு பயம் கொண்டது என்பதை ஹன்னிபால் தெரியவைத்தான் என்பதை குறிக்கிறது. அதோடு கூட, தன் தோல்வியை உணர்த்திய மறுப்பு என்பது, எல்லா அமைதிகளையும் சிதைத்தது. கேன்னேவின் சிறைக்கைதிகளுக்கான பணையக்கூலியைக் கூட அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.[38]
போரின் போது ரோமக் குடிமக்களிடம் புரட்சி ஏற்பட்டதற்கான விபரங்கள் எதுவும் இல்லை. அமைதியை செனட் விரும்பியதாகவும் தெரியவில்லை. கார்தேஜினியர்களுக்கு எதிராக ரோமில் ஏற்பட்ட மாற்றங்கள் என்றும் எதுவும் இல்லை.[39][40] அதே நேரம், போர் முழுவதுமே ரோம வல்லுநர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டனர். ரோமின் மிகப்பெரும் எதிரியை தோற்கடிக்க தலைமை பதவியை கேட்டு சண்டையிட்டனர். ஹன்னிபாலின் மிலிட்டரி ஞானம் ரோம அரசியல் செயல்பாடுகளை சிதைப்பதற்கோ, ரோம மக்களின் அரசியல் மற்றும் மிலிட்டரி அறிவை சிதைப்பதற்கோ போதுமானதாக இல்லை. "அவர்களது அரசியல் முதிர்ச்சியும் அரசியல் வடிவங்களுக்கான மரியாதையும் சிக்கல் நிறைந்த சூழ்நிலையிலும் சுமூகமாக இயங்கியது -- கேன்னே போன்ற யுத்தங்களில் தோற்ற பல நகரங்களும் இருந்தன, அவை நாட்டின் தலைமையகமாகவும் தொடர்ந்து நிலைத்தன" என்று லேசன்பி கூறுகிறார்.[41] வரலாற்று நிபுணர் லிவியைப் பொறுத்தவரையில், ஹன்னிபாலின் மிலிட்டரி ஞானத்தைப் பார்த்து ரோமர்கள் பயந்தார்கள். கிமு 211இன் போது ஹன்னிபால் ரோமை நோக்கி படையெடுத்த போது[42], பிராஜெல்லே என்கிற தூதன் ஒரு நாள் ஒரு பகலில் ரோம் முழுக்க பீதியைக் கிளப்பினார், நகரம் முழுவதும் அந்த விஷயம் பரவி அவர் கொண்டு வந்த செய்திகள் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்க்தியது என்று கூறியுள்ளார். மேட்ரான்களின் அழுகை எங்கும் கேட்டது, வீடுகளில் மட்டும் அல்ல, கோயில்களிலும் கூட. கோயில் வாசல்களில் அவர்கள் தலைவிரி கோலமாய் முழங்காலில் நின்று, எதிரிகளிடம் இருந்து ரோமைக் காப்பாற்றவும் காயம் மற்றும் பிரச்சனைகளில் இருந்து தாய்மாரையும் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டுமென வேண்டிக் கொண்டனர்."[43] "ஆண்களின் மனநிலையும் உணர்வுகளும் மாற்றம் பெற்றதாக செய்திகள் வந்தன"[44] அதனால் கப்புவாவை தாக்க முயற்சி செய்தனர், ஆனால் ரோமுக்கு போர் தளவாடங்களாக 15,000 காலாற்படையையும் 1000 குதிரைப்படைகளையும் அனுப்பினார்.[44]
லிவியைப் பொருத்தவரையில், கிமு 211இல் ரோமுக்கு வெளியே ஹன்னிபாலின் படைகள் கைப்பற்றிய இடத்தை உடனடியாக விவசாயத்திற்காக அதே விலையில் விற்றுவிட்டனராம்.[45] இது உண்மையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் லேசன்பி கூறுவது போல், "உச்சக்கட்ட வெற்றியின் போது ரோமர்கள் அதிநம்பிக்கையைப் பெற்றார்கள், அப்படியே சாதாரண வாழ்க்கையையும் நடத்தினார்கள்.[46] கேன்னேவுக்குப் பின்,ரோமர்கள் எதிர்த்தாக்குதலில் கடும் வேகத்தில் தாக்கினார்கள். கேன்னே போருக்குப் பின் ரோமின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் சிதைந்து போன நிலையில் இருந்தது. ஆனால் கடல் தாண்டிய அதன் ஆக்கிரமிப்புகளில் இருந்து ஒருவரைக் கூட பின் வாங்க வேண்டாம் என செனட் கூறிவிட்டது, நகரமும் வலுவடைய ஆதாரமாக இருந்தது. உண்மையில், அவர்கள் வெற்றியை நிலைநிறுத்த முயற்சித்தார்கள்; கிளவுடியஸ் மார்செல்லாஸ் என்பவரின் தலைமையில் சிசிலியையும், அதன் பின் ஹிஸ்பானியாவில் சிபியோ ஆப்ரிகானசின் தலைமையிலும் தொடங்கினார்கள்.[47][48] ஹன்னிபாலின் போர் பற்றிய விவாதங்கள் நெடுங்காலமாக பேசப்பட்டு வந்த போது, இந்த போர் ரோமின் "நல்ல காலத்தைக்" காட்டியது.[49][50]
ஹன்னிபால் பற்றிய ஆதாரங்கள் பல ரோமர்களிடம் இருந்தே கிடைத்தன. ரோம் எப்போதுமே பார்த்திராத மாபெரும் எதிரியாகக் கருதினார்கள். அவனது கொடூரத்தன்மையை காட்டுவதாக லிவி கூறுகிறார். சிசேரோவும் ரோமைப் பற்றி பேசுகையில் , அதன் இரு மகா எதிரிகளான "மதிப்பிற்குறிய" பைரஸ் மற்றும் "கொடூர" ஹன்னிபால் என்று குறிப்பிடுகிறார். அதன் வித்தியாசமான பிம்பம் சில நேரம் வெளியானது. ஹன்னிபாலின் வெற்றிகள் இரு ரோமத் தளபதிகளின் மரணத்தை ஏற்படுத்தினாலும், ட்ராசிமீன் ஏரியில் காய்ஸ் பிளாமினியசின் உடலைத் தேடினான். ஆனால் அது கிடைக்கவில்லை. லுசியஸ் ஏமிலஸ் பவ்லசின் அங்கீகாரத்துடன் மர்சிலஸின் சாம்பலை ரோமில் உள்ள அவனது குடும்பத்துக்கு அனுப்பி வைத்தான். பாலிபியசுக்கு ஏற்பட்ட சண்டையில், அவனுக்கு பிரச்சனை ஏற்பட்டாலும், அவன் ஹன்னிபாலிடம் இரக்கமாக உணர்ந்ததாக கூறினான். பாலிபியஸ் இத்தாலியில் பணையக் கைதியாக பல காலம் வாழ்ந்தாலும், ரோம ஆதாரங்களையே பெரிதும் நம்பினார். அதனால் அவர் ரோம உட்கூறுகளை வெளியிடும் வாய்ப்பும் அதிகரித்தது.
மரபுப் பேறு

பிற்கால கலை மற்றும் பிரபல கலாச்சாரப்படி ஹன்னிபாலின் பெயர் ஒரு பொது பயன்பாடாக இருந்தது. மேற்கத்திய வரலாற்றில் அவனது வெளிநாட்டு தாக்கம் குறிப்பிட்ட அளவை தாண்டியிருந்தது.
மற்ற மிலிட்டரி தலைவர்களைப் போல, ஹன்னிபாலின் வெற்றிகளும் சிறப்பான படைகளுக்கு எதிராக அவன் பெற்ற சிறப்புகளும், அவனது சொந்த நாடான வடக்கு ஆப்பிரிக்காவில் என்றும் அழியாமல் நிலைத்து நின்றன. ஆல்ப்சை அவன் கடந்தது பழங்கால போர்க்களத்தின் மிலிட்டரி முயற்சிகளில் மிக உன்னமானதாகக் கருதப்படுகிறது[51], அதில் உலகின் கற்பனையையே உண்மையாக்கினான் (பல கலைப்படைப்புகளிலும் கவித்துவமானது).
இலக்கியம்
குறிக்கப்படவிட்டால் புதினமாகும்:
- 1308-௨௧ இல் எழுதப்பட்டது, தாந்தேயின் டிவைன் காமடி , கவிதை, இன்பர்னோ XXXI.97-132, 115-124 (ஸாமா போர்) மற்றும் பரதீசோ VI
- 1726, கல்லிவர்ஸ் டிராவல்ஸ் , விமர்சனமிக்க எழுத்து
- 1862, கஸ்தேவ் பிளாபர்ட்டின் சலாம்போ , ஹமில்கர் பார்காவின் காலத்தில் கார்தேஜில் அமைக்கப்பட்டது. ஹன்னிபால் ஒரு குழந்தையைப் போல் தோன்றினான்.
- 1996, எலிசபெத் கிராப்ட், ஹன்னிபலின் உளவாலி: ஒரு கார்தேஜ் நாவல் , 091015533X
- 1996–2000, ராஸ் லெக்கி, கார்தேஜ் டிரைலாஜி, 2008 படத்தைத் தழுவியது(1996, ஹன்னிபால்: ஒரு நாவல், ISBN 0-89526-443-9 ; 1999, சிபியோ, ஒரு நாவல், ISBN 0-349-11238-X ; கார்தேஜ், 2000, ISBN 0-86241-944-1)
- 2005, டெர்ரி மெக்கார்த்தி, த ஸ்வார்டு ஆஃப் ஹன்னிபால் , ISBN 0-446-61517-X
- 2006, டேவிட் அந்தோனி துர்ஹாம், பிரைடு ஆஃப் கார்தேஜ்: ஹன்னிபாலின் ஒரு நாவல் , ISBN 0-385-72249-4
- 2006, ஏஞ்சலா ரென்டர், போர்ஜ்டு பை லைட்னிங்: ஹன்னிபால், சிபியோ பற்றிய நாவல் , ISBN 1-4116-8002-2
தியேட்டரும் ஒபேராவும்
- ஹெக்டர் பெர்லியோஸில் 1858 ஓபேரா லெஸ் ட்ராயன்சில் , டிடோ சாகும் முன் அவளுக்கு காட்சி தருகிறான்.
- ஆண்ட்ரு லாய்ட் வெப்பரின் 1986 இசை த பாண்டம் ஆஃப் ஒபேரா மற்றும் 2004 படத் தழுவல், ஓபேரா பாபுலேர் ஹன்னிபால் பற்றி ஒரு ஒபேராவுக்காக ஒத்திகையில் உள்ளது.
ரானுவ வரலாறு
மிகச் சிறந்த ரானுவ நுணுக்கங்கள் மற்றும் உத்திகள் தீட்டுவதில் ஹன்னிப்பால் எப்போதுமே சிறந்தவராக குறிப்பிடப்பட்டார். அப்பியானின்படி, இரண்டாம் பியூனிக் போரின் பல ஆண்டுகள் கழித்து, செலுசிட் அரசாங்கத்தில் ஹன்னிபால் ஒரு அரசியல் ஆலோசகராக இருந்தார, ரோமில் இருந்து அரசியல் பயணமாக சிபியோ அங்கு அனுப்பப்பட்டான்.
It is said that at one of their meetings in the gymnasium Scipio and Hannibal had a conversation on the subject of generalship, in the presence of a number of bystanders, and that Scipio asked Hannibal whom he considered the greatest general, to which the latter replied, 'பேரரசர் அலெக்சாந்தர்.'
To this Scipio assented since he also yielded the first place to Alexander. Then he asked Hannibal whom he placed next, and he replied, 'Pyrrhus of Epirus,' because he considered boldness the first qualification of a general; "for it would not be possible," he said, 'to find two kings more enterprising than these.'
Scipio was rather nettled by this, but nevertheless he asked Hannibal to whom he would give the third place, expecting that at least the third would be assigned to him; but Hannibal replied, 'To myself; for when I was a young man I conquered Hispania and crossed the Alps with an army, the first after Hercules. I invaded Italy and struck terror into all of you, laid waste 400 of your towns, and often put your city in extreme peril, all this time receiving neither money nor reinforcements from Carthage.'
As Scipio saw that he was likely to prolong his self-laudation he said, laughing, 'Where would you place yourself, Hannibal, if you had not been defeated by me?' Hannibal, now perceiving his jealousy, replied, 'In that case I should have put myself before Alexander.' Thus Hannibal continued his self-laudation, but flattered Scipio in a delicate manner by suggesting that he had conquered one who was the superior of Alexander.
At the end of this conversation Hannibal invited Scipio to be his guest, and Scipio replied that he would be so gladly if Hannibal were not living with Antiochus, who was held in suspicion by the Romans. Thus did they, in a manner worthy of great commanders, cast aside their enmity at the end of their wars.[52][53]
ஹன்னிபாலின் வெற்றிகள் (குறிப்பாக கேன்னேவில் பெற்ற வெற்றி) உலகமெங்கும் மிலிட்டரி பாடங்களில் ஒன்றாக படிக்கப்படுகிறது.
.jpg)
மேக்சிமிலியன் ஓட்டோ பிஸ்மார்க் கஸ்பாரி, 1911 என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவில் ஹன்னிபாலை இப்படியாகப் புகழ்கிறார்:
As to the transcendent military genius of Hannibal there cannot be two opinions. The man who for fifteen years could hold his ground in a hostile country against several powerful armies and a succession of able generals must have been a commander and a tactician of supreme capacity. In the use of strategies and ambuscades he certainly surpassed all other generals of antiquity. Wonderful as his achievements were, we must marvel the more when we take into account the grudging support he received from Carthage. As his veterans melted away, he had to organize fresh levies on the spot. We never hear of a mutiny in his army, composed though it was of North Africans, Iberians and Gauls. Again, all we know of him comes for the most part from hostile sources. The Romans feared and hated him so much that they could not do him justice. Livy speaks of his great qualities, but he adds that his vices were equally great, among which he singles out his more than Punic perfidy and an inhuman cruelty. For the first there would seem to be no further justification than that he was consummately skillful in the use of ambuscades. For the latter there is, we believe, no more ground than that at certain crises he acted in the general spirit of ancient warfare. Sometimes he contrasts most favorably with his enemy. No such brutality stains his name as that perpetrated by Claudius Nero on the vanquished Hasdrubal. Polybius merely says that he was accused of cruelty by the Romans and of avarice by the Carthaginians. He had indeed bitter enemies, and his life was one continuous struggle against destiny. For steadfastness of purpose, for organizing capacity and a mastery of military science he has perhaps never had an equal.[54]
அவனது கால ரோம அரசர்களே அவனது சிறந்த ரானுவ தலைமைப்பண்பை அங்கீகரித்தனர், "அவனால் முடிந்ததை மற்றவர்களை செய்யச் சொன்னதில்லை, தானாகவும் செய்ய மாட்டான்" [55] பாலிபிய்சின் 23, 13, பக்கம் 423: "ஹன்னிபால் இயற்கையாகவே ஒரு தலைவர் என்பதற்கு இது ஒரு மிகப்பெரிய ஆதாரம். களத்தில் பதினேழு ஆண்டுகள் பணியாற்றினான். பல முரடான நாடுகளைக் கடந்திருக்கிறான். பல நாடுகளின் பல மொழிகள் பேசும் மக்களஈ தன் கீழ் பணியாற்றச் செய்து, சிறந்து செயல்படச் செய்தான். அவனது இடத்தை யாரும் நினைத்து கூட பார்த்ததில்லை. அவனுடன் சேர்ந்த யாரும் ஒரு முறை சேர்ந்தால் அவர்களை ஒருபோது விரட்டியதில்லை, அவர்கள் விலகிச் சென்றதுமில்லை."
ஆல்பிரட் வான் ஷ்கிபனின் வழங்கிய தலைப்பான "ஸ்கிளைபின் திட்டம்" என்பது அவரது மிலிட்டரி படிப்புகளில் இருந்து ஏற்பட்டது, ஹன்னிபாலின் நுட்பம் திறமை சூழ்ந்ததாகவும் கேன்னே போன்ற வெற்றியை ரோமப்படையை அழித்துப் பெறும் அளவும் இருந்தது.[56][57] ஜார்ஜ் எஸ் பாட்ரான் என்பவர் ஹன்னிபாலின் தலைமையேற்பை நெப்போலியனிக் வீரனாகவும் ரோம பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் நம்பினார்.[58][59] நார்மன் ஸ்வார்ஸ்காஃப், என்னும் வளைகுடாப் போர் கூட்டணிப் படைகளின் கமாண்டர், "போரின் தொழில்நுட்பம் மாறலாம், ஆயுதங்களின் வசதியும் அப்படியே மாறுகிறது. ஆனால் அதே போர் கொள்கைகள் ஹன்னிபால் இன்றிருந்தால் அப்படி பயன்படுத்தப்படுமோ அப்படியே பயன்படுத்தப் படுகின்றன" என்றார்.[60]
ரானுவ வரலாற்று நிபுணர் தியோடர் அய்ரால்ட் டாட்ஜின்படி,
Hannibal excelled as a tactician. No battle in history is a finer sample of tactics than Cannae. But he was yet greater in logistics and strategy. No captain ever marched to and fro among so many armies of troops superior to his own numbers and material as fearlessly and skillfully as he. No man ever held his own so long or so ably against such odds. Constantly overmatched by better soldiers, led by generals always respectable, often of great ability, he yet defied all their efforts to drive him from Italy, for half a generation. Excepting in the case of Alexander, and some few isolated instances, all wars up to the Second Punic War, had been decided largely, if not entirely, by battle-tactics. Strategic ability had been comprehended only on a minor scale. Armies had marched towards each other, had fought in parallel order, and the conqueror had imposed terms on his opponent. Any variation from this rule consisted in ambuscades or other stratagems. That war could be waged by avoiding in lieu of seeking battle; that the results of a victory could be earned by attacks upon the enemy’s communications, by flank-maneuvers, by seizing positions from which safely to threaten him in case he moved, and by other devices of strategy, was not understood... [However] For the first time in the history of war, we see two contending generals avoiding each other, occupying impregnable camps on heights, marching about each other's flanks to seize cities or supplies in their rear, harassing each other with small-war, and rarely venturing on a battle which might prove a fatal disaster—all with a well-conceived purpose of placing his opponent at a strategic disadvantage... That it did so was due to the teaching of Hannibal.[8]
திரைப்படம்
திரைப்படம் | மற்ற குறிப்புகள் | |
1914 | கபிரியா | இத்தாலிய அமைதிப்படம் |
1939 | சிபியோ ஆஃப்ரிகானஸ் - ஹன்னிபாலின் தோல்வி (சிபியோன் லா'ஆஃப்ரிகான்) | இத்தாலிய கலைப் படம் |
1955 | ஜூப்பிடர்ஸ் டார்லிங் | MGM இசைப் படம் ஹோவர்டு கீல் மற்றும் எஸ்தர் வில்லியம்ஸ் |
1960 | அன்னிபேல் | இத்தாலிய கலைப் படம் விக்டர் மெச்சியூர் |
1996 | கல்லிவர்ஸ் டிராவல்ஸ் | கல்லிவர் சம்மன்ஸ் ஹன்னிபால் பிரம் எ மேஜிக் மிரர் |
1997 | த கிரேட் பேட்டில்ஸ் ஆஃப் ஹன்னிபால் | பிரிட்டிஷ்ஆவணப்படம் |
2001 | ஹன்னிபால்: த மேன் ஹூ ஹேடட் ரோம் | பிரிட்டிஷ் ஆவணம் |
2005 | த ட்ரு ஸ்டோரி ஆஃப் ஹன்னிபால் | பிரிட்ட்ஷ் ஆவணப்படம் |
2004 | த பாண்டோம் ஆஃப் ஒபேரா | ஒபேரா ஒத்திகப் பார்த்தது ஹன்னிபாலைப் பற்றி தான் அதன் தலைப்பு ஹன்னிபால் |
2005 | ஹன்னிபால் vs.ரோம் | நேசனல் ஜாக்ரபிக் சேனலில் |
2006 | ஹன்னிபால் - ரோமின் வொர்ஸ்ட் நைட்மேர் | டிவி படத்தில் நடித்த அலெக்சான்டர் சித்திக் டைட்டில் ரோலில் |
2008 | பேட்டில்ஸ் BC S01E01 | ஹிஸ்டரி சேனல்ஸ் டிவி பிலிம் |
2010/2011 | ஹன்னிபால் த கான்குவரர் | முக்கிய மூவி, வின் டீசல் ஹன்னிபால் என்ற ரோலில் (உறுதிப்படுத்தப்படவில்லை) |
சித்திர படங்கள்
- தன்னை கொல்லும் முன் வழக்கமான பேச்சை பேசுகிறார்
- ஹன்னிபால் ஆல்பஸை கடத்தல்.
- ஹன்னிபாலின் லட்சியம்.
- குழந்தையாக இருக்கும் போதே ரோமர்கள் மீது கொண்ட கோபத்தில் சத்தியம் செய்கிறான்.
- வெப்காமிக் ஹன்னிபல் கோஸ் டு ரோம் ஹன்னிபாலின் பயணங்களை நகைச்சுவையாக விவரிக்கின்றன.
- G.I. Joe: A Real American Hero காமிக்கான டெவில்ஸ் டியுவில், ஹன்னிபாலை உயிரோடு மீண்டும் உருவாக்கினார் டாக்டர் மைண்ட்பைன்டர் மற்றும் த காயிலின் உறுப்பினராகவும் ஆனார்.
காலக் குறிப்புகள்
வார்ப்புரு:Hannibal timeline
குறிப்புகள்
- As with Greek and Roman practice filiation was a normal part of Carthaginian nomenclature.[1]
- ஹன்னிபாலின் மரணத் தேதி கிமு ௧௮௩ என்று மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அது கிமு 182இலும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
குறிப்புதவிகள்
- Ameling, Walter Karthago: Studien zu Militär, Staat und Gesellschaft p.81-82
- பென்ஸ், பிரான்ஸ L. 1982. பொனடிசியப்ன் மற்றும் பியூனிக் பதிவுகளில் தனிநபர் பெயர்கள் P.313-314
- பேயர், தாமஸ். 2004. ஸ்டூடியன் ஜூ பிளாடஸ்' போநுலஸ். பக்கம்.225
- பிரட்ரிச், ஜோஹன்ஸ், வொல்ப்கேங் ரோலிக், மரியா குலியா அமடாசி , மற்றும் வெர்னர் R. மேயர். 1999. போனிசிக்-புனிசிக் கிராமட்டிக். பக்கம்.225
- பிரவுன், ஜான் பேர்மேன். 2000. இஸ்ரேல் அன்ட் ஹெல்லாஸ்: சேக்ரட் இன்ஸ்டிடியூசன்ஸ் வித் ரோமன் கவுன்டர்பார்ட்ஸ் P.126-128
- புளுடார்க், சிபியோவை அடித்த போது உங்கள் வாய்ப்பு என்ன என்று கேட்டதற்கு, அனைவரிலும் தானே சிறாப்பு என்று பதிலளித்தார்லைஃப் ஆஃப் டைடஸ் பிளாமினியஸ் 21.3-4.
- புளுடர்க், பைரசின் வாழ்க்கை 8.2.
- Ayrault Dodge, Theodore (1995). Hannibal: A History of the Art of War Among the Carthagonians and Romans Down to the Battle of Pydna, 168 BC. Da Capo Press.
- லேன்சலின், எஸ். ஹன்னிபால் p.6.
- ரிவர்ஸ் ஸ்பின்ஸ் பாட்ட்டன் , த செகன்ட் கமிங் ஆஃப் ஹன்னிபால் .
- The History of Rome: Vol III, by Livy
- டாட்ஜ், தியோடர் அய்ரால்ட், ஹன்னிபால்: போரின் வரலாறு, கர்தீஜியர்கள் மற்றும் ரோமர்கள் பைட்னா யுத்தம், 168 B.C , p. 143
- பாகன், கேரட் G. "பழங்கால ரோமின் வரலாறு". உரை 13: "இரண்டாம் பியூனிக் போர்". டீசிங் கம்பணி, "கிரேட் கோர்சஸ் " தொடர்.
- பிரிவாஸ், ஜான், ஹன்னிபால் ஆல்ப்ஸ் கிராசஸ்: இத்தாலியைப் பிடித்தல், இரண்டாம் பியொனிக் போர் , p. 86
- லேன்ஸல், செர்ஜ், ஹன்னிபால் , p. 60
- மான்ட்ஜீப்ன்வர்: பீட்டர் கோன்னோலி, ஹன்னிபால் அன்ட் த இன்வேசன் ஆஃப் ரோம் (1978); (எக்ஸ்டன்சிவ் சம்மரி); கோல் டி லா டிராவர்செட்: கேவின் டி பீர், ஆல்ப்ஸ் அன்ட் த எலிபண்ட்ஸ் மற்றும் நெப்போலியன் III; மஹானி 2008, "ஹன்னிபால்ஸ் ஒடிசி; இத்தாலியவின் அல்பைன் இன்வேசன்"; மான்ட் செனிஸ்: டெனிஸ் பிராக்டர், வரலாற்றில் ஹன்னிபாலின் படையெடுப்பு . மற்ற கோட்பாடுகளில் (செர்ஜ் லான்ஸல், ஹன்னிபால் (1995) மற்றும் கோல் டு பெடிட் செயின்ட் பெர்னார்டு(பார்டோல்டு நெய்பர்).
- லிவி ஹிஸ்டரி ஆஃப் ரோம்21 ,36
- S. லேன்ஸல், ஹன்னிபால் (1995; ஆங்கில மொழிபெயர்ப்பு 1999) page 60.
- டாட்ஜ், தியோடர். ஹன்னிபால் . கேம்பிரிட்ஜ் மசக்குசட்ஸ்: டி காபோ பிரஸ், 1891 ISBN 0-306-81362-9
- பாலிபியஸ், ஹிஸ்டரிஸ் , புத்தகம் III, p74
- லிடல் ஹார்ட், B. H., ஸ்ட்ராடஜி , நியுயார்க் சிட்டி, நியுயார்க், பென்குயின் குழு , 1967
- USAWC 2வது பியூனிக் போரில் உத்திகள் ஒப்பீடு ஜேம்ஸ் பார்கர். HTML ஆக் காட்டும்
- கோல்ட்ஸ் வொர்தி, ஆட்ரரியன் K. கிமு 100 — கிபி 200இல் பபோரில் ஈடுபட்ட ரோமப்படை , நியுயார்க்
- "Internet Ancient History Sourcebook".
- காட்ரல், லியோனார்டு, ரோமின் எதிரி , எவான்ஸ் பிரஸ், 1965, ISBN 0-237-44320-1
- ப்ரிவாஸ், ஜான், ஹன்னிபால் கிராசஸ் த ஆல்ப்ஸ் , p. xv
- சாஅப்ளின், ஜேன் டன்பர், லிவியின் எக்சம்ப்ளரி ஹிஸ்டரி , p. 66
- பாலிபியஸ், த பாலிபியஸ் வரலாறு, 2 பதிப்புகள்., டிரான்ஸ். ஈவ்லின் S. ஷக்பர் (லண்டன்: மேக்மில்லன், 1889), I. 264-275.
- பிரிவாஸ், ஜான், ஹன்னிபால் குராசஸ் த ஆல்ப்ஸ்: த இன்வேசன் ஆஃப் இத்தாலி மற்றும் இரந்டாவது பியூனிக் போர் , p. 200
- பிலினி, ட்ரா. மேரி பீகான், த எல்டர் பிலினி ஆன் தா ஹுமன் அனிமல் , p 361
- லிவி, த வார் வித் ஹன்னிபால் , 28.46
- போர்ன்டியன்|, ஜார்ஜ் A. (|2006 அ கன்சைஸ் ஹிஸ்டரி ஆஃப் த ஆர்மேனியன் மக்கள்: பழங்காலத்தில் இருந்து இப்போது வரை . கோடா மீசா, CA: மஸ்தா, p. 29. ஐஎஸ்பிஎன் 0-471-69059-7.
- கொர்னேலியஸ் நிபோஸ், ஹன்னிபால் 11.4-5.
- கொர்னேலியஸ் நிபோஸ், ஹன்னிபால் 12.5; ஜூவனல், விமர்சனங்கள் X.164
- ஆலன் எம்ரிக், பிராக்டிகல் லத்தீன்
- ஹோலண்ட், ரோம் அன்ட் ஹர் எனிமீஸ் 8
- லிவி, தவார் வித் ஹன்னிபால் 22.61
- லேசன்பி, ஹன்னிபல்ஸ் வார் 237-8
- கோல்ட்ஸ்வொர்த்தி, கார்தேஜின் வீழ்ச்சி 315
- J. F. லேசன்பி, த ஹானிபலிக் வார், 254
- லிவி, த வார் வித் ஹன்னிபால் 26.7 http://mcadams.posc.mu.edu/txt/ah/Livy/Livy26.html
- லிவி, த வார் வித் ஹன்னிபால் 26.9 http://mcadams.posc.mu.edu/txt/ah/Livy/Livy26.html
- லிவி, த வார் வித் ஹன்னிபால் 26.8 http://mcadams.posc.mu.edu/txt/ah/Livy/Livy26.html
- லிவி, த வார் வித் ஹன்னிபால், 26.11
- J.F. லேசன்பி, த ஹனிபாலிக் வார் , p. 254
- பக்னால், த பியூனிக் வார்ஸ் 203
- லேசன்பி, ஹன்னிபாலின் போர் 235
- லேசன்பி ஹன்னிபாலின் போர் 254
- கோல்ட்ஸ் வொர்தி கார்தேஜின் வீழ்ச்சி 366-7)
- ஹந்-னிபால், கார்தீஜிய தலைவர், த கொலம்பியா என்சைக்ளோபீடியா
- Mary Macgregor. "The Death of Hannibal". The Story of Rome. http://www.mainlesson.com/display.php?author=macgregor&book=rome&story=hannibal2&PHPSESSID=eb1cde7138b9994d0c97c7a7c1005a85. பார்த்த நாள்: 2006-07-05.
- Appian, History of the Syrian Wars, § 10 and § 11 at Livius.org
- M.O.B. Caspari, HANNIBAL ("grace of Baal") 1911 Encyclopædia Britannica
- ஹன்னிபால் அட் கார்பிநோக்டம்
- டெய்லி, கிரிகோரி, கேன்னே: இரண்டாம் பியூனிக் போரில் அவனது அனுபவம் , p. x
- காட்ரல், லியோனார்டு, ஹன்னிபால்: எனிமி ஆஹ்ப் ரோம் , p. 134
- "யாரவது ஒருவன் ஹன்னிபலின் மறுபிரவி என்று எண்ணினால் அல்ல்லது அவனது சில பட்டன்களைக் கொண்டிருந்தால்",டி'எஸ்டே, கார்லோ, பாட்டன்: எ ஜீனியஸ் பார் வார் , p. 815
- ஹிர்ஷான், ஸ்டன்லி, ஜெனரல் பாட்டன்: ஒரு போர்வீரனின் வாழ்க்கை , p. 163
- கால்டன், ஜேம்ஸ், த மிலிட்டரி கொடேசன் புக் , நியுயார்க் நகரம், நியுயார்க், தாமஸ் டன் புக்ஸ், 2002
பியூனிக் போர்கள் பற்றி மேலும் படிக்க
- பிக்கர்மேன், எலியாஸ் J. "ஹன்னிபாலின் உடன்படிக்கை", அமெரிகன் ஜர்னல் ஆஃப் பைலாஜி , Vol. 73, No. 1. (1952), pp. 1–23.
- பிராட்போர்டு, E, ஹன்னிபால் , லண்டன், மேக்மில்லன் லண்டன்., 1981
- கேவன், பி., பியூனிக் யுத்தங்கள் , லண்டன், ஜார்ஜ் வெர்டன்பெல்டு மற்றும் நிக்கல்சன் லிட்., 1980
- காட்ரல், லியோனார்டு, ஹன்னிபால்: எனிமி ஆஃப் ரோம் , டா காபோ பிரஸ், 1992, ISBN 0-306-80498-0
- டேலி, கிரிகோரி, கேன்னே: த எக்ஸ்பீரியன்ஸ் ஆப் பேட்டில் இன் த செகண்டு பியூனிக் வார் , லண்டன்/நியூயார்க், ரூட்லெட்ஜ், 2002, ISBN 0-415-32743-1
- டெல்புரூக், ஹன்ஸ், வார்பேர் இன் ஆண்டிகுட்டி , 1920, ISBN 0-8032-9199-X
- ஹோயோஸ், டெக்ஸ்டர்: ஹன்னிபாலின் டைனாஸ்டி: மேற்கு மத்தியதரைக்கடலில் பலமும் அரசியலும், கிமு 247–183 (ரூட்லெட்ஜ்: லண்ட்ன் & நியூயார்க், 2003; மேப்களில் காகித பதிப்பு, 2005) - போர் உத்தி பற்றிய விவாதம்.
- ஹோயோஸ், டெக்ஸ்டர், ஹன்னிபால்: ரோமின் சிறந்த எதிரி , பிரிஸ்டோல் போனிக்ஸ் பிரஸ், 2005, ISBN 1-904675-46-8 (hbk) ISBN 1-904675-47-6 (pbk)
- லேம்ப், ஹாரோல்டு, ஹன்னிபால்: ஒன் மேன் அகைன்ஸ்ட் ரோம் , 1959.
- லேன்சல், செர்ஜ், ஹன்னிபால் , பிளாக்வெல் பப்ளிசிங், 1999, ISBN 0-631-21848-3
- லிவி, மற்றும் டி செலின் கோர்ட், ஆபரி, த வார் வித் ஹன்னிபால்: புத்தகங்கள் XXI-XXX வரலாற்றின் அடித்தளம் , பெங்குயின் கிளாசிக்ஸ், ரீபிரிந்ட் எடிசன், ஜூலை 30, 1965, ISBN 0-14-044145-X (pbk)(also )
- பிரியாஸ், ஜான் ஹன்னிபால் கிரஸஸ் த ஆல்ப்ஸ்: த இன்வேசன் ஆஃப் இத்தாலி அன்ட் த செகன்ட் பியூனிக் போர் , 2001, ISBN 0-306-81070-0, எந்த வழியில் சென்றார் என்று கேள்வி கேட்கிறது
- டால்பர்ட், ரிச்சர்டு J.A., ed., அட்லஸ் ஆஃப் கிளாசிகல் ஹிஸ்டரி , ரூட்லெட்ஜ், லண்டன்/நியூயார்க், 1985, ISBN 0-415-03463-9
- யார்ட்லி, J.C. (மொழிபெயர்ப்பாளர்) & ஹோயோஸ், D. (அறிமுகம், குறிப்புகள், மேப்ஸ் அன்ட் அபண்டிக்ஸ் ஆன் ஹன்னிபல் மார்ஸ் ஓவர் த ஆல்ப்ஸ்): லிவி: ஹன்னிபல் போர்: புத்தகங்கள் 21 முதல் 30 (ஆக்ஸ்போர்டு வேர்ல்ட்ஸ் கிளாசிக்ஸ்: ஆக்ஸ்போர்டு. பிரஸ், UK & USA, 2006).
- டாட்ஜ், தியோடர். "ஹன்னிபால்", ஹன்னிபால், இறண்டாம், பியூனிக் போரின் போது . நியு யார்க்: பார்னஸ் அண்ட் நோபல்
வெளிப்புற இணைப்புகள்
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஹன்னிபால் |
- ஹன்னிபாலின் வாழ்க்கை வரலாறு
- ஹன்னிபால் ஜேகப் அப்போட்
- ஹன்னிபால்ஸ் லைப் பை கொர்னேலியஸ், லத்தீன் எழுத்து, ஜெர்மன் மொழிபெயர்ப்பு
- நேசனல் ஜாக்ர்பி சேனல் டாகுமண்டரி: ஹன்னிபல் v ரோம் பாகம் I மற்றும் பாகம் II