வண்ணநிலவன்
வண்ணநிலவன் (பிறப்பு: திசம்பர் 15, 1949) ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். தூத்துக்குடி மாவட்டம், தாதன்குளம் என்னும் கிராமத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் உ. ராமச்சந்திரன் ஆகும். இவர் பாளையங்கோட்டை, திருநெல்வேலி மற்றும் ஸ்ரீ வைகுண்டம் ஆகிய ஊர்களில் படித்தார். ‘துக்ளக்’ பத்திரிகையிலும் பின்னர் ‘சுபமங்களா’ பத்திரிகையிலும் ஆசிரியர் குழுவில் சிறிது காலம் வேலைப் பார்த்தார். தமிழில் குறிப்பிடத்தகுந்த திரைப்படமான ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைபடத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.
குடும்பம்
இவரின் தந்தை உலகநாதபிள்ளை மற்றும் தாய் இராமலட்சுமி அம்மாள். இவரது பெற்றோர் இவருக்கு வைத்த இயற்பெயர் ராமச்சந்திரன் ஆகும். இவர்களது சொந்த ஊர் திருநெல்வேலி. இவரின் பள்ளிப் பருவத்துக்குப் பிறகு பணி காரணமாக தாதன்குளம், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, பாண்டிச்சேரி, சென்னை உட்பட பல ஊர்களில் வண்ணநிலவன் வசித்துள்ளார். இவர் ஏப்ரல் 07, 1977 அன்று சுப்புலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆனந்த் சங்கர் என்ற மகனும் சசி, உமா என்ற இரு மகள்களும் உள்ளனர். தற்போது சென்னை, கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
படைப்புகள்
இவர் நாவல், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் போன்றவற்றை எழுதி அவை நூல்களாக வெளி வந்திருக்கின்றன.
நாவல்கள்
- நேசம் மறப்பதில்லை நெஞ்சம், 1975, கவிதா பதிப்பகம், சென்னை. [1]
- நெஞ்சம்
- கடல்புரத்தில்
- கம்பா நதி ,
- ரெயினீஸ் ஐயர் தெரு
சிறுகதைத் தொகுதிகள்
- எஸ்தர்
- பாம்பும் பிடாரனும்
- தர்மம்
- உள்ளும் புறமும்
- தாமிரவருணிக் கதைகள்
- வண்ணநிலவன் கதைகள்
- கரையும் உருவங்கள்
கவிதைத் தொகுதிகள்
- மெய்ப்பொருள்
- காலம்
பிற படைப்புகள்
- அவள் அப்படித்தான் எனும் திரைப்படத்திற்கான வசனம் எழுதியவர்களுள் ஒருவராகப பணியாற்றியுள்ளார்.
- இவரது “கடல்புரத்தில்” கதை சென்னைத் தொலைக்காட்சியில் தொடராக வெளியானது.
விருதுகள்
- இலக்கியச் சிந்தனை
- தமிழ் வளர்ச்சி கழக பரிசு
- ராமகிருஷ்ண ஜெய்தயாள் விருது
வெளி இணைப்புகள்
- தில்லைநாயகம், வே (பதி), நூல்கள் அறிமுகவிழா 1976; மு.பதி 1976; கன்னிமாரா பொதுநூலக நூலகர், சென்னை. பக்கம் 36