பெரிய தம்பிரான்
ஆகமம் சாராத கிராம தெய்வ வழிபாட்டு முறைகளில் பெரிய தம்பிரான் வழிபாடும் ஒன்றாகும். இது பத்ததி வழிபாட்டு முறையில் அடங்கும். இலங்கையின் கிழக்குப் பகுதியில் பெரிய தம்பிரான் வழிபாடு ஆங்காங்கே காணப்படுகின்றது. சலவைத் தொழில் புரியும் மக்களில் குல தெய்வமாக இவ்வழிபாடு குறிப்பிடப்படுகின்றது.[1]
ஐதீகக் கதை
சிவபெருமானைப் புறக்கணித்து விட்டு தக்கன் யாகம் ஒன்றை நடாத்துகின்றான். சிவனுக்கு சேரவேண்டிய அவிபாகங்களையும் தர மறுக்கின்றான். இந்நிலையில் இவ் யாகத்தை நடக்காது செய்ய வீரபத்திரனும் காளியும் செல்கின்றார்கள். இந்த யாக குண்டலத்தில் இருந்து பெரிய தம்பிரான் தோன்றிதாக புராணம் கூறுகின்றது. இதனால் பெரிய தம்பிரான், தக்கயாகேசுவரன் எனவும் அழைக்கப்படுகின்றார்.[1]
வழிபாட்டுமுறை
வருடாந்த சடங்கு ஆடி மாத முழுமதி தினத்தை இறுதி நாளாகக் கொண்டு நடைபெறும். இளநீர், கரும்பு, முக்கனி, கடலை, பொங்கல் என்பன இத்தெய்வத்துக்குரிய நைவேத்தியப் பொருள்களாகும்.[1]
துணைத்தெய்வம் நீலாசோதையன்; பரிவார தெய்வங்கள் பிள்ளையார், வைரவர், முருகன், வீரபத்திரர், மகாவிட்டுணு, அம்மன்.[1]
சான்றாதாரங்கள்
- சைவப்புலவர்.எஸ். தில்லைநாதன், "மட்டக்களப்பில் இந்து கலாசாரம்", மணிமேகலை பிரசுரம்,முதல் பதிப்பு (2006)