பாவாபுரி
பாவாபுரி (Pawapuri) (இந்தி: पावापुरी) சமணர்களின் புனிதமான இத்தலம், இந்தியாவின் பிகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில் உள்ளது. பாவாபுரி நகரம், ராஜகிரகத்திலிருந்து 19 கிமீ தொலைவிலும், பிகார் மாநிலத் தலைநகரமான பாட்னாவிலிருந்து 101 கிமீ தொலைவிலும் உள்ளது. [1]பாவாபுரி நகரத்தில் மகாவீரர் மறைந்தார். மகாவீரருக்கு அர்பணிக்கப்பட்ட ஜல் மந்திர் இந்நகரத்தில் உள்ளது.
Pawapuri पावापुरी
பாவாபுரி पावापुरी | |
---|---|
நகரம் | |
![]() பாவாபுரியில் சமணர்களின் நீர்க்கோயில் | |
![]() ![]() பாவாபுரி ![]() ![]() பாவாபுரி | |
ஆள்கூறுகள்: 25°05′30″N 85°32′20″E | |
நாடு | ![]() |
மாநிலம் | பிகார் |
மாவட்டம் | நாலந்தா |
நிர்மாணித்தவர் | இராஜா தருமபாலன் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | மகதி மொழி, இந்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அருகமைந்த நகரம் | பாட்னா |
இணையதளம் | www.pawapuritirth.org |
வரலாறு
மகதப் பேரரசர் அஜாதசத்ருவின் ஆட்சிக் காலத்தில், மகாவீரர் பாவாபுரிக்கு வருகை புரிந்த போது, பாவாபுரியின் குறுநில மன்னர் ஹஸ்திபாலனுடன் தங்கியிருந்தார். [2]
மகாவீரர் பரிநிர்வானம் எய்திய பின்னர் பாவாபுரியில் அவரது உடல் எரிக்கப்பட்டது. [3]மகாவீரரின் சாம்பலை மக்கள் கூட்டம் கூட்டமாக அள்ளிச் சென்றதால், அவ்விடம் பள்ளமாகி ஒரு குளம் போல் காட்சியளித்தது. [4]
தற்போது அக்குளத்தின் நடுவே ஜல் மந்திர் எனும் பெயரில் மகாவீரருக்கு கோயில் எழுப்பட்டுள்ளது. மகாவீரர் இறுதியாக மக்களுக்கு தருமத்தை உபதேசித்த பாவாபுரியில், கோன் மற்றும் சமோசரன் போன்ற சமணக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளது. [4]
படக்காட்சிகள்
- சமோசரன் கோயில்
- கோன் கோயில்
- பாவாபுரி ஜல் மந்திர்/நீர்க்கோயில்
- நீர்க் கோயில்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- "Destinations :: Pawapuri ::Bihar State Tourism Development Corporation". Bstdc.bih.nic.in. பார்த்த நாள் 2012-03-05.
- "Digambar Jain temple Pavapuri or Pawapuri". Digambarjainonline.com. பார்த்த நாள் 2012-03-05.
- http://www.pawapuritirth.org
- "Bihar State Tourism Development Corporation". Pawapuri. பார்த்த நாள் 2009-03-14.