பப்பதேவன்
பப்பதேவன் என்பது முற்காலப் பல்லவர் மன்னர்களில் முதல் மன்னனின் காரணப்பெயராகும்.[1] இவனுடைய உண்மையான பெயர் தெரியவில்லை. இவன் சிவகந்தவர்மன் என்ற பல்லவ மன்னன் வெளியிட்ட பட்டயம் ஒன்றில் சில்லரேகக் கொடுங்கா என்னும் ஊரை சிலருக்கு தானம் கொடுத்ததாக உள்ளது. இந்த ஊர் சாதவாகன ராட்டிரம் பகுதியில் உள்ளதால் இவனாட்சியில் பல்லவர்கள் தமிழகத்துக்கு வரவில்லை என்று அறியலாம்.[2] பல்லவ மன்னர்களுள் காஞ்சியை தலைநகராக முதலில் கொண்ட பேரரசன் பப்பதேவனின் மகனான சிவகந்தவர்மன் என்பவனே.[3].இம்மன்னனின் காலம் தொண்டை நாட்டை இளந்திரையனை அடுத்து ஆண்ட ஆதொண்டை வீர கூர்ச்சன் காலத்தை ஒத்துள்ளது எனவே ஆதொண்டை வீர கூர்ச்சனே பப்பதேவன் என கருதுகின்றனர்.
![]() பல்லவ சிம்ம கொடி | |
---|---|
பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
முற்காலப் பல்லவர்கள் | |
பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
விசய கந்தவர்மன் | புத்தவர்மன் |
இடைக்காலப் பல்லவர்கள் | |
விட்ணுகோபன் I | குமாரவிட்ணு I |
கந்தவர்மன் I | வீரவர்மன் |
கந்தவர்மன் II | சிம்மவர்மன் I |
விட்ணுகோபன் II | [[இரண்டாம் குமாரவிட்ணு|குமாரவிட்ணு II |
]]கந்தவர்மன் III | சிம்மவர்மன் II |
புத்தவர்மன் | நந்திவர்மன் I |
விட்ணுகோபன் III | குமாரவிட்ணு III |
சிம்மவர்மன் III | |
பிற்காலப் பல்லவர்கள் | |
சிம்மவிஷ்ணு | கிபி 555 - 590 |
மகேந்திரவர்மன் I | கிபி 590 - 630 |
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | கிபி 630 - 668 |
மகேந்திரவர்மன் II | கிபி 668 - 672 |
பரமேஸ்வரவர்மன் | கிபி 672 - 700 |
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) | கிபி 700 - 728 |
பரமேஸ்வரவர்மன் II | கிபி 705 - 710 |
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | கிபி 732 - 769 |
தந்திவர்மன் | கிபி 775 - 825 |
நந்திவர்மன் III | கிபி 825 - 850 |
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | கிபி 850 - 882 |
கம்பவர்மன் (வட பகுதி) | கிபி 850 - 882 |
அபராஜிதவர்மன் | கிபி 882 - 901 |
காலம்
மூலம் - சர்கார் என்பவர் வெளியிட்ட நூல்[4]
- இவனது மகனான சிவகந்தவர்மன் காலம் பொ.பி. 300 - 325 என்று கொள்ளத்தக்க சான்றுகள்
- இவன் வெளியிட்ட பட்டயத்தின் உரை பிராகிருதம் என்ற மொழியிலுள்ளது.
- வட மன்னர்களான குசானர்களை பின்பற்றி நாலாம் நூற்றாண்டு குப்தர்கள் தங்களை மகாராசாதிராசர் எனக்கூறிக்கொண்டதைப் போல் இவனும் தன்னைக் கூறிக் கொண்டமை.
- இவனுக்கு பின் வந்த பல்லவர்களான விட்னுகோபன் சமுத்திரகுப்தனுடன் பொ.பி. 350ல் போரிட்டனர்.[5]
இதனால் இந்த பப்பதேவன் ஆட்சிக்காலம் இவனுக்கு சற்று முந்திய ஆண்டுக்காலங்களே ஆகும்.
மூல நூல்
மேற்கோள்கள்
- இவனின் பெயர் பப்பதேவன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பப்ப என்றால் வெளியிட்ட மன்னனின் தந்தை எனவே பொருள்ப்டும்
- ஹிரதவல்லிப் பட்டயம்
- Vide Hera's Study in Pallavan History, p 11
- D.Sircar's "Successors of the Satavahanas", pp 164-166, 247-248
- Rev. H Heras, SJ (1931) Pallava Genealogy: An attempt to unify the Pallava Pedigrees of the Inscriptions, Indian Historical Research Institute
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.