நையாண்டிப் பாடல்

ஒரு நபரையோ நிகழ்வையோ கேலி செய்யும் நோக்குடன் நகைச் சுவை தொனிக்கப் பாடப்பட்ட நாட்டார் பாடல்கள் நையாண்டிப் பாடல்கள் அல்லது கேலிப்பாடல்கள் எனப்படும்.


நாட்டுப்புற
பாடல் வகைகள்
தமிழ் நாட்டார் பாடல்கள்
தாலாட்டுப் பாடல்
ஒப்பாரிப் பாடல்
விளையாட்டுப் பாடல்
நையாண்டிப் பாடல்
கதைப்பாடல்
காதல் பாடல்
தொழிற்பாடல்
மீனவர் பாடல்
நெற்குத்திப் பாடல்
ஏற்றப் பாடல்
நடவுப் பாடல்

தொகு

நையாண்டிப் பாடல்கள் பொதுவாக சமூக சீரமைப்பு நோக்கிலும் வளர்ச்சி நோக்கிலும், அவை மீறப்படும் போது எழும் சீற்றம் காரணமாகப் பாடப்பட்டவைகளாகக் கருதப்படுகின்றன. ஆயினும் இதற்குப் புறம்பான காழ்ப்புணர்ச்சியும் பல பாடல்களை ஆழ்ந்து நோக்கும் போது தொனிக்கிறது.

எ.கா:

1. பொருத்தமில்லாத திருமண சம்பந்தம் ஒன்று பேசப்படும் போது

காக்கொத்தரிசாம்
கண்ணுழுத்த செத்த மீனாம்
போக்கற்ற மீரானுக்குப்
பொண்ணுமாகா வேணுமாம்.
கச்சான் அடிச்ச பின்பு
காட்டில் மரம் நின்றது போல்
உச்சியில நால மயிர்
ஓரமெல்லாம் தான் வழுக்கை.

2. அந்நியர் ஆட்சியின் போது அதற்கெதிராக

என்ன பிடிக்கிறாய் அந்தோனி
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
பொத்திப் பொத்திப் புடி அந்தோனி
பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே
கோண ஆகாண மலையேறி
கோப்பிப் பழம் பறிக்கையிலே
ஒரு பழம் குறைஞ்சதெண்டு
ஓலம் வைச்சான்வெள்ளைத் துரை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.