நகோர்னோ கரபாக் குடியரசு

நகோர்னோ கரபாக் குடியரசு[1] (Nagorno-Karabakh Republic) அல்லது ஆட்சாக் குடியரசு [1] (Artsakh Republic) நிகழ்நிலைப்படி விடுதலையான குடியரசாகும். இது தெற்கு கோகேசியாவில் உள்ள நகோர்னோ-கரபாக் பகுதியில் அசர்பைஜானின் தலைநகரமான பாகுவிலிருந்து 270 கிலோமீட்டர் (170 மைல்) மேற்கில் ஆர்மேனியாவில் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது.

நகோர்னோ-கரபாக் குடியரசு
Լեռնային Ղարաբաղի Հանրապետություն
Lernayin Gharabaghi Hanrapetut’yun
கொடி சின்னம்
நாட்டுப்பண்: "Azat u ankakh Artsakh"
"Free and Independent Artsakh"
Location of நகோர்னோ கரபாக்
தலைநகரம்Stepanakert
39°52′N 46°43′E
ஆட்சி மொழி(கள்) ஆர்மேனியம்1
அரசாங்கம் ஏற்பில்லை
   அதிபர் பக்கோ சஹாக்யன்
   பிரதமர் அரயிக் ஹருட்யுன்யன்
விடுதலை அசர்பைஜானிடமிருந்து
   கருத்துக்கணிப்பு டிசம்பர் 10 1991 
   அறிவிப்பு ஜனவரி 6 1992 
   ஏற்பு இல்லை 
பரப்பு
   மொத்தம் 11,458.38 கிமீ2
4,424.10 சதுர மைல்
மக்கள் தொகை
   மார்ச் 2007 கணக்கெடுப்பு 138,000 (n/a)
நாணயம் ஆர்மேனிய டிராம் (AMD)
நேர வலயம் (ஒ.அ.நே+4)
   கோடை (ப.சே)  (ஒ.அ.நே+5)
அழைப்புக்குறி 374 47
1. The constitution guarantees "the free use of other languages spread among the population."
2. Virtual administrative territory of the NKR

1918 ஆண்டு இராச்சியத்திடமிருந்து ஆர்மேனியாவும் அசர்பைஜானும் விடுதலை அடைந்தப் போது ஆர்மேனியர்கள் பெரும்பான்மையாக குடியிருந்த நகோர்னோ-கரபாக் பகுதி தொடர்பாக இரண்டு நாடுகளிடையே முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் 1923 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் இப்பகுதிகளில் தனது அதிகாரத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நகோர்னோ-கரபாக் அசர்பைஜான் சோவியத் சோசலிச குடியரசுல் அமைந்த சுயாட்சி ஒப்லாஸ்ட்டாக ஆட்சி செய்யப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் கடைசி நாட்களில் ஆர்மேனியாவுக்கும் அசர்பைஜானுக்குமிடையே மீண்டும் இப்பகுதி தொடர்பாக சர்ச்சை வழுத்தது.இதன் காரணமாக இரு நாடுகளிடையே நகோர்னோ-கரபாக் போர் 1988 முதல் 1994 வரை நடைபெற்றது.

1991 டிசம்பர் 10 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி கண்டதையடுத்து, நகோர்னோ-கரபாக் ஒப்லாஸ்டிலும் அண்மித்த சாவுமியன் பகுதியிலும் நாடாத்தப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பில், மக்கள் விடுதலைக்காக வாக்களிக்கவே நகோர்னோ-கரபாக் தன்னை குடியரசாக பிரகடனப்படுத்தி அசர்பைஜானிடமிருந்து விடுதலையை அறிவித்தது. ஆனால் இது வரை நகோர்னோ-கரபாக் குடியரசை ஆர்மேனியா உட்பட எந்த நாடோ அல்லது பன்னாட்டு நிறுவனமோ அங்கிகரிக்கவில்லை. 1994 ஆண்டு முதல் நகோர்னோ-கரபாக் உட்பட அண்மைய சில பகுதிகளும் நகோர்னோ-கரபாக் தற்காப்புப் படையினதும் ஆர்மேனிய படையினதும் கூட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.தற்சமயம் சமாதான பேச்சுவார்த்தை நடந்தவண்ணமுள்ளது.

மேற்கோள்கள்

  1. "Constitution of the Nagorno-Karabakh Republic. Chapter 1, article 1.2".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.