தோத்திரப் பாடல்கள்

தோத்திரப் பாடல்கள் என்பவை இறைவனை போற்றும் விதமாக அமைக்கப்பட்டவையாகும். தோத்திரம் என்ற சொல்லானது ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருத சொல்லிருந்து தோன்றியதாகும். இவ்வகையான பாடல்களுக்கு துதி பாடல்கள் என்றும் பெயருள்ளது.

சைவ சமயம்

சைவருக்கு சாத்திரம் பதினான்கு, தோத்திரம் பன்னிரண்டு என்பது முதுமொழியாகும்.[1] சைவத் தோத்திரங்களை திருமுறைகள் என்று அழைக்கின்றனர். பன்னிரு திருமுறை அருளாளர்களால் சைவ சமயத்தின் முதன்மைக் கடவுளான சிவபெருமானைப் போற்றி பாடியுள்ளனர். அருணகிரிநாதர், தாயுமானவர், குமரகுருபர் ஆகியோர் இசையுடன் கூடிய பாடல்கள் பலவற்றை பிரபந்த நூல்களாக இயற்றியுள்ளார்கள்.

வைணவ சமயம்

வைணவக் கடவுளான திருமாலைப் போற்றி நம்மாழ்வார் முதலிய திவ்விய பிரபந்த நூல்களை இயற்றியுள்ளார்.

பட்டியல்

கருவி நூல்

  • சைவ நற்சிந்தனை - சி செல்லத்துரை
  1. http://www.thevaaram.org/thirumurai_1/ani/121aninthurai.htm
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.