திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில்

திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர்ஆகிய மூவரதும் தேவாரப் பாடலும் அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்றது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]

தேவாரம் பாடல் பெற்ற
திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):கோமாதுபுரம், திருஆமாத்தூர்
அமைவிடம்
ஊர்:திருவாமாத்தூர்
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அபிராமேஸ்வரர்
தாயார்:முத்தாம்பிகை
தல விருட்சம்:வன்னி, கொன்றை
தீர்த்தம்:ஆம்பலம்பூம்பொய்கை(குளம்), தண்ட தீர்த்தம்(கிணறு), பம்பை( ஆறு)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்மந்தர், அப்பர், சுந்தரர்

தல வரலாறு

பசுக்களுக்கு தாயகமான தலம்.லிங்கத்தில் பசுவின் குளம்பு வடு உள்ளது. அன்னையால் வன்னிமரமாக மாற்றப்பட்ட பிருங்கி முனிவர் சாப விமோசனம் அடைந்த தலம் . இதனால் வண்ணி மரம் தல விருட்சம் ஆகியது .கொன்றை மரமும் உள்ளது. இராமரும் பூஜித்த வரலாறு உண்டு . நந்தி, காமதேனு தவமிருந்து கொம்பு பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

அமைவிடம்

இத்தலம் இந்தியாவில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தில் அமைந்துள்ளது. விழுப்புரம் அருகே உள்ளது திருஆமாத்தூர். சென்னையில் இருந்து வரும் போது (சென்னை-திருச்சி) நெடுஞ்சாலையில் விழுப்புரம் அடையும் முன் விழுப்புரம்-செஞ்சி சாலை சந்திப்புக்கு அடுத்து வலப்பக்கம் வரும் சிறய சாலையில் 2.2 கி.மீ செல்ல கோயிலை அடையலாம்.அல்லது விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் ஆமாத்தூர் பிரிவு சாலையில் 2.5 கி.மீ செல்லவேண்டும்.

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.