தக்கலை
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களில் ஒன்று தக்கலை (Thuckalay ,തക്കല). இது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்குளம் வட்டத்தின் தலைநகரமாகும். மேலும் இது கன்னியாகுமரி மாவட்டதிலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இந்திய தேசிய நெடுஞ்சாலை 47 ல் நாகர்கோவிலிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 51 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
தக்கலை | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | பிரசாந்த் எம். வாட்னிரே, இ. ஆ. ப. |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
ஊராட்சிகள்
தக்கலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகள்[3]
- ஆத்திவிளை
- சடையமங்கலம்
- கல்குறிச்சி
- மருதூர்குறிச்சி
- முத்தலக்குறிச்சி
- திக்கணங்கோடு
- நுள்ளிவிளை
சிறப்புகள்
இதன் அருகிலுள்ள பத்மனாபபுரம் அரண்மனை சரித்திரப் புகழ் வாய்ந்தது. இவ்வூரின் அருகில் குமாரகோவில் என்ற இடத்தில் நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரி எனும் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. ஹிந்து வித்தியாலயா, அமலா கான்வென்ட், லிட்டில் பிளவர் பள்ளி, அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆகியன முக்கிய ஆரம்ப கல்வி நிலையங்கள்.
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- http://tnmaps.tn.nic.in/district.php