ஜான்சி
ஜான்சி
ஜான்சி | |
— city — | |
அமைவிடம் | 25°26′55″N 78°34′11″E |
நாடு | ![]() |
பகுதி | புந்தேல்கண்ட் |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | ஜான்சி |
ஆளுநர் | இராம் நாயக் |
முதலமைச்சர் | யோகி அதித்யாநாத் |
முதல்வர் | பி. இலால் |
பதில் முதல்வர் | சுசிலா துபே |
மக்களவைத் தொகுதி | ஜான்சி |
மக்கள் தொகை • அடர்த்தி |
5,04,292 (2001) • 3,094/km2 (8,013/sq mi) |
மொழிகள் | ஹிந்தி, மராத்தி, உருது |
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 285 மீட்டர்கள் (935 ft) |
குறியீடுகள்
| |
இணையதளம் | jhansi.nic.in |
அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம், ஜான்சியின் வளர்ச்சியில் ஒரு தீப்பொறியாக அமைந்தது. காஷ்மீர்-ஐ கன்னியாகுமரியுடன் இணைக்கும் வடக்கு-தெற்கு இடைவழி, ஜான்சி வழியாகச் செல்கிறது. கிழக்கு-மேற்கு இடைவழியும் கூட இந்த நகரின் ஊடாகச் செல்கிறது, இதன் காரணமாக நகரின் உள்கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் திடீர் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு பச்சைப்புல்வெளி விமான நிலையம் கூட திட்டத்தில் இருக்கிறது.
சொற்பிறப்பியல்
ஒரு புராணக் கதைப்படி, ராஜா பிர் சிங் டியோ, ஓர்ச்சாவிலுள்ள தன்னுடைய அரண்மனையின் கூரையில் தன் நண்பரான ஜெய்த்பூரின் அரசருடன் உட்கார்ந்திருந்தபோது அந்த நண்பர் இவரிடம் பங்காரா மலையில் இவர் கட்டிக்கொண்டிருக்கும் புதிய கோட்டையை அவரால் புலனுணர முடிகிறதா என்று கேட்டார், அதற்குப் பதிலளிக்கையில் அவர், தான் 'ஜாய்ன்சி' யாக (தெளிவில்லாமல் இருப்பதாக என்று பொருள்) பார்ப்பதாகக் கூறினார். இந்த 'ஜாய்ன்சி' காலப்போக்கில் ஜான்சியாக உருப்பெற்றது. ஒரு சமவெளியில் மேலெழும்பிய பாறையின் மீது கட்டப்பட்ட இந்தக் கோட்டை மத்திய இந்தியாவில் அமைந்திருக்கும் போர்க்கலையில் பயனடையத்தக்க இடத்தில் அமைக்கப்பட்ட கோட்டைகளில் ஒன்றாகத் திகழும் இது, நகரையும் சுற்றியமைந்திருக்கும் நாட்டையும் ஆதிக்கம் செலுத்துகிறது.
வரலாறு
ஒன்பதாம் நூற்றூண்டில் ஜான்சி பிராந்தியம் கஜுராஹோவின் ராஜ்புத் சாண்டெலா வம்சத்தின் ஆட்சியின் கீழ் வந்தது. செயற்கை நீர்த்தேக்கங்கள் மற்றும் கட்டுமானக்கலைகளின் மிச்சங்கள் இந்த வரலாற்றுக் காலத்துக்கு உகந்ததாக இருக்கலாம். சாண்டெலாக்களைத் தொடர்ந்து வந்தவர்கள் காங்கார்கள், இவர்கள் அருகில் உள்ள கரார் கோட்டையை நிறுவினார்கள். 14 ஆம் நூற்றாண்டின்போது பண்டெலாக்கள் விந்திய மலைத் தொடர்களிலிருந்து சமவெளி முழுவதும் கீழிறங்கினர், படிப்படியாக ஒட்டுமொத்த பண்டல்காண்ட் பிராந்தியம் முழுவதும் பரவி விரிந்தனர், அது இப்போது அந்தப் பெயராலேயே விளங்குகிறது. ஜான்சியின் கோட்டையுடன் கூடிய ஊர் ஓர்ச்சா மாநிலத்தை ஆண்டு வந்த அரசரால் 1610 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. வரலாற்றுப் புனைவு இவ்வாறு கூறுகிறது, ஒரு தூரத்து மடுவில் நிழல் (பண்டல்காண்ட்டில் 'ஜாயின்') ஒன்றைக் கண்ட ஓர்ச்சாவின் அரசர் ஒருவர் அதை ஜாயின்-சி (ஒரு வகையான நிழல்) என்று அதை அழைத்திருக்கிறார். இந்த உச்சரிப்பின் மூலமே ஜான்சிக்கு அதன் பெயர் கிடைத்தது.
முகலிய சாம்ராஜ்யத்தின் முகமதிய ஆளுநர்கள் பண்டெலா நாட்டுக்குள் தொடர்ந்து படையெடுப்புகளை மேற்கொண்டிருந்தனர். 1732 ஆம் ஆண்டில், பண்டெலா அரசனான சாட்ராசால், இந்து மராத்தாக்களின் உதவியை நாடினார். அவர்கள் அவரின் உதவிக்கு வந்தனர், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மகாராஜாவின் இறப்பின்போது அவரின் சாசனத்தின்படி அவருடைய ஆட்சிப்பிரதேசங்களில் மூன்றில் ஒரு பங்கு மராத்தர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. மராத்தா தளபதி ஜான்சி நகரை உருவாக்கி, அதில் ஓர்ச்சா மாநிலத்தின் மக்களைக் கொண்டு குடியமர்த்தினார். 1806 ஆம் ஆண்டில் மராத்தா தளபதியின் பாதுகாப்புக்கு பிரிட்டிஷார் உத்திரவாதமளித்தனர். எனினும், 1817 ஆம் ஆண்டில், புனேவிலுள்ள பேஷ்வா பண்டல்கண்டின் மீதான தன்னுடைய எல்லா உரிமைகளையும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டுக்கொடுத்தார். 1853 ஆம் ஆண்டில், ஜான்சியின் அரசர் பிள்ளையின்றியே இறந்துபோனார். அவருடைய பிரதேசம் முழுவதும் கவர்னர்-ஜெனரல் ஆஃப் இண்டியாவால் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஜான்சி மாநிலம், ஜாலௌன் மற்றும் சந்தேரி மாவட்டங்கள், அதன் பின்னர் ஒரு கண்காணிப்பிடமாக உருவாக்கப்பட்டது. அரசனின் விதவையான ராணி லக்ஷ்மிபாய் இந்த இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார், ஏனெனில் அவர் ஒரு வாரிசைத் தத்தெடுக்க (அப்போது வழக்கமாக இருந்தது) அனுமதிக்கப்படவில்லை, மேலும் ஜான்சி பிரதேசத்தில் கால்நடைகளைக் கொல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதன் விளைவாக 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சி ஜான்சி கலகத்துக்குத் தயாராக இருப்பதைக் கண்டது. ஜூன் மாதத்தில் 12வது உள்ளார்ந்த காலாட்படையைச் சேர்ந்த சில நபர்கள், செல்வங்களும் படைக்கலன்களையும் கொண்டிருந்த கோட்டையைக் கைப்பற்றினர், மேலும் அரணின் ஐரோப்பிய அதிகாரிகளையும் அவர்கள் மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் படுகொலை செய்தனர். ராணி லக்ஷ்மிபாய் தன்னையே அந்த கலகத்தின் தலைமையிடத்தில் வைத்து குவாலியரில் நடந்த போரில் வீர மரணம் அடைந்தார். 1858 ஆம் ஆண்டு நவம்பர் வரையில், ஜான்சி பிரிட்டிஷார் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவில்லை. இது குவாலியர் மஹாராஜாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது, ஆனால் 1886 ஆம் ஆண்டில் பண்டமாற்று மூலம் இந்தப் பிரதேசம் பிரிட்டிஷார் ஆட்சியின் கீழ் வந்தது. ஐக்கிய மாகாணத்துடன் ஜான்சி சேர்க்கப்பட்டது, இது 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு உத்தரப் பிரதேச மாநிலமாக ஆனது.
இந்த மலைசார்ந்த பகுதியில் நிற்கும் கோட்டை, வட இந்தியாவின் கோட்டை கட்டமைப்பு பாணி தெற்கிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தென்னகத்தில் பெரும்பாலான அழகிய கோட்டைகள், கேரளாவின் பெகாலில் உள்ளதுபோல், கடற் படுகைகளில் கட்டப்பட்டன.
மக்கள் தொகை
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி, இந்தியாவில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஜான்சி நகரம் 77வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
- 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கு ஒட்டுமொத்தம்: 504,292
- நகர் நிகாம் ஒட்டுமொத்தம்: 470,212
- ஆண்கள்: 249,592
- பெண்கள்: 220,620
- கண்டோன்மெண்ட் போர்ட் ஒட்டுமொத்தம்: 18,582
- ஆண்கள்: 10,239
- பெண்கள்: 8,343
- ஜான்சி இரயில்வே குடியேற்றம் ஒட்டுமொத்தம்: 15,499
- ஆண்கள்: 8,395
- பெண்கள்: 7,104
புவியியல் மற்றும் வானிலை

ஜான்சி 25.4333 வடக்கிலும், 78.5833 கிழக்கிலும் அமைந்திருக்கிறது. அது சராசரியாக 284 மீட்டர்கள் (935 அடி) மேலெழும்பி இருக்கிறது.[1] ஜான்சி மத்திய இந்தியாவின் பீடபூமியில் அமைந்திருக்கிறது, அப்பகுதி மண்ணின் கீழே பாறை வடிவமைப்புகள் மற்றும் கனிமங்களால் நிறைந்திருக்கிறது. இந்த நகரம் உத்தரப் பிரதேசத்தின் பரந்த தாராய் சமவெளிகளின் தென்மேற்கு எல்லையில் அமைந்திருப்பதால் அது வடக்கில் இயற்கையான சரிவைக் கொண்டிருக்கிறது. அந்த மேடு தெற்கில் உயர்கிறது. அந்த நிலம் புளிப்புச் சுவையுடைய பழ இனங்களுக்கு ஏற்ற இடம். பயிர்களில் கோதுமை, தானியங்கள், பயறுகள், எண்ணெய் விதைகள் ஆகியவை அடங்கும். நீர்ப்பாசனப் பயன்களுக்கு அந்தப் பிராந்தியம் பெரும்பாலும் பருவகாலம்|பருவகால மழையையே நம்பியிருக்கிறது. பெரிதும் கோரப்பட்ட கால்வாய் திட்டத்தின் கீழ் (ராஜ்காட் கால்வாய்), ஜான்சி மற்றும் லலித்பூர், மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நீர்ப்பாசனங்களுக்காகப் பல கால்வாய்களை அரசு கட்டிவருகிறது.
பாறை சார்ந்த பீடபூமியில் இருப்பதன் காரணமாக, ஜான்சி உச்ச அளவான தட்பவெப்பத்தைக் கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவக்காற்று பின்வாங்குவதைத் தொடர்ந்து அக்டோபரில் குளிர்காலம் தொடங்குகிறது. அது மத்திய-டிசம்பரில் உச்சமடைகிறது (வடகிழக்கு பருவக்காற்றின் மூலம் எந்த மழையையும் ஜான்சி பெறுவதில்லை). பாதரச அளவுமானி பொதுவாக குறைந்தபட்சம் 4 டிகிரியும் அதிகபட்சம் 21 டிகிரியையும் காட்டுகிறது. பிப்ரவரி இறுதியில் இளவேனிற் காலம் தொடங்கி நிலை மாற்றத்தால் குறைந்த வாழ்நாள் நிலையைக் கொண்டிருக்கிறது. கோடைக்காலம் ஏப்ரலில் தொடங்கிவிடுகிறது, மேலும் கோடை தட்பவெப்பங்கள் மே மாதங்களில் 47 டிகிரி வரையிலான உச்சத்துக்குச் செல்லும். மழைக்காலம் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்குகிறது (இருந்தபோதிலும் இது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடுகிறது). பருவக்காற்று மழைகள் செப்டம்பர் மாதத்தில் படிப்படியாக பலவீனமடைந்து செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் மழைக்காலம் முடிவடைகிறது. மழைக் காலத்தில், சராசரி தினசரி அதிக தட்பவெப்பம் 36 டிகிரி செல்சியசில் உயர் ஈரப்பத நிலையில் இருக்கும். இந்த நகருக்கான சராசரி மழையின் அளவு ஆண்டுக்கு சுமார் 900 மிமீ வரை இருக்கும், இது தென்மேற்கு பருவக்காற்றின் மூன்றரை மாதங்களுக்கிடையில் முழுவதுமாக அளவிடப்பட்டது.
மருத்துவமனைகள்
பண்டல்கண்ட் பிராந்தியத்தில், ஜான்சி, மருத்துவப் பராமரிப்பில் ஒரு முக்கிய இடமாக இருக்கிறது. ஒரு மருத்துவக் கல்லூரியைக் கொண்டிருக்கிறது தற்போது அது புதுப்பிக்கப்படுகிறது. நோயாளிகளுக்குச் சேவைபுரிவதற்காக மாவட்ட மருத்துவமனை பல புதிய வசதிமேம்பாடுகளைக் கொண்டிருக்கிறது. நிறைய தனியார் மருத்துவமனைகள், குறிப்பாக மருத்துவக் கல்லூரிப் பகுதியில் இருக்கிறது.
அரசு
- மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி (கான்பூர் சாலை),
- மாவட்ட(சிவில்) மருத்துவமனை (நகரம்),
- பண்டல்கண்ட் ஆயுர்வேத கல்லூரி (குவாலியர் சாலை),
- இராணுவ மருத்துவமனை (கண்டோன்மெண்ட்),
- இரயில்வே மருத்துவமனை (இரயில்வே நிலையம் அருகில்),
- கண்டோன்மெண்ட் பொது மருத்துவமனை (சதார் பஜார்)
தனியார்:
- அகர்வால் மெடர்னிடி & நர்சிங் ஹோம் (சதார் பஜார்)
- ஆனந்த் ஹாஸ்பிடல் & யூரோலஜி ரிசர்ச் சென்டர் (மருத்துவக் கல்லூரி எதிரில், கர்குவான் சாலை)
- சுதா நர்சிங் ஹோம் (மருத்துவக் கல்லூரி அருகில், கான்பூர் சாலை)
- ஷிவ் நர்சிங் ஹோம் (மிஷன் காம்பவுண்ட்),
- லைஃப்லைன் ஹாஸ்பிடல் (கான்பூர் சாலை),
- ஹாப்பி ஃபாமிலி ஹாஸ்பிடல் (ஹோட்டல் சீதா பின்புறம், சிவில் லைன்ஸ்),
- குப்தா மெடிஸ்கான் சென்டர் (சதார் பஜார்)
- செயிண்ட். ஜூட் ஹாஸ்பிடல் (ஜெர்மனி) (சிப்ரி பஜார்),
- கபூர் நர்சிங் ஹோம் (எலைட் சினிமா அருகில்),
- ஆரோக்கிய சதான் (அவாஸ் விகாஸ் காலனி),
- பிரகாஷ் நர்சிங் ஹோம் (அவாஸ் விகாஸ் காலனி),
- நிர்மல் ஹாஸ்பிடல் (மருத்துவக் கல்லூரி அருகில்),
- சாவ்லா நர்சிங் ஹோம் (சிப்ரி பஜார்),
- விநாயக் ஹாஸ்பிடல், யாத்ரிக் ஹோட்டல் பின்புறம் (எலைட் சர்கிள்)
- எல்ஆர்எம் ஜெயின் நர்சிங் ஹோம் (சிவில் லைன்ஸ்),
- கிறிஸ்டியன் ஹாஸ்பிடல் (ஜோக்கன் பாக்)
- சஞ்சீவனி ஹாஸ்பிடல் (கான்பூர் சாலை)
- ராகவேந்திரா நர்சிங் ஹோம் (கான்பூர் சாலை)
- ஷீலா ஜெயின் நர்சிங் ஹோம் (கான்பூர் சாலை)
- நிர்மல் நர்சிங் ஹோம் (கான்பூர் சாலை)
- சுதர்ஷன் ஜெயின் நர்சிங் ஹோம் (பஞ்ச்குய்யான் சாலை)
- டாக்டர். ஜியாலால் மெமோரியல் கண் மருத்துவமனை (இராகவேந்திரா மருத்துவமனை அருகில்) ISO சான்றளிக்கப்பட்ட மருத்துவமனை
பல் மருத்துவமனை:
- குப்ரெல்லே டெண்டல் கேர் சென்டர், டி.பி.மருத்துவமனை எதிரில், ஜீவன் ஷா திராஹா, குவாலியர் சாலை, ஜான்சி.
கல்வி நிலையங்கள்
ஜான்சி படிப்படியாக இந்தியாவின் கல்வி மையமாக ஆகிறது. நாட்டின் பல பாகங்களிலிருந்து மாணவர்கள் தங்கள் உயர் படிப்புகளுக்காக இங்கு வருகிறார்கள். ஜான்சியின் கல்வி நிறுவனங்களில் கிடைக்கக்கூடிய பல்வேறு தனித்தன்மையிலான பாடத்திட்டங்களுக்காக வெளிநாட்டு மாணவர்களும் கூட இங்கு வருகிறார்கள்.
- அரசு பொறியியல் கல்லூரி
- பண்டல்கண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினிரிங் BIET ஜான்சி
- அரசு கல்லூரிகள்
- பண்டல்கண்ட் பல்கலைக்கழகம், மருத்துவச் சாலை
- பிபிசி கல்லூரி, கோவிந்த் சௌராஹா பின்புறம்
- பிகேடி கல்லூரி, எலியட் சாலை, பிகேடி சௌராஹா
- கவர்ன்மெண்ட் இண்டர் காலேஜ் (GIC), குவாலியர் சாலை, ஜான்சி
- சூரஜ் பிரசாத் கல்லூரி, சதார் பஜார்
- கர்ல்ஸ் இண்டர் காலேஜ் (GIC), மிஷன் காம்பௌண்ட்
- இராணுவப் பள்ளிகள்
- இராணுவப் பள்ளி, கண்டோன்மெண்ட் பகுதி, ஜான்சி
- தனியார் பள்ளிகள்
- பால் பாரதி பப்ளிக் ஸ்கூல், இசை தோலா, பிரேம்நகர், ஜான்சி
- ஸ்ரீ ரகுராஜ் சிங் இண்டர் காலேஜ், தாடியா கேட் வெளிப்புறம், ஜான்சி
- வீரங்கானா ஜால்காரிபாய் இண்டர் காலேஜ், குஷிபுரா, ஜான்சி
- கியான் ஸ்தாலி பப்ளிக் ஸ்கூல், சிவாஜிநகர், ஜான்சி
- மஹாத்மா ஹான்ஸ்ராஜ் மாடர்ன் ஸ்கூல், ஷிவ்புரி சாலை, ஜான்சி
- ஷீர்வுட் காலேஜ், காட்டி பாபா, ஜான்சி
- தி வுட்ஸ் ஹெரிடேஜ் ஸ்கூல், ஜான்சி
- ராணி லக்ஷ்மிபாய் பப்ளிக் ஸ்கூல், ஜான்சி
- க்ரைஸ்ட் தி கிங் காலேஜ் (ஆண்களுக்கு மட்டும்)
- செயிண்ட் மார்க்ஸ் காலேஜ்
- செயிண்ட். சேவியர்ஸ் ஸ்கூல், ராஜ்கர், பி.ஹெச்.இ.எல் காய்லார் (முக்கிய நகரிலிருந்து 14 கி.மீ.)
- ப்ளூ பெல்ஸ் ஸ்கூல், ராஜ்கர்
- செயிண்ட் ஃபிரான்சிஸ் ஸ்கூல் (பெண்களுக்கு மட்டும்)
- சன் இண்டர்நேஷனல் ஸ்கூல், ஆர்.டி.ஓ அருகில், கான்பூர் சாலை, ஜான்சி.
- சரஸ்வதி வித்யா மந்திர், பாலாஜி சாலை, ஜான்சி.
- பகுதி அரசுக் கல்லூரிகள்
- ஸ்ரீ லக்ஷ்மி வியாயம் மந்திர் இண்டர் காலேஜ், ஜான்சி
தொலைபேசி நிறுவனங்கள்
இங்கு நான்கு, நிலையான மற்றும் நிலையான கம்பியில்லா லைன் தொலைபேசியக இயக்குநர்கள் காணப்படுகிறார்கள்.
- பிஎஸ்என்எல் (நிலையான மற்றும் நிலையான கம்பியற்றவை) எண்வரிசைகள் 231 xxxx, 232 xxxx, 233 xxxx, 235 xxxx, 236 xxxx, 237 xxxx, 244 xxxx, 245 xxxx, 247 xxxx, 248 xxxx.
- டாடா இண்டிகாம் (சிடிஎம்ஏ பிளாட்ஃபார்ம், கம்பியில்லாதவை) எண்வரிசை 65x xxxx.
- ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (சிடிஎம்ஏ பிளாட்ஃபார்ம், கம்பியில்லாதவை) எண்வரிசை 3xx xxxx.
- ஏர்டெல் எண்வரிசை 4xx xxxx.
மேலே குறிப்பிட்ட எல்லா நிறுவனங்களும் பிராட்பாண்ட் இணைய சேவையையும் கூட வழங்குகிறார்கள்.
இவர்கள் ஜான்சி நகரில் இருக்கும் மொபைல் தொலைபேசி இயக்குபவர்களாவார்கள்.
- பிஎஸ்என்எல் (ஜிஎஸ்எம் பிளாட்ஃபார்மில்) எண்வரிசை 9415x xxxxx, 945xx xxxxx.
- வோடாஃபோன் எஸ்ஸார் (ஜிஎஸ்எம் பிளாட்ஃபார்மில்) எண்வரிசை 9838x xxxxx, 9839x xxxxx.
- ஏர்டெல் (ஜிஎஸ்எம் பிளாட்ஃபார்மில்) எண்வரிசை 99xxx xxxxx.
- டாடா இன்டிகாம் (சிடிஎம்ஏ பிளாட்ஃபார்மில்) எண்வரிசை 9235x xxxxx.
- ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (சிடிஎம்ஏ பிளாட்ஃபார்மில்) எண்வரிசை 93xxx xxxxx.
- ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஜிஎஸ்எம் பிளாட்ஃபார்மில்) எண்வரிசை 90xxx xxxxx.
- ஐடியா செல்லுலார் (ஜிஎஸ்எம் பிளாட்ஃபார்மில்) எண்வரிசை 98xxx xxxxx & 97xxx xxxxx & 96xxx xxxxx.
- டாடா டோகோமோ
- யூனினார்
வானொலி நிலையங்கள்
இந்த நகரம் இரு பண்பலை வானொலி நிலையங்களைக் கொண்டிருக்கிறது.
- ஆல் இண்டியா ரேடியோ நாட்டின் உடமையான ஆகாசவானி சேவை ஒலிபரப்பு அலைவரிசை 103.0 MHz இல் இயங்குகிறது. ஆல் இண்டியா ரேடியோ தன்னுடைய மிகவும் பிரபலமான வானொலி நிலையமான - ஏஐஆர் எஃப்எம் ரெயின்போ, ஜான்சியிலிருந்து நவம்பர் 19, 2007 முதல் ஒலிபரப்பத் தொடங்கியது.
- பிக் 92.7 FM ஜான்சி இதுதான் ஜான்சியின் முதல் 24 மணிநேர சேவை. இந்தச் சானல் 92.7 MHz இல் ஒலிபரப்பப்படுகிறது.
இதர இரு தனியார் வானொலி நிலையங்கள் விரைவில் தொடங்க இருக்கிறது.
சுற்றுலா
காணத் தூண்டும் இடங்கள்
- ஜான்சி கோட்டை
- ராணி மஹால் (அரசியின் அரண்மனை)
- உத்திர பிரதேச அரசு அருங்காட்சியகம்
- மஹாலக்ஷ்மி கோவில்
- லெஹர் கி தேவி கோவில்
- பஞ்ச்குய்யன் கோவில் - பாரம்பரியமிக்க கோவில், லக்ஷ்மி பாய் இங்கு இறைவழிபாடு செய்வதுண்டு
- கணேஷ் மந்திர்
- சித்தேஷ்வர் கோயில் (GIC இண்டர் காலேஜ் அருகில்) - பண்டிட் ரகுநாத் விநாயக் துலேகார் அவர்களால் கட்டப்பட்டது
- பஞ்சதந்தரா பூங்கா (மிக அதிகமான கூட்டங்களைக் கவர்கிறது)
- கண்டோன்மெண்ட் பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பூங்கா காண்பதற்கு உரியது
- "ஷௌர்யா ஸ்தம்பா" சுதந்திர இந்தியாவின் 21 பரம்வீர் சக்ரா விருதுகளை வென்றவர்களின் தனித்தன்மைவாய்ந்த நினைவுச்சின்னம் (நாட்டிலேயே இது முதன்மையானது). தேசபக்தர்களுக்கான ஒரு ஆர்வம் தரும் இடம். (இதைக் காண விரும்பும் நபர்கள் இந்தத் தொலைபேசியில் 09415059873 தொடர்புகொள்ளலாம்)
பால் பாரதி பப்ளிக் ஸ்கூலில் அமைந்திருக்கிறது, இசை தோலோ, காட்டி பாபா, பிரேம்நகர், ஜான்சி.
- ஆடைகள் வாங்குவதற்கு சதார் பஜார் மார்க்கெட் மற்றும் மாணிக் சௌக் மார்க்கெட்
- நகைகள் வாங்குவதற்கு சராஃபா பஜார்
- கதீட்ரல் ஆஃப் செயிண்ட். அந்தோணி, ஜான்சியின் ரோமன் கத்தோலிக்க டியாசெஸ்சின் இருக்கை.
- லார்ட் புத்தா டெம்பிள், தரம்ஷலா, கபுர்தெக்ரி குஷிபுரா, ஜான்சி.
உல்லாசப் பயணங்கள்
- சுக்மா-டுக்மா அணைக்கட்டு: பெட்வா ஆற்றின் மீதிருக்கும் மிகப் பழமையான, நீளமான மற்றும் மிகவும் அழகான அணைக்கட்டு, தோராயமாக ஜான்சியிலிருந்து 45 கிமீ தூரத்தில், பபினா நகருக்கு அருகில் இருக்கும் இது பருவக்காற்று முடிந்தபிறகு குளிர் காலத்தில் மிகுந்த கண்ணுக்கினிய இடமாக இருக்கும்.
- மாடா டிலா அணைக்கட்டு: ஜான்சி நகரின் தெற்கே தோராயமாக 55 கி.மீ. தொலைவில் இருக்கிறது, இது ஒரு அழகான உல்லாசப் பயண இடம். இந்த அணைக்கட்டு பெட்வா நதியின் மீது கட்டப்பட்டுள்ளது. அணைக்கட்டின் அருகில் ஒரு தாவரவியல் பூங்கா இருக்கிறது.
- டியோகர்: ஜான்சியிலிருந்து 123 கி.மீ தூரம், லலித்புர் நகருக்கு அருகில் இருக்கிறது. பெட்வா நதியின் மீது அமைந்திருக்கும் இது, அருமையான குப்தர் கால மிச்சமீதங்கள், விஷ்ணு கோவில் மற்றும் பல அழகிய பழைய ஜைன கோவில்களைக் கொண்டிருக்கிறது.
- ஓர்ச்சா: ஜான்சி-கஜுராஹோ சாலையில் ஜான்சியிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் ஒரு மத்தியகாலத்திய நகரம். இது இறைவன் இராமனின் கோவிலுக்குப் பிரபலமானது.
- கஜுராஹோ: ஜான்சியிலிருந்து 178 கி.மீ. தூரம். காலை வேளைகளில் ஜான்சி இரயில்வே நிலையத்திலிருந்து சொகுசுப் பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. டாக்சிகளும் கிடைக்கப்பெறுகிறது. கஜுராஹோவிலிருந்து 32 கி.மீ. தூரத்தில் இருக்கும் பண்ணா தேசியப் பூங்காவையும் பார்க்கலாம், அதன் அருகில் சில அருவிகள் இருக்கின்றது.
- டாடியா: ஜான்சியிலிருந்து 28 கி.மீ. தூரத்தில் ஜான்சி-குவாலியர்-ஆக்ரா-டெல்லி சாலையில் இருக்கிறது. இந்த இடம் ஸ்ரீ பீதாம்பரா தேவி கோவில் மற்றும் ராஜா பிர் சிங் ஜு டியோ அவர்களால் கட்டப்பட்ட ஏழு அடுக்கு அரண்மனைக்குப் பிரபலமானது.
- ஷிவ்புரி: ஜான்சியிலிருந்து 101 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. குவாலியரின் ஷிந்தியா ஆட்சியாளர்களின் கோடைக்கால தலைநகரமாக இருந்தது. ஷிந்தியாக்களால் கட்டப்பட்ட பளிங்கு சாத்ரிகளுக்கு (நினைவுச் சின்னங்கள்) இது பிரபலமானது, அங்கு அழகான மிகப் பெரிய ஏரியும், அழகான மாதவ் தேசியப் பூங்கா பகுதிகளில் முதலைகளுடன் பல்வேறு வகையான காட்டு விலங்குகளையும் பார்க்கலாம்.
- உன்னாவோ/பஹுஜ்: உன்னாவோ கேட்டிலிருந்து ஜான்சியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அது கோவில் மற்றும் பஹுஜ் நதிக்காகப் பிரபலம்.
- பரிச்சா அணைக்கட்டு: கான்பூரை நோக்கி ஜான்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அது ஒரு அழகிய இடம். அந்த அணை பெட்வா நதி மீது கட்டப்பட்டிருக்கிறது.
தனிக் குடியிருப்புகள்
- ஷிவ் பரிவார் நிலை 1 முதல் 6 வரை, கே கே ஜி ரியல் எஸ்டேட்ஸால் நிறுவப்பட்டது (உன்னாவோ கேட், அலிகால், கரியாகோன், டாலி, சிஜ்வாஹா முதலான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தனிக் குடியிருப்புகள்).
- கைலாஷ் ரெசிடென்சி, மஹாகாளி வித்யா பீத் சாலை, புதிய கல்லா மண்டி அருகில், ஜான்சி
- ஓம் ஷாந்தி நகர், காளி கோவில் அருகில், லக்ஷ்மி கேட்டுக்கு வெளியில், ஜான்சி
- சுந்தர் விஹார் காலனி, ஸ்டேஷன் சாலை, டிஐஜி பங்களா அருகில், ஜான்சி
- ஃப்ரெண்ட்ஸ் காலனி, குவாலியர் சாலை, இரயில்வே கிராசிங் அருகில், ஜான்சி
உணவு விடுதிகள்
- ஹோட்டல் புஜான், சிவில் லைன்ஸ்
- ஹோட்டல் சண்டா (3 நட்சத்திரம்)
- ஹோட்டல் பிரகாஷ், எலைட் சௌக்
- ஹோட்டல் சீதா (3 நட்சத்திரம்)
- ஹோட்டல் ஸ்ரீநாத்
- ஹோட்டல் ஜெய்ஸ்வால் டவர் (3 நட்சத்திரம்)
சினிமா கொட்டகைகள்
- பூஷன்
- தம்ரூ
- எலைட்
- கிலோனா
- கிருஷ்ணா
- இலக்ஷ்மி
- நந்தினி
- நட்ராஜ்
- ஷியாம் பாலஸ்
பூங்காக்கள் & தோட்டங்கள்
- ராணி லக்ஷ்மி பூங்கா
- நாராயன் பாக்
- கார்கில் ஷாஹீத் பூங்கா
- நேரு பூங்கா
- பஞ்சதந்திர பூங்கா
- இந்திரா பூங்கா
- பப்ளிக் பூங்கா
ஜான்சியுடன் தொடர்புடைய சிறப்புமிக்க மக்கள்
குறிப்புதவிகள்
புற இணைப்புகள்
- ஜான்சி மாவட்ட அதிகாரப்பூர்வ வலைதளம்
- ஜான்சி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரப்பூர்வ வலைதளம்
- ஜான்சி வளர்ச்சி ஆணைய அதிகாரப்பூர்வ வலைதளம்
- ஜான்சி கண்டோன்மெண்ட் போர்ட் அதிகாரப்பூர்வ வலைதளம்
- அதிகாரப்பூர்வ ஜான்சி சுற்றுலா வலைதளம்
- ஜான்சி ஆன்லைன் செய்திகள் & கம்யூனிடி
- ஜான்சி நகர பயண வழிகாட்டி
- ஜான்சியின் நகர போர்டல் (மிகச் சமீபத்திய நிகழ்வுகள், சந்தை தேடு)
- ஜான்சி சமீபத்தியச் செய்தி @ தைய்னிக் ஜாக்ரன்
- விக்கிடிராவலில் ஜான்சி
- முதல் இந்திய கிளர்ச்சியின் போது ஜான்சியின் ஒவ்வொரு நாளின் செயல்பாடு