சிறிமாவோ பண்டாரநாயக்கா

சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா (Sirimavo Ratwatte Dias Bandaranaike) (ஏப்ரல் 17, 1916 - அக்டோபர் 10, 2000) இலங்கையின் ஓர் அரசியல்வாதியாவார். இவர் இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை, 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர். இவரே உலகிலேயே முதலாவது பெண் பிரதமருமாவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தவர். இவரது கணவர் மறைந்த முன்னாள் இலங்கை பிரதமர் சொலமன் பண்டாரநாயக்கா. மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கா இலங்கையின் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக இருந்தவர். இவரது ஏனைய மக்கள் அநுரா பண்டாரநாயக்கா, சுனேத்திரா பண்டாரநாயக்கா ஆகியோர்.

சிறிமாவோ மண்டாரநாயக்கா
Sirimavo Bandaranaike
1960 இல் சிறிமாவோ
இலங்கை பிரதமர்
பதவியில்
14 நவம்பர் 1994[1]  10 ஆகத்து 2000[1]
குடியரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
முன்னவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பின்வந்தவர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க
பதவியில்
29 மே 1970[1]  23 சூலை 1977[1]
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் (1972 மே 22 வரை)
குடியரசுத் தலைவர் வில்லியம் கோப்பல்லாவ (1972 மே 22 முதல்)
தலைமை ஆளுநர் வில்லியம் கோப்பல்லாவ (1972 மே 22 வரை)
முன்னவர் டட்லி சேனாநாயக்க
பின்வந்தவர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
பதவியில்
21 சூலை 1960[1]  27 மார்ச் 1965[1]
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர் ஒலிவர் குணத்திலக்கா
வில்லியம் கோப்பல்லாவ
முன்னவர் டட்லி சேனாநாயக்க
பின்வந்தவர் டட்லி சேனாநாயக்க
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
9 மார்ச் 1989[2]  24 சூன் 1994[2]
குடியரசுத் தலைவர் ரணசிங்க பிரேமதாசா
டிங்கிரி பண்டா விஜயதுங்கா
பிரதமர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா
ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் அனுரா பண்டாரநாயக்கா
பின்வந்தவர் காமினி திசாநாயக்கா
பதவியில்
5 ஏப்ரல் 1965[2]  25 மார்ச் 1970[2]
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர் வில்லியம் கோப்பல்லாவ
பிரதமர் டட்லி சேனாநாயக்க
முன்னவர் டட்லி சேனாநாயக்க
பின்வந்தவர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
தனிநபர் தகவல்
பிறப்பு சிறிமா ரத்வத்தை
ஏப்ரல் 17, 1916(1916-04-17)
இரத்தினபுரி, இலங்கை
இறப்பு 10 அக்டோபர் 2000(2000-10-10) (அகவை 84)
கடவத்தை, மேல் மாகாணம், இலங்கை
அடக்க இடம் ஒரகொல்லை பண்டாரநாயக்கா சமாதி
அரசியல் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா
(2 அக்டோபர் 1940 - 26 செப்டம்பர் 1959)
பிள்ளைகள் சுனேத்திரா
சந்திரிக்கா
அனுரா
பெற்றோர்
  • பார்ன்சு ரத்வத்தை
  • ரோசலின் குமாரிகாமி
கல்வி
பணி சமூக சேவையாளர், அரசியல்வாதி

அரசியல் பின்னணி

தனது கணவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா கொல்லப்பட்டபின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஜூலை 21, 1960 இல் முதன் முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965 இல் நடந்த பொதுத்தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 1970 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வழி நடாத்தினார். 1970 பொதுத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பெரும் வெற்றி பெற்று இரண்டாம் முறை மீண்டும் பிரதமரானார். 1977 இல் நடந்த தேர்தலில் கட்சி படு தோல்வி அடைந்தது. 1980 இல் அன்றைய ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியினால் ஊழல் குற்றச்சாட்டுகளில் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கத் தடை செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்

அரசு பதவிகள்
முன்னர்
சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க
இலங்கை பிரதமர்
19942005
பின்னர்
ரட்னசிறி விக்கிரமநாயக்கா
முன்னர்
டட்லி சேனநாயக்கா
இலங்கை பிரதமர்
19701977
பின்னர்
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
முன்னர்
டட்லி சேனநாயக்கா
இலங்கை பிரதமர்
19601965
பின்னர்
டட்லி சேனநாயக்கா


இலங்கையின் பிரதமர்கள்
டி. எஸ். சேனநாயக்கா டட்லி சேனநாயக்கா ஜோன் கொத்தலாவலை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா டபிள்யூ தகநாயக்கா சிறிமாவோ பண்டாரநாயக்கா ஜே. ஆர். ஜெயவர்த்தானா ரணசிங்க பிரேமதாசா டி. பி. விஜயதுங்கா ரணில் விக்கிரமசிங்க சந்திரிகா பண்டாரநாயக்கா இரத்னசிறி விக்கிரமநாயக்கா மகிந்த ராஜபக்ச
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.