கொடிமரம்

கொடிமரம் என்பது இந்துக் கோவில்களில் பலிபீடத்திற்கு அருகே அமைக்கப்பெறுகின்ற கொடியேற்றுகின்ற மரமாகும். இதற்கு துவஜஸ்தம்பம் என்ற சமஸ்கிருதப் பெயரும் உண்டு. சிவாலயங்களில் கொடி மரம், நந்தி மற்றும் பலிபீடம் ஆகியவை மூலவரை நோக்கியே அமைக்கப்பெறுகின்றன.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் கொடி மரம்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் கொடி மரம்

அடிப்பகுதியான சதுரம், அதற்கு மேல் எண்கோணவேதி அமைப்பு மற்றும் தடித்த உருளை பாகம் என இந்துக் கோவில் கொடிமரம் மூன்று பாகங்களை உடையன. இதில் சதுரப்பகுதி பிரம்மாவினையும், எண்கோணவேதி அமைப்பு திருமாலையும், உருளையமைப்பு சிவனையும் குறிப்பதாக நம்பப்படுகிறது.[1]


இறைவனுக்கு ஏற்றப்பட வேண்டிய கொடியின் சின்னம் குறித்து சூரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றின் அட்டவணை கீழே.

வரிசைஇறைவன்கொடி
1சிவபெருமான்நந்திக் கொடி
2திருமால்கருடக் கொடி
3சூரிய தேவன்வியோமாக் கொடி
4வருண தேவன்அன்னக் கொடி
5குபேரன்நரன் கொடி
6முருகன்சேவல் கொடி]]
7விநாயகன்மூசிக கொடி
8இந்திரன்யானைக் கொடி
9யமன்எருமைக் கொடி
10துர்கைசிம்மக் கொடி
11சனி பகவான்காக்கைக் கொடி
12அருச்சுனன்அனுமன் கொடி

ஆதாரங்கள்

  1. கொடிமரத்தின் தத்துவமும்...முக்கியத்துவமும்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.