கணாதரர்

கணாதரர், சமண சமயத் தீர்த்தங்கரரின் தலைமை மாணக்கர் ஆவார். இவர் தன் குருவான தீர்த்தங்கரின் உபதேசங்களை மக்களிடம் எடுத்துச் செல்பவர் ஆவார்.[1]

சமணச் சங்கங்கள் ஒவ்வொன்றும் கணங்கள் எனும் கணாதரர் தலைமையின் கீழ் இயங்குகிறது. [2][3]

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்சு மாவட்டத்தில் தீர்த்தங்கரர்கள் மற்றும் கணாதரர்களின் சிற்பங்கள் 20-ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[4]

24 தீர்த்தங்கரர்களின் கணாதரர்கள்

எண்தீர்த்தங்கரர்எண்ணிக்கைபுகழ்பெற்ற கணாதரர்கள்
1ரிசபதேவர் (ஆதிநாதர்)84விருசபா சென், கச்சா, மகா கச்சா, நாமி, விநாமி [5]
23பார்சுவநாதர்8கேசி, சுபதத்தா, ஆரியகோசா, வசிஷ்டர், பிரம்மச்சாரி, சோமன், ஸ்ரீதரர், வீரபத்திரர் மற்றும் யசாஸ்
24மகாவீரர்11இந்திரபூதி கௌதமன், சுதர்மசுவாமி

கணாதரர் விருசப சென்

சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான மன்னர் ரிசபதேவரின் தலைமை மாணாக்கர் விருசப சென் ஆவார். ரிசபதேவரின் மறைவால், அவரது பட்டத்து மகன் சக்ரவர்த்தி பரதன் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தார். காணப்பட்டார். விருசப சென் பரதனுக்கு ஆறுதல் கூறினார். [6] பின் பரதன் தன்னிலை அடைந்து கணாதரர் விருசப சென்னின் கால்களைத் தொட்டு வணங்கி இராச்சியத்தை ஆளத் தொடங்கினார்.

அடிக்குறிப்புகள்

  1. Jain 2008, பக். 95.
  2. The Early Centuries of Jainism
  3. Jain Agama Literature
  4. Nagendra-Natha Vasu, The archaeological survey of Mayurabhanja, https://archive.org/details/archaeologicalsu01nage
  5. Jain 2008, பக். 126.
  6. Champat Rai Jain (1929). "XI. Ganadhara Vrisabha Sen". Risabha Deva - The Founder of Jainism. K. Mitra, Indian Press, Allahabad. பக். 189. https://archive.org/details/RisabhaDeva-TheFounderOfJainism.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.