கஞ்சக் கருவிகள்
கஞ்சக் கருவிகள் என்பது வெண்கலம் அல்லது ஐம்பொன்னால் வார்க்கப்படும் தாளம், கைமணி, சேகண்டி முதலியவைகள் ஆகும்.[1]
கஞ்சம் என்றால் வெண்கலம் என்று பொருள். தூய வெண்கலத்தால் தயாரிக்கப்படும் கஞ்சக்கருவிகளை, தகுந்த இலக்கண வரம்பறிந்து மிக நுணுக்கமாக இசைக்க வேண்டும்.
வகைகள்
- தாளம் - கஞ்சக்கருவிகளில் முதன்மையானது. இதனை சிங்கி, மணி, ஜால்ரா, எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. நாகஸ்வரம், மிருதங்கம், கடம், கஞ்சிரா, கொன்னக்கோல் போன்ற லய வாத்தியங்களையும் தாளம் தான் கட்டுப்படுத்துகிறது. ஓதுவார்கள், நட்டுவனார்கள், நாட்டுப்புற பாடகர்கள் போன்றோர் தாளக்கருவியை பயன்படுத்துகிறார்கள்.
- சேகண்டி: - கோயில்களில் குறிப்பாக சிவன் கோயில்களில் பூஜை நேரங்களிலும்; சுவாமி புறப்பாட்டின் போதும் சேகண்டி, சங்கொலியுடன் ஒலிக்கப்படுகிறது. மேலும் இறப்பு நிகழ்வுகளிலும் சேகண்டி ஒலி எழுப்பப்படுகிறது.
- கைமணி : - அனைத்து கோயில்களில்களிலும்; வீடுகளிலும் இறைவனை பூசிக்கும் போது ஒலி எழுப்பப் பயன்படுகிறது. கோயில்களில் பூசை நேரத்தை உணர்த்த எழுப்பப்படும் பெரிய வெண்கல மணியை, கைப்பிடிக்குள் அடங்கும்படி தயாரிப்பது கைமணியாகும்.
மேற்கோள்கள்
தொகு | தமிழிசைக் கருவிகள் |
---|---|
தோல் கருவிகள் | ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
|
நரம்புக் கருவிகள் | வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம்
|
காற்றுக் கருவிகள் | கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம்
|
கஞ்சக் கருவிகள் | தாளம் | சேகண்டி |
|
பிற | கொன்னக்கோல் | கடம் |
|
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.