க. துரைரத்தினம்
கதிரிப்பிள்ளை துரைரத்தினம் (Kathiripillai Thurairatnam, 10 ஆகத்து 1930 - 23 செப்டம்பர் 1995) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
க. துரைரத்தினம் K. Thurairatnam நாஉ | |
---|---|
பருத்தித்துறை தேர்தல் தொகுதி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1960–1983 | |
முன்னவர் | பொன். கந்தையா, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஆகத்து 10, 1930 |
இறப்பு | செப்டம்பர் 23, 1995 65) | (அகவை
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் சார்புகள் |
தமிழர் விடுதலைக் கூட்டணி |
படித்த கல்வி நிறுவனங்கள் | யாழ்ப்பாணக் கல்லூரி இலங்கைப் பல்கலைக்கழகம் இலங்கை சட்டக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
சமயம் | சைவ சமயம் |
இனம் | இலங்கைத் தமிழர் |
ஆரம்ப வாழ்க்கை
துரைரத்தினம் தனது ஆரம்பக் கல்வியை வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றார்.[1] எழுதுவினைஞராகத் தனது 17வது அகவையில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்று[1] 1960 வரையில் புலோலி இந்து ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞரானார்.[1]
அரசியலில்
இலங்கைத் தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி) ஆரம்பித்த காலத்திலேயே துரைரத்தினம் அக்கட்சியில் இணைந்தார். 1956 தேர்தலில் அக்கட்சியின் சார்பில் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.[2] எனினும் 1960 மார்ச் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] பின்னர் சூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4][5][6]
1972 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டமைப்பை நிறுவினர். 1977 தேர்தலில் துரைரத்தினம் கூட்டணி சார்பில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7] இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் கே. துரைரத்தினம் பருத்தித்துறை தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கையை இழந்தார்[8].
மேற்கோள்கள்
- சச்சி சிறீகாந்தா (10 ஆகத்து 2006). "K Thurairatnam.php?uid=1887 Random Thoughts on K. Thurairatnam The Point Pedro Federalist". இலங்கைத் தமிழச் சங்கம். பார்த்த நாள் 25 அக்டோபர் 2012.
- "1956%20GENERAL%20ELECTION.PDF Result of Parliamentary General Election 1956". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
- "1960 03 19%20GENERAL%20ELECTION.PDF Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
- "1960 07 20%20GENERAL%20ELECTION.PDF Result of Parliamentary General Election 1960-07-20". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
- "1965%20GENERAL%20ELECTION.PDF Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
- "1970%20GENERAL%20ELECTION.PDF Result of Parliamentary General Election 1970". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
- "Result of Parliamentary General Election 1977". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
- Wickramasinghe, Wimal (18 January 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". The Island, Sri Lanka. http://www.island.lk/2008/01/18/features11.html.