ஏ. பீம்சிங்
ஏ. பீம்சிங் (அக்டோபர் 15, 1924 - சனவரி 16, 1978) தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராவார். இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறனோடு விளங்கியவர்.
ஏ. பீம்சிங் | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 15, 1924 திருப்பதி, மெட்ராஸ் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 16 சனவரி 1978 53) சென்னை, தமிழ்நாடு, ![]() | (அகவை
மற்ற பெயர்கள் | பீம்பாய் |
பணி | திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர், கதையாசிரியர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1949–1978 |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் |
திரையுலக வாழ்க்கை
கிருஷ்ணன் - பஞ்சு என்றழைக்கப்பட்ட இரட்டை இயக்குநர்களிடம் ஒரு உதவித் தொகுப்பாளராகத் தனது தொழிலைத் துவக்கினார். பின்னர் உதவி இயக்குநர் என முன்னேறி, இயக்குநர் ஆனார். குடும்ப உறவுகள் பற்றிப் பேசும் படங்களை இயக்கினார். பெரும்பாலும் 'பா' என்ற எழுத்தை ஆரம்பமாகக் கொண்ட தலைப்புகளைத் தனது திரைப்படங்களுக்குச் சூட்டினார்.
இயக்கி & தயாரித்த தமிழ்த் திரைப்படங்கள்
- அம்மையப்பன் (1954)
- ராஜா ராணி (1956)
- பதி பக்தி (1958)
- திருமணம் (1958)
- பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் (1959)
- பாகப்பிரிவினை (1959)
- சகோதரி (1959)
- பொன்னு விளையும் பூமி (1959)
- படிக்காத மேதை (1960)
- களத்தூர் கண்ணம்மா (1960)
- பெற்ற மனம் (1960)
- பாசமலர் (1961)
- பாவ மன்னிப்பு (1961)
- பாலும் பழமும் (1961)
- பார்த்தால் பசி தீரும் (1962)
- படித்தால் மட்டும் போதுமா (1962)
- பந்த பாசம் (1962)
- செந்தாமரை (1962)
- பார் மகளே பார் (1963)
- பச்சை விளக்கு (1964)
- பழநி (1965)
- சாந்தி (1965)
- பாலாடை (1967)
- பாதுகாப்பு (1970)
- பாதபூஜை (1974)
- கணவன் மனைவி (1976)
- சில நேரங்களில் சில மனிதர்கள் (1976)
- நீ வாழவேண்டும் (1977)
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978)
- கை பிடித்தவன் (1978)
- இறைவன் கொடுத்த வரம் (1978)
- கருணை உள்ளம் (1978)
தயாரித்து வசனம் எழுதிய திரைப்படம்
- சாது மிரண்டால் (1966)
- ஆலயம் (1967)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.